எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு ரன்ரேட் மிகப்பெரிய பங்காற்றும் என்பதால் அந்த அணிகளில் எந்த 2 அணிகளும் முன்னேற வாய்ப்பு உள்ளது.
இந்தியா முதல் தகுதி...
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைய இருக்கின்றன. இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிககா 8-ல் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இங்கி.,-வங்கதேசம்...
வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. ஆஸ்திரேலியா (7-ல் 5 வெற்றி), நியூசிலாந்து (8-ல் 4 வெற்றி), பாகிஸ்தான் (8-ல் 4 வெற்றி), ஆப்கானிஸ்தான் (7-ல் 4 வெற்றி), இலங்கை (7-ல் 2 வெற்றி), நெதர்லாந்து (7-ல் 2 வெற்றி) இந்த ஆறு அணிகள் அரையிறுதி வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
ஆஸ்திரேலியா அணி...
தற்போது 10 புள்ளிகளுடன 3-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டும்.
நியூசிலாந்து (4 வெற்றி)...
நியூசிலாந்து அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட முடியாது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி, தோல்வி முடிவை பொறுத்து தகுதி பெற வாய்ப்புள்ளது. நியூசிலாந்து தோல்வியடைந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து அணிகள் மீதமுள்ள போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.
பாகிஸ்தான் (4 வெற்றி)...
பாகிஸ்தான் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய நியூசிலாந்து அணியின் நிலையை போன்றதுதான். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதுடன், ரன்ரேட்டில் நியூசிலாந்தை விட அதிகம் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்திடம் தோல்வியடைந்தால் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை அணிகள் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்.
ஆப்கான் (4 வெற்றி)....
ஆப்கானிஸ்தான் தற்போது 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெற்றுவிடும். ஆனால் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி பெறுவது அவர்களுக்கு கடினமான ஒன்று. ஆப்கானிஸ்தான் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரிய வித்தியாசத்தில தோல்வியை சந்திக்க வேண்டும்
இலங்கை (2 வெற்றி)....
4 புள்ளிகளுடன் இருக்கும் இலங்கை வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று மற்ற அணிகள் மிகப்பெரிய அளவில் தோல்விகளை சந்திக்க வேண்டும். ஒரு போட்டியில் தோற்றாலும் கூட வெளியேற வேண்டியதுதான்.
நெதர்லாந்து (2 வெற்றி)...
4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து இலங்கையை போன்ற சூழ்நிலைதான். இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டும். இரண்டு அணிகளுக்கும் எதிராக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவது சாத்தியமற்றதாகும். எப்படி இருந்தாலும் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு ரன்ரேட் மிகப்பெரிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
01 Dec 2025சென்னை : சென்னை புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
-
ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்
01 Dec 2025கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து எதிர்பாராமல் உயிரிழக்கும் ரவுடி சூப்பர் சுப்பராயனை, அவரது மகன் சுனில் தேடி வருகிறார்.
-
அஞ்சான் (ரீ எடிட்) திரை விமர்சனம்
01 Dec 2025மும்பை தாதா சூர்யா, அவரது நண்பர் வித்யுத்.
-
மீண்டும் உச்சத்தை தொட்ட ஒரு சவரன் தங்கம் விலை..! ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
01 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
01 Dec 2025புது டெல்லி, சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவ
-
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்க குளங்கள் அமைக்க வேண்டும்: ஐகோர்ட்
01 Dec 2025சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை ப
-
வெங்கட் பிரபு வெளியிட்ட அனலி பர்ஸ்ட் லுக்
01 Dec 2025சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், தினேஷ் தீனா இயக்கியுள்ள படம் அனலி. சிந்தியா லூர்டே முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு
01 Dec 2025சென்னை, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
-
மகர விளக்கு சீசன்:கடந்த 15 நாட்களில் சபரிமலையில் ரூ.92 கோடி வருவாய்
01 Dec 2025திருவனந்தபுரம், மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
துல்கர் சல்மானின் 40-வது படம் ஐ அம் கேம்
01 Dec 2025துல்கர் சல்மானும், ஜோம் வர்கீசும் இணைந்து தயாரிக்கும் படம் ஐ அம் கேம்.
-
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
01 Dec 2025கொழும்பு, இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
-
55.3 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் புதிய உச்சம் தொட்டது
01 Dec 2025சென்னை, 55.3 சதவீத மதிப்பெண்களுடன் எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
-
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசல்: 6 பேர் திடீர் மயக்கம்
01 Dec 2025தஞ்சாவூர், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசரில் சிக்கி 6 பேர் மயக்கமடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-12-2025.
01 Dec 2025 -
பீகார் தோல்வியை மனதில் வைத்து கொண்டு அமளியில் ஈடுபட கூடாது: எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் வேண்டுகோள்
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பீகார் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து கொண்டு எதிர்க்கட்சியினர் அமளியி
-
தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பார்லி., மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கேக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
ப்ரைடே திரை விமர்சனம்
01 Dec 2025நாயகன் அனிஷ் மாசிலாமணியும் கே.பி.ஒய் தீனாவும் சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கும் தருவாயில் தீனாவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு
01 Dec 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-
ரோஜா மல்லி கனகாம்பரம் - படப்பிடிப்பு நிறைவு பெற்றது
01 Dec 2025மாயாண்டி குடும்பத்தார் படத்தின் தயாரிப்பாளரான யுனைடெட் ஆர்ட்ஸ் எஸ். கே. செல்வகுமார் தயாரிப்பில், கே. பி. ஜெகன் இயக்கத்தில், உருவாகி வரும் படம் ரோஜா மல்லி கனகாம்பரம்.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி புதிய மனுத்தாக்கல்
01 Dec 2025ராஜஸ்தான் : ஆசாராம் பாபுவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
-
பீகார் சட்டசபை சபாநாயகரை தேர்வு செய்ய இன்று தேர்தல் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
01 Dec 2025பாட்னா, பீகார் சட்டப்பேரவை கூடியதை தொடர்ந்து புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகர் நரேந்திர நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 151 ஆக உயர்வு
01 Dec 2025ஹாங்காங், ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 151 பேர் ஆக உயர்ந்துள்ளது.
-
உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளர் இந்தியா: ஜனாதிபதி முர்மு பெருமிதம்
01 Dec 2025புதுடெல்லி, உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு, விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய
-
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியானது ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிக்கிறது பார்லி.யில் பிரதமர் மோடி பேச்சு
01 Dec 2025புது தில்லி, சாதாரண பின்னணியில் இருந்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் உயர்ந்தது ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்த
-
திருப்பதியில் பலத்த மழை
01 Dec 2025திருப்பதி : திருப்பதியில் கனமழை காரணமாக பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.


