எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.9 - ஓடும் ரெயிலில் பெண் குழந்தையை வீசி கொல்ல முயன்ற தாயை பயணிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. இதில் பயணம் செய்த பெண் ஒருவர் பிளாஸ்டிக் பையை மறைத்தபடி அமர்ந்திருந்தார். திடீரென பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பையை வாங்கிப் பார்த்தபோது தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் பெண் குழந்தை இருந்ததை கண்டனர். இதுபற்றி அவரிடம் கேட்ட போது எனது குழந்தை தான். முறை தவறி பிறந்துள்ளது, யாருக்காவது வளர்க்க விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பயணிகள் அவரை கண்டித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த அவர் குழந்தையை பையில் சுற்றி ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீச முயன்றார். அப்போது அருகில் அமர்ந்திருந்த மனித உரிமைகள் கழகத்தை சேர்ந்த ஊரப்பாக்கம் லட்சுமி ரகுராம் மற்றும் பயணிகள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர்.
இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் தயாராக நின்ற போலீசார் அந்த பெண்ணையும் குழந்தையையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து குழந்தையுடன் அவரை எழும்nullர் ரெயில்வே போலீசாரிடம் விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்பெண் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சித்ரா (36) என்பது தெரிந்தது.
15 ஆண்டுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் நேற்று முன்தினம் இரவு எனக்கு குழந்தை பிறந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் செங்கல்பட்டு வந்து தாம்பரம் மின்சார ரெயிலில் ஏறினேன். குழந்தையை வீசி கொல்ல முயலவில்லை என்று சித்ரா கூறினார். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மனித உரிமைகள் கழக மகளிர் அணி அமைப்பாளர் கல்பனா, மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது ஆவேசம் அடைந்த கல்பனா, பிறந்த குழந்தையை பாலித்தீன் பையில் எடுத்து வரலாமா? என்று கூறி சித்ரா கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மனித உரிமை அமைப்பு நிர்வாகிகள் சித்ராவையும், குழந்தையையும் தாங்கள் கவனித்து கொள்வதாக போலீசாரிடம் எழுதி கொடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் சித்ராவை போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் எழும்nullர் ரெயில்வே போலீஸ் நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஏராளமான பயணிகள் வேடிக்கை பார்த்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
இன்றைய நாள் எப்படி?
25 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
25 Feb 2026- ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவாரம்பம்.
- கோவை கோணியம்மந் கிளி வாகனம்.
- திருச்செந்தூர் முருகன் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளி சப்பரம். அம்பாள் இந்திர வாகனம்.


