எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ம் தேதி காஷ்மீர் சென்று அடைந்தார். அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர்.
சோனியாகாந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின் போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார். பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை காஷ்மீர் போலீசார் மறுத்து இருந்தனர். பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்தது. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல்காந்தியின் பாத யாத்திரை புல்வாமா மாவட்டம் அவந்தி போராவில் நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது.
ராகுல்காந்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, அவரது மகள் இல்டிஜா முப்தி மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராமானோர் பங்கேற்றனர். ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா லேத்போரா பகுதியில் நடைபயணத்தில் இணைந்தார்.
நேற்று முன்தினம் ராகுல்காந்தியை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நடைப்பயணம் தொடங்கிய இடத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். புல்வாமாவில் கடந்த 2019-ல் தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 40 பேர் பலியான இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்ரீநகரை நோக்கி அவர் நடைபயணத்தை தொடர்ந்தார்.
இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாத யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த கட்சி பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தியின் நடை பயண நிறைவு விழாவில் பங்கேற்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. சில எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக புறக்கணிக்கின்றன. ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிறைவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,
இன்று ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவு விழாவின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள் என்று கூறினார்.
ராகுல் காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் 145 நாட்கள் மொத்தம் 3,970 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
தொழில்நுட்ப வலிமையால் ஆபரேஷன் சிந்தூர் கொள்கை : ராணுவ தலைமை தளபதி பெருமிதம்
01 Nov 2025போபால் : ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார்.
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
1040-வது சதய விழா: மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
01 Nov 2025சென்னை : மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
01 Nov 2025மதுரை : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: திண்டுக்கல் சீனிவாசன்
01 Nov 2025மதுரை : எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
-
இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.
-
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம் : ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு
01 Nov 2025கொச்சி : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
-
ஆந்திர பிரதேசத்தில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் சாலைகள், மேம்பாலங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
01 Nov 2025சென்னை : நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் 2 சாலை மேம்பாலங்களை தமிழ்நாடு முதல்வர
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன், பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு 3,740 கோவில்களில் கும்பாபிஷேகம் : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
01 Nov 2025சென்னை : பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
01 Nov 2025சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும்,வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ல
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.


