இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இஸ்தான்புல் : துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் காசினா டெட் என்ற பகுதி உள்ளது. மிகச் சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி- சிரியா எல்லையில் அமைந்துள்ளது. துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக இது பதிவானது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டோடியது. பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நீண்ட நேரம் அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் உயிர் பயத்தில் ரோடுகளில் நின்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. அடுக்கு மாடி கட்டிடங்களும் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. கட்டிடங்களும் கடுமையான சேதம் அடைந்தது. பல கட்டிடங்கள் தரைமட்டமானது. அதிகாலை நேரம் என்பதால் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பொது மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் பலர் என்ன நடந்தது என தெரியாமல் தூக்கத்திலேயே உயிரிழந்து விட்டனர். நில நடுக்க பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசினா டெட் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானது. இதனால் கட்டிடங்கள் ஆடியது. பொது மக்கள் வீடுகளை விட்டு அதிர்ச்சியில் வெளியே ஓடி வந்தனர். துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் பதற்றம் உருவானது. துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி, அதியமான், மலாட்டியா, தியார்படுர் உள்ளிட்ட 8 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அந்நாட்டு அதிபர் தயாயில் கிர்டோசன் பாதிக்கப்பட்ட மாகாணங்களை சேர்ந்த கவர்னர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் தொடர்பாகவும், அதிகாரிகள் மீட்பு பணிகளை முழு வீச்சில் செல்படுத்துமாறும் அறிவுறுத்தினார். துருக்கியை தொடர்ந்து பக்கத்து நாடான சிரியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 230 பேர் வரை இறந்து விட்டனர். 516 பேர் படுகாயம் அடைந்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நடந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,300-ஆக அதிகரித்துள்ளது.
உருக்குலைந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் இன்னும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரபடுத் தப்பட்டு உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இடிபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்ட பிறகுதான் எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும். மீட்பு பணி நடந்து வரும் கட்டிடங்கள் முன்பு உயிர் தப்பியவர்கள் சோகத்துடன் நின்று உள்ளனர். தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கதி என்ன என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். தங்கள் கண்முன் வீடுகள் இடிந்து விழுந்ததை பார்த்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சி அளிக்கிறது. தீயணைப்பு துறை மற்றும் போலீசாரின் மீட்பு பணியில் பொதுமக்க ளும் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நில நடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. லெபனான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் 40 நொடிகள் நீடித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது. படுக்கையில் படுத்திருந்தவர்கள் கீழே உருண்டு விழுந்தனர். 2 நாடுகளை உலுக்கிய நில நடுக்கத்தால் தெற்கு இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்குவதும், இடிந்து கிடக்கும் கட்டிடங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கி நாட்டில் நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 1999-ம் ஆண்டு பூகம்பத்திற்கு 17 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். அந்த சமயம் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பூகம்பத்தில் 40 பேரும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 114 பேரும் இறந்தனர். அதன்பிறகு நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 180-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கறேன். கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 3 days 12 hours ago |
கீரை ஆம்லெட்![]() 6 days 11 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 3 days ago |
-
டுவிட்டரில் புதிய விதிகளை அறிவித்த எலான் மஸ்க்
28 Mar 2023வாஷிங்டன் : டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15-ம் தேதி முதல் வெரிபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்துள்ளார். இத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 28-03-2023.
28 Mar 2023 -
சவுதியில் பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலி
28 Mar 2023ரியாத் : சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலியாகினர்.
-
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுகளை சார்ந்தது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
28 Mar 2023கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு, மாநில அரசுகளை சார்ந்தது என்ற தகவல் மக்களவையில் வெளியாகி உள்ளது.
-
பா.ஜ.க.வினர் கடுமையாக போராட தயாராக வேண்டும் : பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்
28 Mar 2023புதுடெல்லி : கடுமையாக போராட தயாராகுங்கள் என்று பாராளுமன்ற பா.ஜ.க. கூட்டத்தில் பா.ஜ.க.வினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
-
அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: ரூ. 15 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Mar 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவி
-
6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம்
28 Mar 2023மதுரை : தமிழக அரசில் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு
-
7-வது பொதுச்செயலாளர்: அ.தி.மு.க.வின் அதிகாரம் மிக்க பதவியில் எடப்பாடி பழனிசாமி
28 Mar 2023அ.தி.மு.க.வில் அதிகாரம் மிக்க பெரிய பதவியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.
-
எனது ஆட்டத்திறனுக்கு பிராட்மேனுக்கும் பங்கு : சச்சின் டெண்டுல்கர் உருக்கம்
28 Mar 2023மும்பை : எனது கிரிக்கெட் ஆட்டத்திற்கு பிராட்மேனுக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், எனக்கு நம்பிக்கை கொடுத்தது அவரின் அறிவுரைகள்தான் என்றும்
-
காலில் காயம் காரணமாக ஐ.பி.எல்.லில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார்: மைக்கேல்
28 Mar 2023சென்னை : காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். தொடரில் பந்து வீச மாட்டார் என்று சி.எஸ்.கே.
-
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மேல்முறையீடு: இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணை
28 Mar 2023அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ்.
-
டெட் தாள் 2- தேர்வு முடிவுகள் வெளியீடு
28 Mar 2023சென்னை : டெட் தாள் 2- தேர்வு முடிவுகளை ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி: அன்புமணி வாழ்த்து
28 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 23-ல் துவக்கம் : மே. 02-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது
28 Mar 2023மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டம் தற்காலிக நிறுத்தம் : இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்
28 Mar 2023ஜெருசலேம் : புதிய நீதித்துறை சிர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார்.
-
ஷேவாக்கை நினைவு கூர்ந்த சி.எஸ்.கே.
28 Mar 2023சென்னை : புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008-ம் ஆண்டு நேற்றை தினத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக
-
உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு : மத்திய அரசு தகவலால் மகிழ்ச்சி
28 Mar 2023புதுடெல்லி : உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கொலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலை உள்ளது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
28 Mar 2023சென்னை : பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
ரூ.2 ஆயிரத்து 753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் தகவல்
28 Mar 2023சென்னை : ரூ.2 ஆயிரத்து 753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று துவங்குகிறது : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
28 Mar 2023பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
எம்.பி.பி.எஸ். சீட்வாங்கி தருவதாக ஏமாற்றிய ஜெமினிகணேசன் பேரனின் மனைவி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
28 Mar 2023சென்னை : எம்.பி.பி.எஸ்.
-
மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் இதுவரை 258.06 கோடி பயண நடைகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
28 Mar 2023தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன.
-
மெஸ்ஸியை கவுரவித்த கால்பந்து கூட்டமைப்பு
28 Mar 2023கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
-
சபரிமலையில் இருந்து திரும்பிய போது தமிழக அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து 64 பேர் காயம்
28 Mar 2023பத்தனம்திட்டா : கேரளாவில் சபரிமலையில் இருந்து திரும்பிய போது தமிழக அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து 64 பேர் காயமடைந்தனர்.
-
ராகுல் காந்தி குடியிருக்க எனது பங்களாவை காலி செய்ய தயார்: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
28 Mar 2023ராகுல் காந்தி வசிக்க தனது பங்களாவை தர தயார் என்று காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.