எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.12 - இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:-
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டில் மறு குடியமர்த்துவதற்காகவும், மறுவாழ்வு அளிப்பதற்காகவும், இந்திய நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய பாராளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்து, அதில் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு அனுப்ப நான் முடிவு செய்தேன்.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது. எனவே தான், கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்ற பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுத்தேன்.
இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை எதிர்த்து மத்திய அரசு செயல்படுவதாக இருந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கடிதங்கள் மூலம் வலியுறுத்தியதை அடுத்து, இறுதி வரை அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஒரு தெளிவற்ற நிலையைக் கடைபிடித்த மத்திய அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் கடுமையை குறைத்து, அதை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து, அதில் வெற்றியும் பெற்று அதன் பின் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்பதால் அதற்கு நன்றி பாராட்டினேன்.
எனவே, இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் என்றும் நம்பினேன். அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளை பார்வையிட்டு, அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் அது உதவும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப நான் சம்மதித்தேன். இந்தச் சூழ்நிலையில், இலங்கை பயணம் குறித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களை கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாததாக அமைந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே உட்பட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகள் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் எற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும் தான் தெரிகிறது. இது மட்டுமல்லாமல், இக்குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம் பெறாதது எனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் குழுவின் பயணமும், ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்றது போல் ஒரு கண்துடைப்பு ஏற்பாடாக ஆகிவிடும் என்று நான் கருதுகிறேன். ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் மென்மையான தீர்மானத்தைக் கூட இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையிலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபக்ஷே அரசு தடுத்து நிறுத்தாததாலும், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளதன் அடிப்படையிலும், தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் இலங்கை அரசிடம் எந்தவிதமான மாற்றமும் தெரிய வராததாலும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல் ஆகியவை பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் யதார்த்தங்களை பற்றியும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயுடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப் பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபக்ஷேவுடன் காலை விருந்துக் கூட்டம் என்பது மட்டும் பயணக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்பதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொள்கிறது என்பதையும், இந்தக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
திருச்செங்கோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.-வின் வெற்றி உறுதி : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
08 Oct 2025திருச்செங்கோடு : திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பீகார் தேர்தல்: தே.ஜ.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஸ்குமார் : பா.ஜ.க. அறிவிப்பு
08 Oct 2025பாட்னா : பீகாரில் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
-
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கையா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
08 Oct 2025ஈரோடு : கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
-
ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப்பரிமாற்ற செய்யும் வசதி விரைவில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி அமல்படுத்தப்பட உள்ளது.
-
தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Oct 2025சென்னை : தலைமை பதவியில் 25 ஆண்டுகள் பயணம் செய்த பிரதமர் மோடிக்கு எடிப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது: பிரதமர் பேச்சு
08 Oct 2025புதுடெல்லி : முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
-
மகளிர் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியல்: கடைசி இடத்தில் பாகிஸ்தான்
08 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திலும், இந்தியா ரன் ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும் உள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு செந்தில் பாலாஜி நிதியுதவி
08 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
08 Oct 2025திருச்சி : திராவிட மாடல் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
வரும் 12-ம் தேதி முதல் மதுரையில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்
08 Oct 2025மதுரை : மதுரையில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
-
ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றும் புதிய வசதி ஜனவரியில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி வரும் ஜனவரியில் அறிமுகமாகவுள்ளது.
-
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர்: பெங்கால் அணியில் ஷமி, ஆகாஷ் தீப்
08 Oct 2025மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்
08 Oct 2025கரூர் : விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளது.
-
வழக்கறிஞர் மீது தாக்குதல்: திருமாவளவன் விளக்கம்
08 Oct 2025சென்னை : வழக்கறிஞர் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
-
கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் கைது
08 Oct 2025சென்னை : கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
-
தேசத்திற்காக விளையாடுவதில் பெருமை: சாம்சன்
08 Oct 2025மும்பை : இந்திய அணிக்காக நான் எதுவென்றாலும் செய்ய தயார்.
-
பாதசாரிகள் நடமாட்டத்திற்கு விதிகள்: அனைத்து மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
08 Oct 2025புதுடெல்லி : பொது இடங்களில் பாதசாரிகள் நடமாட்டத்துக்கு 6 மாதங்களில் விதிகள் வகுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள
-
ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பிலான நவிமும்பை விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
08 Oct 2025மும்பை : மும்பையை அடுத்த நவிமும்பையில் ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள விமான நிலையத்தின் முதல்கட்ட பணி நிறைவடைந்ததை அடுத்து அங்கு சர்வதேச விமான நிலையத்த
-
கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை
08 Oct 2025கலிபோர்னியா : கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை மசோதா நிறைவேற்றியுள்ளது.
-
அருங்காட்சியகமாக மாறும் ரவீந்திரநாத் தாகூர் வீடு
08 Oct 2025புவனேஷ்வர் : ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.
-
ஈரோடு, நாகமலை குன்றினை 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவித்தது அரசு
08 Oct 2025சென்னை : நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசு அப்பீல்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
08 Oct 2025புதுடெல்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளை (10-ம் தேதி) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
-
இந்திய பொருளாதாரம் உயரும்: உலக வங்கி
08 Oct 2025புதுடெல்லி : இந்திய பொருளாதாரம் உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: சிராஜ், கே.எல்.ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் முன்னேற்றம்
08 Oct 2025துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கே.எல்.
-
பா.ம.க. நிறுவனர் ராமதாசை நலம் விசாரித்தார் திருமாவளவன்
08 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்டு திருமாவளவன் நலம் விசாரித்தார்.