எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,ஜன.27 - தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எம்.ஜி.ஆர். சமாதி அருகே உண்ணா விரதம் இருக்க பெப்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பெப்சி நிறைவேற்றிய தீர்மானங்கள் வருமாறு: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பெப்சியைப் பற்றி தவறான தகவலை தந்து, பெப்சியை உடைத்து புதிய சங்கத்தை உருவாக்குவோம் என்று கூறியதை பெப்சி வன்மையாக கண்டிக்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏ.பி.சி. என்று தயாரிப்பாளர்களை பிரித்து ஊதியம் நிர்ணயித்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து, தயாரிப்பாளர்களின் ஓட்டுகளை வாங்கி, தற்போது அதை நிறைவேற்ற முடியாமல் பதவியில் இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகரன், வாழ்வாதாரத்திற்கும், வயிற்றுப்பசிக்கும் போராடும் தொழிலாளத் தோழர்களை தேர்தலுக்காகவும் பதவிக்காகவும் இருக்கிறார்கள் என்று கூறிக் கொச்சைப்படுத்தி பேசி, தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள தமிழ் சினிமாவை அழிவு பாதைக்கு கொண்டு செல்ல நினைக்கும் அவரை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை இழுத்தடித்தது தயாரிப்பாளர்கள் சங்கமே, மேலும் தற்போது நடைபெற்றக் கொண்டிருக்கும் படப்பிடிப்புகள் அனைத்தையும் திட்டமிட்டு நிறுத்தி வருவதும் தயாரிப்பாளர்கள் சங்கம் தான். இதில் பெப்சிக்கு இம்மியளவு சம்மந்தமும் இல்லை.
பெப்சி தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டிருப்பது அடிப்படை சம்பள உயர்வு மட்டும்தான் என்பதையும், ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய சம்பளத்தையே இன்றைக்கும் வாங்க சொல்வதையே பெப்சி மறுக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் பெப்சி ஆள்குறைப்பு செய்ய முன்வந்து அதை ஒப்புக் கொண்டபின்பும் அந்த செய்தியை எஸ்.ஏ. சந்திரசேகரன் மறைப்பதை பெப்சி கண்டிக்கிறது.
அவுட்டோர் யூனிட் முதலாளிகள், தயாரிப்பாளர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எங்களின் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது போல் வெளியாட்களை வைத்து தங்களின் உபகரணங்களை எடுத்து செல்ல அனுமதித்தால், அதனை எதிர்த்து போராடுவோம்.
ஈழத்தமிழர்கள் பாதித்தபோது ராமேஸ்வரம் போக பெப்சி தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். காவேரி பிரச்சனைக்காக நெய்வேலி சென்று போராட பெப்சி தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். மொழி உணர்வு பிரச்சனைக்களுக்கும் பெப்சி தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், பெப்சி தொழிலாளர்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது மற்ற மாநிலங்களிலிருந்து ஆட்களை கொண்டு வந்து வேலை செய்வோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இது தான் தமிழ் உணர்வா?
பெப்சியின் தொழிலாளர் அமைப்பில் இருந்துக் கொண்டு, தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில், தொழிலாளர்களுக்காக நியாயம் கிடைக்க பேசிவரும் பெப்சி ஊதியக்குழுத் தலைவர் இயக்குநர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய இயக்குநர் சேரனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த பெப்சி தலையிடாமல் இருந்திருந்தால் இயக்குநர் சேரன் இயக்கிய அவரது முதல் திரைப்படம் ``பாரதி கண்ணம்மா'' வெளிவந்திருக்கமுடியாது. அத்திரைப்படத்தில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையை பெப்சி சுமூகமாக பேசி தீர்த்திருக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் ஹென்றி தற்போது இயக்குநராக இருந்து வரும் சேரன் மூடிமறைத்திருப்பார். சேரன் என்ற ஒரு இயக்குநரே தற்போது இருந்திருக்க மாட்டார். இப்படி இவர் வாழ்க்கைக்கு பெரிதும் உதவிய பெப்சியைப் பற்றி அவர் விமர்சித்ததை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இயக்குநர் அமீர் மீது நடவடிக்கை எடுத்தால் அவருக்காக எந்த வித போராட்டமும் நடத்த எங்களின் 23 சங்க தொழிலாளர்களும் தயாராக உள்ளோம் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே, பெப்சி தொழிலாளர்களுக்கு இதே பிரச்சனை வந்தபோது, கிட்டத்தட்ட ஏழு தொழிலாளர்கள் தங்களின் உயிரை விட்டனர். அதே நிலை தற்போதும் எங்களின் தொழிலாளர்களுக்கு ஏற்பட நேர்ந்தால் அதற்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், சேரன் ஆகியோரே முழு பொறுப்பாளர்கள் ஆவார்கள் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த செயல்களை கண்டித்தும், எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அனைவரும், தமிழக அரசு அனுமதி பெற்று, பெப்சியை உருவாக்கிய, எங்களின் 23 சங்கங்களும் உருவாக காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
பாரதிய ஜனதா கூட்டணிக்கு த.வெ.க. வர வாய்ப்புள்ளதா? / மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
12 Jul 2025புதுடெல்லி : நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
-
டெல்லியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: 5 பேர் பலி
12 Jul 2025புதுடில்லி, டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
சீனா செல்கிறார் ஜெய்சங்கர்
12 Jul 2025புதுடெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு
12 Jul 2025நியூயார்க், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: ஒரு காலி பணியடத்துக்கு 353 பேர் போட்டி
12 Jul 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாதது ஏன் ? - பும்ரா விளக்கம்
12 Jul 2025லண்டன் : முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாததற்கான காரணம் குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை : தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
லாா்ட்ஸ் டெஸ்ட்: கே.எல்.ராகுல் சதம்
12 Jul 2025லண்டன் : லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பும்ரா 5 விக்கெட்...
-
குஜராத் பால விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
12 Jul 2025வதோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
-
நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை : ஜஸ்ப்ரிட் பும்ரா பதில்
12 Jul 2025லண்டன் : எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
12 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போ
-
மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்து விட்டது: ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட திட்டங்களை வழங்குவோம்: இ.பி.எஸ்.
12 Jul 2025கடலூர் : நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்ட ஏழை மக்களின் திட்டங்களை வழங்குவோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025