எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : ஐ.பி.எல். 2025 சீசனில் விராட் கோலிதான் பெங்களூரு அணியின் கேப்டன் என இந்திய முன்னணி வீரர் அஸ்வின் உறுதிப்படுத்தியுள்ளார்.
மெகா ஏலம்...
ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல், சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்களை விடுவித்தது. ஏலத்தின்போதும் இவர்கள் மீது ஆர்வம் காட்டாத பெங்களூரு அணி நிர்வாகம் ஆர்டிஎம் கார்டை ஸ்வப்னில் சிங்கிற்கு பயன்படுத்தியது ஆச்சரியமாக அமைந்தது.
அடுத்த கேப்டன் ?
மொத்தத்தில் அடுத்த சீசனுக்கான பெங்களூரு அணியில் 22 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆனால் அணி நிர்வாகம் கேப்டன்ஷிப் அனுபவமுள்ள எந்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மெகா ஏலத்திற்கு முன்பாக நிர்வாகம் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அஸ்வின் உறுதி...
இந்நிலையில் இந்திய முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிதான் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இம்முறை பெங்களூரு அணி மிகச்சிறப்பாக ஏலத்தில் கலந்து கொண்டு அருமையான வீரர்களை வாங்கியுள்ளதாக கருதுகிறேன். அணியின் பேலன்ஸ் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் சரியான முறையில் பணத்தை பயன்படுத்தி மிகச்சரியான வீரர்களை வாங்கி இருக்கிறார்கள். இருப்பினும் ஆர்.சி.பி அணியில் கேப்டன்சி அனுபவம் உடைய ஒரு வீரரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதன் காரணமாக நிச்சயம் விராட் கோலிதான் அடுத்த ஐபிஎல் தொடரில் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் தி.மு.க. உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் ஓ.பி.எஸ்..!
27 Feb 2026தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.
-
சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் கதறி அழுத அரவிந்த் கெஜ்ரிவால்
27 Feb 2026டெல்லி, சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கதறி அழுத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விவாகரத்து கோரி விஜய் மனைவி கோர்ட்டில் மனு வருகிற ஏப்ரல் 20-ம் தேதி விசாரணை
27 Feb 2026செங்கல்பட்டு, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வருகிற 4-ம் தேதி திருமண வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நேரில் அழைப்பு
27 Feb 2026ஐதராபாத், வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
-
தமிழகத்துக்கு தேர்தல் நேரத்தில் கூட மத்திய அரசு நிதி தரவில்லை: கோவை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Feb 2026கோவை, கோவை, மதுரைக்கு மெட்ரோவுக்கு பிரதமர் மோடி ஏன் அதுமதி தரவில்லை.
-
அனைத்து உண்மைகளும் வெளிப்படும் வரை நெருக்கடிகளை உறுதியோடு எதிர்கொண்ட கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு பாராட்டுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
27 Feb 2026சென்னை, உண்மை வெளிப்படும் வரை அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவுக்கு எனது பாராட்டுகள் என்
-
கெஜ்ரிவால் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ. உடனடியாக மேல்முறையீடு
27 Feb 2026புதுடெல்லி, மதுபானக் கொள்கையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சி.பி.ஐ.


