எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.11 - தமிழகம் முழுவதிலும் உள்ள 42 சுகாதார மாவட்டங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தாய்-சேய் நல மையம் அமைக்கப்படும், 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்படும், மருத்துவத்துறையில் காலியாக உள்ள 15,600 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைவிதி எண்.110ன் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது:
``நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்ற பழமொழியை கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். நோயை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று ஆகும். எனவே தான், நோய் ஏற்படும் போது, அந்த நோயை நீnullக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்து, அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்ற உயரிய இலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் சில புதிய திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் நான் தற்போது எடுத்துரைக்க விழைகிறேன்.
தற்போது மாநிலத்தில் உள்ள 1,589 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,539 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் சுகாதார சேவை அளிக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், விரைவில் மாற்றி அமைக்கப்படும். தரம் உயர்த்தப்பட்ட 283 ஆரம்ப சுகாதார நிலையங்களில், முன்பே நிர்ணயம் செய்யப்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சை, அதாவது, எலெக்டிவ் சிசேரியன் செய்வதற்கான வசதிகள் உள்ளன. திடீரென்று, அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் வசதி கிராமப்புறங்களில் இல்லை. இதனை nullநீக்கும் வகையில், முதற்கட்டமாக 42 தாய்சேய் நல மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் ரத்தம் செலுத்தும் வசதியுடன் 24 மணி நேரமும் இந்த தாய்சேய் நல மையங்கள் செயல்படும். சுகாதார மாவட்டம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மையம் வீதம் இந்த 42 மையங்கள் அமைக்கப்படும்.
மேலும், தொலை தூரத்தில், எளிதில் சென்றடைய முடியாத நிலையில் உள்ள 31 துணை சுகாதார மையங்கள், முதல்நிலை தாய்சேய் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும். முழு நேர
சேவை அளிக்கும் வகையில், இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும், 3 செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவர். இவ்வாறு, 42 தாய்சேய் நல மையங்களை அமைப்பதற்கும், 31 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்துவதற்கும், 19 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
கிராமப்புற பெண்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட எனது அரசு, கிராமப்புற பெண்களின் நலனுக்காக புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. கிராமப்புற பெண்கள் இடையே ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் பரிசோதனை மேற்கொள்ளவும், இந்தத் திட்டம் வழி வகுக்கும். 2 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மலைப் பகுதிகளில் 20,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும், சமவெளிப் பகுதிகளில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும்
மத்திய அரசால் வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இந்த ஆண்டு, 12 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், மருத்துவ வசதி குறைவாக உள்ள 38 வட்டாரங்களில் உள்ள 38 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள்
ஆகிய வசதிகளுடன், 39 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இன்றைய நவீன யுகத்தில் அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு நீnullக்கமற நிறைந்துள்ளது. மருத்துவத் துறையிலும் கணினி பயன்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும். நோயாளிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவ வல்லுநர்களுடன் கணினி மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, நோய்கள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு சிகிச்சை பெறும் வகையில், கணினி வழி உரையாடும் வசதியை நான் எனது முந்தைய ஆட்சி காலத்திலேயே ஏற்படுத்தினேன். தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உயர் மருத்துவ ஆலோசனை கிடைக்கும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெலிமெடிசின் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தமிழக மக்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே நேரத்தில், இந்தத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் எனில், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீnullங்குவதாலோ ஏற்படும் காலி இடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணி இடங்கள் ஆகியவை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனை அடிப்படைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்
போன்ற பல்வேறு நிலைகளில் சுமார் 91,600 பணியிடங்கள் உள்ளன. இவற்றில், தற்போது 15,600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய காலிப் பணியிடங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஏற்படப் போகும் காலிப் பணியிடங்களை முன் கூட்டியே கணக்கிட்டு, பணியாளர்களை விரைந்து தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை இல்லாதது தான் அதற்கு முக்கியமான காரணம் ஆகும்.
இந்த குறைபாட்டை நீnullக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, மருத்துவத் துறை பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு என்று, மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம், அதாவது, மெடிகல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள கூடுதல் செயலாளர் இந்தத் தேர்வு வாரியத்தின் தலைவராக இருப்பார். மருத்துவத் துறை இணை இயக்குநர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினராகவும்; மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினர்செயலாளராகவும் இருப்பர். வாரியத்திற்கு தேவையான இதரப் பணியாளர்களும் நியமிக்கப்படுவர். தேவைப்படும் பணியாளர்களை தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி இந்த மருத்துவத் துறை பணியாளர் வாரியம் தேர்வு செய்யும். தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களையும் இந்த வாரியம் தேர்வு செய்யும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் தக்க திருத்தம் மேற்கொண்ட பின், மருத்துவர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களும், இந்த தேர்வு வாரியத்தின் மூலமே நிரப்பப்படும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய இது போன்ற தனி வாரியம் அமைக்கப்படுவதால், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 11 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு
22 Jun 2025மதுரை : மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு
22 Jun 2025அமராவதி : ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர்.
-
தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
22 Jun 2025ஈரோடு : தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிக தொகுதிகள் பெற்று போட்டியிட வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
பயிர் நிவாரண நிதியில் ரூ. 40 கோடி மோசடி: 11 அதிகாரிகள் சஸ்பெண்ட்
22 Jun 2025மும்பை : பருவ மழையின் போது சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத்தில் ரூ. 40 கோடி மோசடி செய்ததாக 11 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
22 Jun 2025மதுரை : மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-06-2025.
22 Jun 2025 -
ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்: அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தரிசனம்
22 Jun 2025ராமேசுவரம் : ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது.
-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
22 Jun 2025திருச்செந்தூர் : ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர்.
-
அமைதி ஏற்படாவிட்டால் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் : அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
22 Jun 2025நியூயார்க் : ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
22 Jun 2025சென்னை : சகோதரர் விஜய் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று ஈரான் அமைச்சர் ஆலோசனை
22 Jun 2025ஈரான் : இஸ்தான்புல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன் என்று தெரிவித்தார்
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வாசிம் அக்ரமின் வாழ்நாள் சாதனையை தகர்த்த பும்ரா
22 Jun 2025லீட்ஸ் : டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா 'சேனா' நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலா
-
ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட இஸ்ரேல் பணய கைதிகளில் மூன்று பேர் சடலமாக மீட்பு
22 Jun 2025காசா முனை : ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு ஒருநாளும் இந்தி திணிப்பை ஏற்காது: ஆ.ராசா
22 Jun 2025சென்ன : தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது என்று ரயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
-
ஈரான் தாக்குதல் அச்சம் : நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
22 Jun 2025அமெரிக்கா : அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.
-
ஈரான் மீது திடீர் தாக்குதல்: அமெரிக்காவுக்கு பாக். கண்டனம்
22 Jun 2025லாகூர் : ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தடையை நீக்கக்கோரி பெங்களூருவில் 'பைக் டாக்சி' ஓட்டுநர்கள் பேரணி
22 Jun 2025பெங்களுரு : கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள பைக் டாக்ஸி சேவையை மீண்டும் அனுமதிக்கக் கோரி 8 மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பெங்களூரு
-
எங்களுக்கு மக்களை பாதுகாக்கும் உரிமை உள்ளது: ஈரான் அமைச்சர்
22 Jun 2025தெஹ்ரான் : ஈரானின் இறையாண்மை, மக்களை பாதுகாக்கும் உரிமை எங்களிடம் உள்ளது: வெளியுறவு துறை மந்திரி ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக
-
இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்
22 Jun 2025சேலம் : சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
-
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல்: அதிபர் ட்ரம்புக்கு நெதன்யாகு நன்றி
22 Jun 2025டெல் அவிவ் : ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள
-
ஹவாய் தீவில் வெடித்து சிதறிய எரிமலை
22 Jun 2025ஹவாய் தீவு : அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. கிலாவியா எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுவது வழக்கம்.
-
முருகப்பெருமான் தமிழ்நாடு முதல்வர் பக்கம் இருக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி
22 Jun 2025சென்னை : “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி சாதனை: முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதல்வர் பாராட்டு
22 Jun 2025சென்னை : ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா தாக்குதல் எதிரொலி: பதுங்கு குழியில் ஈரான் உயர் தலைவர் காமேனி
22 Jun 2025தெக்ரான் : ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா காமேனி பாதுகாப்பாக ஒரு ரகசிய நிலத்தடி பதுங்கு குழிக்குச்
-
இ.பி.எஸ். கார்டூன் விவகாரம்: புதுச்சேரியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
22 Jun 2025புதுச்சேரி : எடப்பாடி பழனிச்சாமி கார்டூன் விவகாரத்தில் தி.மு.க.வைக் கண்டித்து புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.