முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறகன் விமர்சனம்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      சினிமா
Sirakan-review 2024-04-22

Source: provided

அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் மகனை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜீவா ரவியும் அவருடன் இருந்த ஜூனியர் வழக்கறிஞர் சானுவும் கொலை செய்யப்படுகிறார்கள். இருவரின் கொலை வழக்கு தொடர்பாக பிரபல வழக்கறிஞர் கஜராஜ் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜிடி கஜராஜை விசாரிக்கையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.

இதையடுத்து, மூன்று கொலைகள் பற்றி விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் வினோத், அவ்வபோது மறைந்த தனது தங்கையின் நினைவால் தடுமாறுகிறார். இப்படி பல கதாபாத்திரங்களை சுற்றி வரும் இந்த கொலை வழக்குகளின் பின்னணி என்ன?, எதற்காக இந்த கொலைகள் நடந்தது?, கொலையாளி யார்? என்பதை பல திருப்பங்களோடு சொல்வது தான் ‘சிறகன்’.

சுயநினைவின்றி கோமாவில் இருக்கும் தனது மகளின் இத்தகைய நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் கஜராஜ், தனது வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியை நடிப்பிலும் வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். மகளின் நிலையைப் பார்த்து கோபம் கொண்டாலும் தனது செயலில் நிதானத்தை வெளிப்படுத்தி அவர் காட்டும் புத்திசாலித்தனம் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில், ‘சிறகன்’ சிறகடித்து பறக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து