எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. ஜூலை.3 - திருச்சியில் நேற்று மதியம் ஏற்பட்ட திடீர் தீ வபத்தில் 30க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்த கோர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:- திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள கீழ வண்ணாரப்பேட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் இருந்தவர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்தனர். பெண்கள் உள்பட ஒரு சிலர் மட்டுமே குடிசைகளில் இருந்தனர். இந்நிலையில் நண்பகல் 11.30 மணியளவில் ஒரு குடிசை வீட்டில் திடீரென்று தீ பற்றியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவி ஆக்ரோசமாக கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் குடிசைகளில் இருந்தவர்கள் அய்யோ அம்மா... காப்பாற்றுங்களேன் என்று அலறியடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று நடுத்தெருவுக்கு ஓடி வந்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து அறிந்த திருச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவம் இடம் நோக்கி விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது குடிசைகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கின. இதனால் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் தீ மேலும் வேகமாக அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கும் பரவி தீ கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது. தீயணைப்புத்துறையினர் ஒருமணி நேரம் மிகுந்த சிரமத்திற்கிடையே போராடி தீயை அணைத்தனர். அரசு மருத்துவமனை போலீஸ் எஸ்.ஐ. அருண் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர தீ விபத்தில் 30 குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இதில் வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, ரேஷன் கார்டு, சான்றிதழ்கள் மற்றும் பணம், நகை போன்ற அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதன் சேத மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது
இப்பகுதியில் ஒரு குடிசையில் வசித்து வந்த மதியழகன் என்பவரின் மனைவி தேவி என்பவர் சமையல் செய்து விட்டு அடுப்பை அணைக்காமல் விட்டதே இந்த தீ விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தின் சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதி, என்.ஆர்.சிவபதி எம்.எல்.ஏ, மேயர் ஜெயா, துணை மேயர் ஆசிக் மீரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
இன்றைய நாள் எப்படி?
25 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
25 Feb 2026- ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவாரம்பம்.
- கோவை கோணியம்மந் கிளி வாகனம்.
- திருச்செந்தூர் முருகன் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளி சப்பரம். அம்பாள் இந்திர வாகனம்.


