எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ. - 22 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க் கிழமையன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு பிரச்சினைகள் மற்றும் ஊழல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரம் சபையை சுமூகமாக நடத்துவதற்காக இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் மீராகுமார் ஏற்பாடு செய்துள்ளார். பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு இந்த சர்வகட்சி கூட்டம் நடைபெறும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடர் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நீடிக்கும். முதல் நாளான இன்றைய தினம் விலைவாசி பிரச்சினையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நெருக்கடியை காங்கிரஸ் சமாளிக்குமா என்பதுதான் இன்றைய கேள்வி. நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்காகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் இன்று கூட்டி உள்ளார். சபை கூடுவதற்கு முன்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டு அப்போது எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை சபாநாயகர் மீராகுமார் கோருவார். இடதுசாரிகளை பொறுத்தவரையில் பொதுவான பிரச்சினைகளில் மற்ற கட்சிகளோடு இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அரசை எதிர்க்கும் மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு எதிலும் ஒரு முடிவுக்கு வருவோம் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இந்த மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத் தொடரில் பேசப்படும் என்று தெரிகிறது. உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, தனது மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்கப் போவதாக ஒரு திட்டத்தை அறிவித்து அது குறித்து தீர்மானமும் நிறைவேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இது குறித்தும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதம் எழுப்பப்படும் எனத் தெரிகிறது. மற்றொரு முக்கிய அம்சம், தெலுங்கானா மாநில விவகாரம். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி அந்த மாநிலத்தில் கடந்த பல நாட்களாகவே போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கவே மாட்டோம் என்று தெலுங்கானா பகுதி எம்.பிக்களும் அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தாலும் பாராளுமன்றத்தில் புயல் வீசக்கூடும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அது தொடர்பாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சில முன்னாள் செயலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வோடபோன், ஏர்டெல் அலுவலகங்களிலும் அதிரடி சோதனைகள் நடந்துள்ளன. இந்த விவகாரமும் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடிக்கலாம். பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இந்த விவகாரமும் சபையில் எழுப்பப்படலாம். மொத்தத்தில் விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பல பிரச்சினைகளை எழுப்பி சபையில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் ஆளும் அரசான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சற்று கலங்கிப் போயிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தனித் தெலுங்கானா மாநில பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, கறுப்பு பணம், ஊழல் போன்ற பிரச்சினைகளை எழுப்ப தமது கட்சி விரும்புவதாக லோக்சபையின் பா.ஜ.க. தலைமை கொறடா ரமேஷ்பயாஸ் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத் தொடரில் மத்திய, மாநில உறவுகள், காஷ்மீர் பிரச்சினை, இந்திய பாகிஸ்தான் உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து இரு சபைகளையும் அடிக்கடி ஒத்திவைக்க பா.ஜ.க மற்றும் இடதுசாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முழுமையாக விவாதிக்க அரசு தயாராகவே இருக்கிறது என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார். முன்னதாக, தலைமை கொறடாக்களின் கூட்டமும் டெல்லியில் நடந்தது. அப்போது கேள்வி நேரம் உட்பட சபையை சுமூகமாக நடத்த வேண்டியதன் அவசியத்தை பல தலைவர்கள் வலியுறுத்தியதாக நிருபர்களிடம் பேசிய பவன்குமார் பன்சால் தெரிவித்தார். சபையை சுமூகமாக நடத்த அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார். கடந்த முறை மழைக்கால கூட்டத் தொடர் நடந்த போது பல அலுவல்கள் நடக்கவே இல்லை. காரணம், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி சபையை நடத்தவிடாமல் இடையூறு செய்தன. இந்த முறையும் லோக்பால் மசோதா உட்பட பல பிரச்சினைகள் எழுப்பப்படவுள்ளன. அரசும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த முறையாவது அது நிறைவேறுமா என்பதே பெண் எம்.பிக்களின் கேள்வியாகும். இந்த கேள்விக்கு இந்த கூட்டத் தொடரில் விடை கிடைக்கலாம். இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான சூழ்நிலையில்தான் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்: சென்னை, மதுரையில் கோலாகலம்
27 Nov 2025சென்னை, மதுரையில் 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
இதுவரை 13 போட்டி...
-
தனது 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை
27 Nov 2025சென்னை, தனது 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை செலுத்தினார்.
-
சுற்றுலாப்பயணிகள் குளிக்க குற்றாலம் மெயின் அருவியில் 6 நாட்களுக்கு பிறகு அனுமதி
27 Nov 2025தென்காசி, 6 நாட்கள் தொடர் தடைக்கு பின்பு நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, சபரிமலை
-
சமூகநீதிக் காவலர் புகழ் ஓங்குக: வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
27 Nov 2025சென்னை, சமூகநீதிக் காவலர் புகழ் ஓங்குக என்று வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையனுக்கு விஜய் புகழாரம்
27 Nov 2025சென்னை, இளம் வயதிலேயே எம்.எல்.ஏ.வாக பெரிய பொறுப்பை ஏற்றவர் அண்ணன் செங்கோட்டையன் என்று தெரிவித்த த.வெ.க.
-
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை எதிரொலி: அரசு துறைகள் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும்: மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
27 Nov 2025சென்னை, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய முதலவர் மு.க.ஸ்டாலின்,
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
27 Nov 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சென்னை, தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
27 Nov 2025தூத்துக்குடி, வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார்: த.வெ.க. தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் புகழாரம்
27 Nov 2025சென்னை, தமிழகத்தில் மாற்றம் வேண்டும்.
-
ரோகித் சர்மா மீண்டும் முதலிடம்
27 Nov 2025சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
-
தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி: மக்களிடம் மன்னிப்பு கேட்ட பண்ட்
27 Nov 2025மும்பை, தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி அடைந்த தோல்விக்கு நாட்டு மக்களிடம் கேட்ட ரிஷப் பண்ட் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
27 Nov 2025கனகோனா, கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் .
-
உருவானது 'டித்வா' புயல்
27 Nov 2025சென்னை, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டித்வா புயல் நேற்று உருவாகி உள்ளது.
-
ஹாங்காங் தீ விபத்து பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
27 Nov 2025ஹாங்காங், ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
-
4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர்: தீப்தி சர்மா ரூ.3.20 கோடிக்கு ஏலம்
27 Nov 2025புதுடெல்லி, 4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை
-
ரூ.79.94 கோடி மதிப்பில் 25 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 Nov 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 திருக்கோவில்களில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.6.77 கோடி செலவிலான 20 முடிவுற
-
செங்கோட்டையன் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை: எடப்பாடி பழனிசாமி
27 Nov 2025மதுரை, செங்கோட்டையன் தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. எனவே அவரது கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அ.தி.மு.க.
-
3 ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு சிறை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
27 Nov 2025டாக்கா, அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட
-
ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டம்: செங்கோட்டையனின் யோசனையை ஏற்ற விஜய்
27 Nov 2025சென்னை, அண்ணாவின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தற்போது தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என செங்க
-
ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
27 Nov 2025சென்னை, ரயிலில் தள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன்: பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மகிழ்ச்சி
27 Nov 2025சென்னை, அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி என்று த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வு.க்கு 20 சதவீத வாக்குகள் உறுதியாகியுள்ளது: ஆதவ் அர்ஜுனா
27 Nov 2025சென்னை, த.வெ.க.வு.க்கு 20 சதவீத வாக்குகள் தற்போதே உறுதியாகி விட்டது என்று செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த நிலையில்
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
27 Nov 2025சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்
-
ரூ 1.88 கோடியில் கிரிவலம் பாதை அமைக்கும் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 Nov 2025சென்னை, தென்காசி மாவட்டம், தோரணமலை முருகன் கோவிலில் ரூ 1.88 கோடி மதிப்பில் கிரிவல பாதை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
10.79 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள சமூகநீதி கல்லூரி - விடுதி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
27 Nov 2025சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.


