எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்த ஐபிஎல் சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை 399 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 7,566 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 28 அரைசதங்களுடன் 527 பவுண்டரிகள், 346 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
சென்னையில் சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்.25) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் தனது 400-ஆவது டி20 போட்டியில் விளையாடினார். இதற்கு முன்பாக இந்தியாவின் சார்பில் ரோஹித் சர்மா (456), விராட் கோலி (407), தினேஷ் கார்த்திக் (412) 400க்கும் அதிகமான டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________________
சிந்துவின் நெகிழ்ச்சி பதிவு
இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸை அணிகள் பெங்களூரில் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 20 ஓவா்களில் 205/5 ரன்கள் சோ்க்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 194/9 ரன்களே எடுத்தது தோல்வியுற்றது.
இந்தப் போட்டியை நேரில் கண்டுகளித்த பி.வி.சிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது: மூளை சொல்கிறது ஆரஞ்சு ஆர்மி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்). ஆனால், எனது இதயம் புதிய நகரம், புதிய அணிக்கு எனக் கூறுகிறது. ஈ சாலா கப் நம்தே. பின் குறிப்பு: ஆர்.சி.பி. நீங்கள் உங்களது அதிர்ஷ்ட தேவதையை கண்டுபிடித்துவிட்டீர்கள் எனக் கூறியுள்ளார். பி.வி.சிந்து ஹைதராபாதைச் சேர்ந்தவர். இருப்பினும் ஆர்.சி.பி. அணிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது ஆர்.சி.பி. ரசிகர்களிடையே ஆதரவு பெற்றுள்ளது. மேலும். தன்னைத் தானே அதிர்ஷ்ட தேவதை எனவும் கூறியுள்ளார்.
____________________________________________________________________________________________
பி.எஸ்.எல். ஒளிபரப்புக்கு தடை
ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகள ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்துப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு தளமான பேன்கோட் செயலில் அதன் வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து பேன்கோட் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஹல்காமில் நடந்த வேதனையளிக்கும் சம்பவம் மற்றும் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். பேன்கோடை சோனி நிறுவனமும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை ஒளிபரப்பி வருகிறது. இருந்தாலும், இதைப் பற்றி எந்தத் தகவலையும் சோனி நிறுவனம் வெளியிடவில்லை.
____________________________________________________________________________________________
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது: தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியர்களான நம் அனைவரையும் பாதித்துள்ளது.
குற்றவாளிகள் அனைவருக்கும், அவர்களை ஆதரித்த அனைவருக்கும் (பயங்கரவாதிகள்), அவர்களைக் கையாண்ட அனைவருக்கும் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இந்த சண்டை எல்லாம் என்ன சாதித்தது? கடந்த 78 ஆண்டுகளாக, ஒரு மில்லிமீட்டர் நிலம் கூட கைமாறவில்லை இல்லையா? எனவே நாம் ஏன் அமைதியாக வாழ்ந்து, நம் நாட்டை வலிமையாக்கக் கூடாது? அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்தார்.
____________________________________________________________________________________________
ஹேசில்வுட்டுக்கு பிளவர் புகழாரம்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்.சி.பி. த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுதான். சிறப்பாக பந்து வீசிய ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளவர், ஹேசில்வுட்டை புகழந்துள்ளார்.
இது தொடர்பாக ஆண்டி பிளவர் கூறுகையில் "ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுத்தக்கூடியவர். அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். எந்தவொரு வடிவிலான போட்டியிலும் நெருக்கடியான நிலையில் சிறந்தவர். அவர் சிறந்த லெந்த் பவுலிங்கிற்கு பெயர் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவருக்கு சிறந்த ஆல்-ரவுண்ட் திறமைகள் உள்ளன. இந்த சீசனில் புவி சிறப்பாக பந்து வீசி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக யாஷ் தயால் அட்டகாசமாக பந்து வீசினார். குறிப்பாக கடைசி ஓவரில் அசத்தினார். இவ்வாறு ஆண்டி பிளவர் தெரிவித்தார்.
____________________________________________________________________________________________
நிச்சயம் வெல்வோம்: பிளெமிங்
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான புளூ பிரிண்டை ஆர்.சி.பி. அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது. ஒருவேளை நாங்கள் தகுதிபெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம். அடுத்து வரும் அத்தனைப் போட்டிகளையும் எங்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
பாகிஸ்தான் குண்டுமழை.. ஆப்கானிஸ்தானில் 133 பேர் பலி
27 Feb 2026லாகூர், தாலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது இதில் 133 பேர் க
-
அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் தி.மு.க. உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் ஓ.பி.எஸ்..!
27 Feb 2026தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.
-
தி.மு.க.வில் இணைந்த ஓ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. கண்டனம்
27 Feb 2026சென்னை, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க.
-
எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தென்கொரியாவை அழிப்போம்: வடகொரியா தலைவர் எச்சரிக்கை
27 Feb 2026பியாங்யாங், தென்கொரியா எங்களின் தீராத எதிரி நாடு. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இனி எதுவுமே இல்லை. ஒரே நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
-
சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் கதறி அழுத அரவிந்த் கெஜ்ரிவால்
27 Feb 2026டெல்லி, சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கதறி அழுத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு
27 Feb 2026பகிர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் பங்குச் சந்தைகள் நேற்று (பிப். 27) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றுள்ளன.
-
மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: வாபஸ் பெற்றார் ராமதாஸ்
27 Feb 2026சென்னை, மாம்பழ சின்னம் தொடர்பாக அன்புமணி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
-
ரஷ்யா செல்கிறார் பாக். பிரதமர்
27 Feb 2026லாகூர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷ்யாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
27 Feb 2026பென்னாகரம், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
விவாகரத்து கோரி விஜய் மனைவி கோர்ட்டில் மனு வருகிற ஏப்ரல் 20-ம் தேதி விசாரணை
27 Feb 2026செங்கல்பட்டு, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.- ஆப்கானிஸ்தானுக்கு சீனா அழைப்பு
27 Feb 2026பெய்ஜிங், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
-
வருகிற 4-ம் தேதி திருமண வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நேரில் அழைப்பு
27 Feb 2026ஐதராபாத், வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
-
தமிழகத்துக்கு தேர்தல் நேரத்தில் கூட மத்திய அரசு நிதி தரவில்லை: கோவை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Feb 2026கோவை, கோவை, மதுரைக்கு மெட்ரோவுக்கு பிரதமர் மோடி ஏன் அதுமதி தரவில்லை.
-
அனைத்து உண்மைகளும் வெளிப்படும் வரை நெருக்கடிகளை உறுதியோடு எதிர்கொண்ட கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு பாராட்டுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
27 Feb 2026சென்னை, உண்மை வெளிப்படும் வரை அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவுக்கு எனது பாராட்டுகள் என்
-
நேபாள பொதுத் தேர்தல்: 3 நாட்கள் இந்திய எல்லை மூடல்
27 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், மார்ச் 2 முதல் 3 நாள்களுக்கு இந்திய-நேபாள எல்லை மூடப்படுகிறது.
-
கெஜ்ரிவால் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ. உடனடியாக மேல்முறையீடு
27 Feb 2026புதுடெல்லி, மதுபானக் கொள்கையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சி.பி.ஐ.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
27 Feb 2026மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியிலிருந்து 87.79 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
-
5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தில் நிலநடுக்கம்
27 Feb 2026டாக்கா, வங்கதேச நாட்டில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆறுமுக நயினார் பச்சை சாத்தி.
- மதுரை இம்மையிலும் நன்மை தருவார், காரமடை அரங்கநாதர் கோவில்களில் திருக்கல்யாணம்
-
இன்றைய நாள் எப்படி?
27 Feb 2026


