முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் நிதியுதவி உத்தரகாண்ட் முதல்வரிடம் வழங்கப்பட்டது

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

டேராடூன்,ஜூன்.30 - உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ரூ.5 கோடி நேற்று அந்த மாநில முதல்வர் விஜய் பகுகுணாவிடம் நேரடியாக வழங்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு இயற்கை பேரழி ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலையும் கவலையும் தெரிவித்துள்ளார். பேரழிவால் ஏற்பட்டுள்ள சேதத்தை புனர்மைக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய தயார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் நிவாரண உதவிக்காக ரூ. 5 கோடி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை நேற்று உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை டேராடூனில் டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன் நேரில் சந்தித்து வழங்கினார். இதற்கிடையில் உத்தரகாண்ட் வெள்ளபெருக்கில் சிக்கிய மேலும் 20-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மீட்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago