எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்த ஐபிஎல் சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை 399 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 7,566 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 28 அரைசதங்களுடன் 527 பவுண்டரிகள், 346 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
சென்னையில் சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்.25) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் தனது 400-ஆவது டி20 போட்டியில் விளையாடினார். இதற்கு முன்பாக இந்தியாவின் சார்பில் ரோஹித் சர்மா (456), விராட் கோலி (407), தினேஷ் கார்த்திக் (412) 400க்கும் அதிகமான டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________________
சிந்துவின் நெகிழ்ச்சி பதிவு
இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸை அணிகள் பெங்களூரில் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 20 ஓவா்களில் 205/5 ரன்கள் சோ்க்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 194/9 ரன்களே எடுத்தது தோல்வியுற்றது.
இந்தப் போட்டியை நேரில் கண்டுகளித்த பி.வி.சிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது: மூளை சொல்கிறது ஆரஞ்சு ஆர்மி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்). ஆனால், எனது இதயம் புதிய நகரம், புதிய அணிக்கு எனக் கூறுகிறது. ஈ சாலா கப் நம்தே. பின் குறிப்பு: ஆர்.சி.பி. நீங்கள் உங்களது அதிர்ஷ்ட தேவதையை கண்டுபிடித்துவிட்டீர்கள் எனக் கூறியுள்ளார். பி.வி.சிந்து ஹைதராபாதைச் சேர்ந்தவர். இருப்பினும் ஆர்.சி.பி. அணிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது ஆர்.சி.பி. ரசிகர்களிடையே ஆதரவு பெற்றுள்ளது. மேலும். தன்னைத் தானே அதிர்ஷ்ட தேவதை எனவும் கூறியுள்ளார்.
____________________________________________________________________________________________
பி.எஸ்.எல். ஒளிபரப்புக்கு தடை
ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகள ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்துப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு தளமான பேன்கோட் செயலில் அதன் வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து பேன்கோட் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஹல்காமில் நடந்த வேதனையளிக்கும் சம்பவம் மற்றும் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். பேன்கோடை சோனி நிறுவனமும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை ஒளிபரப்பி வருகிறது. இருந்தாலும், இதைப் பற்றி எந்தத் தகவலையும் சோனி நிறுவனம் வெளியிடவில்லை.
____________________________________________________________________________________________
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது: தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியர்களான நம் அனைவரையும் பாதித்துள்ளது.
குற்றவாளிகள் அனைவருக்கும், அவர்களை ஆதரித்த அனைவருக்கும் (பயங்கரவாதிகள்), அவர்களைக் கையாண்ட அனைவருக்கும் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இந்த சண்டை எல்லாம் என்ன சாதித்தது? கடந்த 78 ஆண்டுகளாக, ஒரு மில்லிமீட்டர் நிலம் கூட கைமாறவில்லை இல்லையா? எனவே நாம் ஏன் அமைதியாக வாழ்ந்து, நம் நாட்டை வலிமையாக்கக் கூடாது? அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்தார்.
____________________________________________________________________________________________
ஹேசில்வுட்டுக்கு பிளவர் புகழாரம்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்.சி.பி. த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுதான். சிறப்பாக பந்து வீசிய ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளவர், ஹேசில்வுட்டை புகழந்துள்ளார்.
இது தொடர்பாக ஆண்டி பிளவர் கூறுகையில் "ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுத்தக்கூடியவர். அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். எந்தவொரு வடிவிலான போட்டியிலும் நெருக்கடியான நிலையில் சிறந்தவர். அவர் சிறந்த லெந்த் பவுலிங்கிற்கு பெயர் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவருக்கு சிறந்த ஆல்-ரவுண்ட் திறமைகள் உள்ளன. இந்த சீசனில் புவி சிறப்பாக பந்து வீசி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக யாஷ் தயால் அட்டகாசமாக பந்து வீசினார். குறிப்பாக கடைசி ஓவரில் அசத்தினார். இவ்வாறு ஆண்டி பிளவர் தெரிவித்தார்.
____________________________________________________________________________________________
நிச்சயம் வெல்வோம்: பிளெமிங்
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான புளூ பிரிண்டை ஆர்.சி.பி. அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது. ஒருவேளை நாங்கள் தகுதிபெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம். அடுத்து வரும் அத்தனைப் போட்டிகளையும் எங்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி?
19 Dec 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்
19 Dec 2025நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2025.
19 Dec 2025 -
தமிழ்நாட்டில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி: 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடி நீக்கம்
19 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்க
-
சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி த.வெ.க.வின் பொதுக்கூட்டம்? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
19 Dec 2025சேலம், ஈரோட்டில் த.வெ.க.
-
சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம்
19 Dec 2025சென்னை, சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
19 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங
-
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்
19 Dec 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்
-
கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
19 Dec 2025சென்னை, கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் டிச.22-ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
19 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள
-
அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
19 Dec 2025பிரசல்ஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பீகார் ஹிஜாப் சர்ச்சை: அரசு வேலையை உதறிய பெண்..!
19 Dec 2025பீகார் ஹிஜாப் சர்ச்சையால் அரசு வேலையை வேண்டாம் என்ற புறக்கணித்த பெண் டாக்டர், பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு சென்றதாக தகவல் வெளியாகி
-
ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகளை ஜனவரி 5 - க்குள் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் கெடு
19 Dec 2025சென்னை, ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
19 Dec 2025சென்னை, செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
19 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி தங்கம் 1 கிராம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனையானது.
-
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 152 விமானங்கள் ரத்து
19 Dec 2025புதுடெல்லி, பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று 79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
செவிலியர் பணிக்கு காலி இடங்கள் தற்போது இல்லை: அமைச்சர் தகவல்
19 Dec 2025சென்னை, செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 புதிய மின்சாரப் பேருந்துகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
19 Dec 2025பூந்தமல்லி மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் புதிதாக 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியசைத்து த
-
என்னை வளர்த்தெடுத்த ஆசான்: பேராசிரியர் அன்பழகனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
19 Dec 2025சென்னை, என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர் என்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தொடர் வெற்றிகளை பே
-
துணை ராணுவம் திடீர் தாக்குதல்: சூடானில் 16 பேர் பலி
19 Dec 2025கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில் உள்ள தெற்கு கார்டூமின் மாகாணம் டில்லிங் பகுதியில் துணை ராணுவப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
-
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக சாதனை படைத்த கான்வே - லதாம் ஜோடி
19 Dec 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற உலக சாதனையை கான்வே - லதாம் இணை படைத்துள்ளது.
-
வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடியவிடிய தர்னா
19 Dec 2025புது டெல்லி, வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
காந்தி பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 2-வது நாளாக போராட்டம்
19 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், புதிய திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக உள்ள அம்சங
-
சாந்தி மசோதா நிறைவேற்றம்: தொழில்நுட்பத்துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர் மோடி
19 Dec 2025டெல்லி, இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் சாந்தி மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி ப
-
வங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் அடித்த கொலை
19 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து மத இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டு அவரது உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பலால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.


