எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ. - 22 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க் கிழமையன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு பிரச்சினைகள் மற்றும் ஊழல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரம் சபையை சுமூகமாக நடத்துவதற்காக இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் மீராகுமார் ஏற்பாடு செய்துள்ளார். பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு இந்த சர்வகட்சி கூட்டம் நடைபெறும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடர் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நீடிக்கும். முதல் நாளான இன்றைய தினம் விலைவாசி பிரச்சினையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நெருக்கடியை காங்கிரஸ் சமாளிக்குமா என்பதுதான் இன்றைய கேள்வி. நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்காகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் இன்று கூட்டி உள்ளார். சபை கூடுவதற்கு முன்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டு அப்போது எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை சபாநாயகர் மீராகுமார் கோருவார். இடதுசாரிகளை பொறுத்தவரையில் பொதுவான பிரச்சினைகளில் மற்ற கட்சிகளோடு இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அரசை எதிர்க்கும் மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு எதிலும் ஒரு முடிவுக்கு வருவோம் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இந்த மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத் தொடரில் பேசப்படும் என்று தெரிகிறது. உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, தனது மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்கப் போவதாக ஒரு திட்டத்தை அறிவித்து அது குறித்து தீர்மானமும் நிறைவேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இது குறித்தும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதம் எழுப்பப்படும் எனத் தெரிகிறது. மற்றொரு முக்கிய அம்சம், தெலுங்கானா மாநில விவகாரம். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி அந்த மாநிலத்தில் கடந்த பல நாட்களாகவே போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கவே மாட்டோம் என்று தெலுங்கானா பகுதி எம்.பிக்களும் அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தாலும் பாராளுமன்றத்தில் புயல் வீசக்கூடும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அது தொடர்பாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சில முன்னாள் செயலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வோடபோன், ஏர்டெல் அலுவலகங்களிலும் அதிரடி சோதனைகள் நடந்துள்ளன. இந்த விவகாரமும் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடிக்கலாம். பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இந்த விவகாரமும் சபையில் எழுப்பப்படலாம். மொத்தத்தில் விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பல பிரச்சினைகளை எழுப்பி சபையில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் ஆளும் அரசான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சற்று கலங்கிப் போயிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தனித் தெலுங்கானா மாநில பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, கறுப்பு பணம், ஊழல் போன்ற பிரச்சினைகளை எழுப்ப தமது கட்சி விரும்புவதாக லோக்சபையின் பா.ஜ.க. தலைமை கொறடா ரமேஷ்பயாஸ் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத் தொடரில் மத்திய, மாநில உறவுகள், காஷ்மீர் பிரச்சினை, இந்திய பாகிஸ்தான் உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து இரு சபைகளையும் அடிக்கடி ஒத்திவைக்க பா.ஜ.க மற்றும் இடதுசாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முழுமையாக விவாதிக்க அரசு தயாராகவே இருக்கிறது என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார். முன்னதாக, தலைமை கொறடாக்களின் கூட்டமும் டெல்லியில் நடந்தது. அப்போது கேள்வி நேரம் உட்பட சபையை சுமூகமாக நடத்த வேண்டியதன் அவசியத்தை பல தலைவர்கள் வலியுறுத்தியதாக நிருபர்களிடம் பேசிய பவன்குமார் பன்சால் தெரிவித்தார். சபையை சுமூகமாக நடத்த அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார். கடந்த முறை மழைக்கால கூட்டத் தொடர் நடந்த போது பல அலுவல்கள் நடக்கவே இல்லை. காரணம், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி சபையை நடத்தவிடாமல் இடையூறு செய்தன. இந்த முறையும் லோக்பால் மசோதா உட்பட பல பிரச்சினைகள் எழுப்பப்படவுள்ளன. அரசும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த முறையாவது அது நிறைவேறுமா என்பதே பெண் எம்.பிக்களின் கேள்வியாகும். இந்த கேள்விக்கு இந்த கூட்டத் தொடரில் விடை கிடைக்கலாம். இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான சூழ்நிலையில்தான் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.