எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரனை த.மா.கா.வில் இருந்தும், மலர்க்கொடியை அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கி முறையே ஜி.கே. வாசன், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் அயனாவரத்தில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர்.
கடந்த ஆண்டு பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கொலை நடந்த அன்றைய தினம் இரவே கைது செய்யப்பட்டனர்.
11 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடந்தது. அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது பதிலுக்கு தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் திருவேங்கடம் உயிரிழந்தார். இதர 10 கொலையாளிகளும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கொலையாளிகளுக்கு ரூ,50 லட்சத்தில் இருந்து ரூ, ஒரு கோடி வரை பணம் கைமாறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. கொலையாளி அருளின் வங்கி கணக்கில் மட்டும் ரூ,50 லட்சம் போடப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மேலும், கொலையாளி அருளோடு தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து அவரது செல்போன் அழைப்பை வைத்து போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெண் வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களில் கைதான பெண்ணின் பெயர் மலர்கொடி ( 45) என்றும், சென்னை பாடர்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மலர்கொடி வக்கீலாக பணியாற்றுகிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கைதானவரில் மற்றொருவர் பெயர் ஹரிஹரன் என்றும், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அவரும் வக்கீல் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர திருநின்றவூரை சேர்ந்த சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைதான அருளின் அக்காள் மகன் ஆவார்.
கொலையாளிகளுக்கு வாகனங்களை இவர் ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. கைதான 2 வக்கீல்களும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. மகளிரணி செயலாளர் அஞ்சலை என்பவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மாநில மாணவரணி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட கே.ஹரிஹரன், இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இன்று(நேற்று) முதல் த.மா.கா வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் மலர்க்கொடி, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நேற்று நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
1040-வது சதய விழா: மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
01 Nov 2025சென்னை : மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
01 Nov 2025மதுரை : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
தொழில்நுட்ப வலிமையால் ஆபரேஷன் சிந்தூர் கொள்கை : ராணுவ தலைமை தளபதி பெருமிதம்
01 Nov 2025போபால் : ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார்.
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
01 Nov 2025சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும்,வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ல
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: திண்டுக்கல் சீனிவாசன்
01 Nov 2025மதுரை : எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
-
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம் : ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு
01 Nov 2025கொச்சி : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
ஆந்திர பிரதேசத்தில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன், பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.


