எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வயநாடு : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3 நாட்களுக்கு இலவச சேவையை வழங்குகிறது
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தரப்பினர் வயநாட்டிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில், வயநாடு மாவட்டம் மற்றும் நிலம்பூர் தாலுக்காவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மூன்று நாட்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டு வசதியை வழங்குவதாக பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
அத்துடன், பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்.களையும் பெறுவார்கள். மேலும் சூரல்மாலா மற்றும் முண்டக்கை கிராமங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவச மொபைல் இணைப்பை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது.
சூரல்மாலாவில் உள்ள ஒரே மொபைல் டவர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமானது. சூரல்மலை மற்றும் மேப்பாடி மொபைல் டவர்கள் போர்க்கால அடிப்படையில் 4ஜி-க்கு மாற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 நாட்கள் இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


