எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 18 - மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்ற குழுவினர் மும்பையில் வந்து விசாரணை நடத்திய அறிக்கையை சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது என்று ராவல்பிண்ட் கோர்ட்டு யாரும் எதிர்பாராதவிதமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மும்பை தாக்குதலில் தொடர்பான 7 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து அரபு கடல் வழியாக 10 தீவிரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் 300 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுவிட்டனர். ஒரே தீவிரவாதியான கசாப் மட்டும் உயிருடன் சிக்கினான். அவனுக்கு சுப்ரீம்கோர்ட்டில் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஜிண்டால் என்ற தீவிரவாதி தற்போது சிக்கியுள்ளான். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து கொண்டு உதவிய 7 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வருகிறது. அவர்கள் மீது ராவல்பிண்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து நீதிமன்ற குழுவானது மும்பைக்கு சென்று போலீஸ் அதிகாரி, டாக்டர்கள் ஆகியோர்களுடன் விசாரணை நடத்தியது. ஆனால் அவர்களிடத்தில் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் நீதிமன்ற குழுவானது விசாரணைக்கு பிறகு ஒரு அறிக்கையை அந்த நாட்டு அரசிடம் சமர்ப்பித்தது. இந்தநிலையில் இந்தியா சென்ற நீதிமன்ற குழுவுக்கு குறுக்கு விசாரணை நடத்த இந்திய அரசு அனுமதிக்கவில்லை. அதனால் இந்த அறிக்கையை ஒரு சாட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று ராவல்பிண்டி கோர்ட்டு அறிவித்துள்ளது. இந்த கோர்ட்டில்தான் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 7 தீவிரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க ஜகீர் ரகுமான் லஹ்வி சார்பாக வழக்கறிஞர் கவுஜா ஹரீஸ் அகமத் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹபிப் அகமத், இந்தியாவுக்கு சென்ற பாகிஸ்தான் நீதிமன்ற குழுவின் அறிக்கை சரியாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். அந்தமாதிரி இல்லாததோடு குறுக்கு விசாரணை நடத்தவும் அனுமதிக்கப்படாததால் அந்த அறிக்கை சட்டவிரோதமானது என்றும் அதை ஒரு சாட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



