முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா ஆணவம் பிடித்தவராம்! முஷாரப் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,மே.27 - அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பின்லேடனை கொன்றது தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் விமர்சித்துள்ளார். இது குறித்து தனியார் டி.வி ஒன்றுக்கு பேட்டியளித்த முஷாரப், அமெரிக்க அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 

பாகிஸ்தானுக்குள் நுழைந்து பின்லேடனை கொன்ற விதமே ஓபமா ஒரு ஆணவம் பிடித்தவர் என்று உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. அனுமதியின்றி அன்னிய நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்த எந்தவொரு நாட்டிற்கும் அதிகாரம் இல்லை. எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்து அனுமதியின்றி பின்லேடன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஒரு அநாகரீகமான செயல். ஒரு நாட்டின் இறையாண்மையை பாதிக்க செய்ய எந்த நாட்டிற்கும் அதிகாரம் இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்கா எல்லை மீறி செயல்பட்டு உள்ளது பாகிஸ்தானுக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்