முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      இந்தியா
India-Corona 2023-01-08

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. 

மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 88 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 801 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,817 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இது நேற்று முன்தினத்தை விட 25 அதிகமாகும். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,745 ஆக நீடிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து