முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூரில் 54 புதிய திட்டப் பணிகள் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்: 9.621 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
CM-2 2022-11-29

அரியலுார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ. 221.80 கோடியில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 31.38 கோடியில்  54 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து  9,621 பயனாளிகளுக்கு ரூ. 26.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அரியலுாரில் நேற்று நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெரம்பலுார் மாவட்டத்தில் மொத்தம் 221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், இவ்விழாவில்   பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,      உயர்கல்வித் துறை,   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 9,621 பயனாளிகளுக்கு 26 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

இந்த விழாவில், அமைச்சர்கள்  கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இரகுபதி,  எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன், பிரபாகரன், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து