எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, நாட்டில் பாட்னா, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதிகளைச் தவிர முழுக்க முழுக்க நீட் தேர்வில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால் மறுதேர்வுக்கு உத்தரவிடவில்லை என்று சுப்ரீம் கோர்ட் விளக்கமளித்துள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் சிக்கிய இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) முழுமையாக ரத்து செய்துவிட்டு, மறு தோ்வு நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அந்த உத்தரவுக்கான விளக்கத்தை நேற்று அளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவினால், நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டு, 23.33 லட்சம் போ் எழுதிய நீட் தோ்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்பதோடு, அந்த மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்புகள் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான பணிகள் நாடு முழுவதும் தொடங்கியிருக்கின்றன.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீட் தேர்வின்போது காலதாமதத்தைக் காரணம் காட்டி 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டது. பின்னர், கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட்டு, அதில் பெற்ற மதிப்பெண்களே இறுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த மையங்களில் வினாத்தாள் கசிவு, உத்தர பிரதேச தோ்வு மையத்தில் தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் வினாத்தாள் பதிவேற்றம், கருணை மதிப்பெண் என்ற பெயரில் குறிப்பிட்ட சில தோ்வா்களுக்கு தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) கூடுதல் மதிப்பெண் வழங்கியது என நிகழாண்டு நீட் தேர்வு பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியிருந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது.
இது குறித்து நேற்று விளக்கம் அளித்திருக்கும் சுப்ரீம் கோர்ட், மாணவர்களின் நலனுக்கு ஒத்துவராத வேலைகளில் ஈடுபடுவதை தேசிய தேர்வு முகமை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துவிட்டது. ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்களைக் கொடுத்த தேசிய தேர்வு முகமையால், 44 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுக்க முடிந்திருப்பதையும் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியிருக்கிறது.
அதாவது, நீட் தோ்வில் இடம்பெற்ற அணு மற்றும் அதன் தன்மைகள் தொடா்பான கேள்விக்கு, வினாத்தாளில் இரண்டு சரியான விடைகள் இடம்பெற்றிருந்தாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘வினாத்தாளில் அந்தக் கேள்விக்கு ஒரே ஒரு சரியான விடையே இடம்பெற்றிருந்தது; இரண்டு விடைகள் இடம்பெறவில்லை’ என்ற தில்லி ஐஐடி நிபுணா் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்கிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடையின் அடிப்படையில், நீட் தோ்வு முடிவை என்டிஏ மறுமதிப்பீடு செய்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்நிலை நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. எதிர்காலத்தில், நீட் தேர்வில் முறைகேடு இல்லாமல் நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் இந்த குழு ஆய்வு செய்யும் என்று கூறப்படுள்ளது. இந்தக் குழுவின் இறுதி அறிக்கை செப்டம்பர் 30ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்த்தில் மத்திய கல்வித் துறை அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட வேண்டும், இந்த குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஒரு மாத காலத்துக்குள் நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய கல்வித்துறை தொடங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை
11 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உ
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி திடீர்துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் காயம்
11 May 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.