முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டி ஊழலுக்கு சுரேஷ் கல்மாடிதான் காரணம்

திங்கட்கிழமை, 30 மே 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மே.- 30 - காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்த ஊழலுக்கு சுரேஷ் கல்மாடிதான் முழுபொறுப்பும் காரணமுமாகும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான அமைப்பு கமிட்டி பதில் அனுப்பி உள்ளது.  டெல்லியில் கடந்த ஆக்டோபர் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தியதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் எந்த அளவுக்கு நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சுங்குலு கமிட்டியை கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி மத்திய அரசு நியமித்தது. இந்த கமிட்டியானது காமன் விளையாட்டு போட்டியில் நடந்துள்ள ஊழல் குறித்து விரிவான முறையில் ஆய்வு செய்து ஆதாரங்களை திரட்டி அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளிக்கும்படி காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பு கமிட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன்படி அமைப்பு கமிட்டியானது பதில் அளித்துள்ளது. அதில் விளையாட்டு போட்டியில் ஊழல் நடப்பதற்கு முழுபொறுப்பு சுரேஷ் கல்மாடிதான் என்று தெளிவாக கூறியுள்ளது. விளையாட்டு போட்டியை பார்க்க டிக்கெட் கொடுத்தல், அதன் விலையை நிர்ணயம் செய்தல், கூடுதலாக பட்ஜெட் தயாரித்தல், ஆலோசகர்கள் நியமித்தல், பணிக்க ஆட்களை நியமித்தல் ஆகியவைகளில் நடந்த ஊழலுக்கு சுரேஷ் கல்மாடிதான் காரணமாகும் என்று காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு கமிட்டியானது தனது 1000-ம் பக்க அறிக்கையில் கூறியுள்ளது. சுரேஷ் கல்மாடி ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்