எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,ஜன.27 - தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எம்.ஜி.ஆர். சமாதி அருகே உண்ணா விரதம் இருக்க பெப்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பெப்சி நிறைவேற்றிய தீர்மானங்கள் வருமாறு: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பெப்சியைப் பற்றி தவறான தகவலை தந்து, பெப்சியை உடைத்து புதிய சங்கத்தை உருவாக்குவோம் என்று கூறியதை பெப்சி வன்மையாக கண்டிக்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏ.பி.சி. என்று தயாரிப்பாளர்களை பிரித்து ஊதியம் நிர்ணயித்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து, தயாரிப்பாளர்களின் ஓட்டுகளை வாங்கி, தற்போது அதை நிறைவேற்ற முடியாமல் பதவியில் இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகரன், வாழ்வாதாரத்திற்கும், வயிற்றுப்பசிக்கும் போராடும் தொழிலாளத் தோழர்களை தேர்தலுக்காகவும் பதவிக்காகவும் இருக்கிறார்கள் என்று கூறிக் கொச்சைப்படுத்தி பேசி, தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள தமிழ் சினிமாவை அழிவு பாதைக்கு கொண்டு செல்ல நினைக்கும் அவரை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை இழுத்தடித்தது தயாரிப்பாளர்கள் சங்கமே, மேலும் தற்போது நடைபெற்றக் கொண்டிருக்கும் படப்பிடிப்புகள் அனைத்தையும் திட்டமிட்டு நிறுத்தி வருவதும் தயாரிப்பாளர்கள் சங்கம் தான். இதில் பெப்சிக்கு இம்மியளவு சம்மந்தமும் இல்லை.
பெப்சி தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டிருப்பது அடிப்படை சம்பள உயர்வு மட்டும்தான் என்பதையும், ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய சம்பளத்தையே இன்றைக்கும் வாங்க சொல்வதையே பெப்சி மறுக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் பெப்சி ஆள்குறைப்பு செய்ய முன்வந்து அதை ஒப்புக் கொண்டபின்பும் அந்த செய்தியை எஸ்.ஏ. சந்திரசேகரன் மறைப்பதை பெப்சி கண்டிக்கிறது.
அவுட்டோர் யூனிட் முதலாளிகள், தயாரிப்பாளர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எங்களின் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது போல் வெளியாட்களை வைத்து தங்களின் உபகரணங்களை எடுத்து செல்ல அனுமதித்தால், அதனை எதிர்த்து போராடுவோம்.
ஈழத்தமிழர்கள் பாதித்தபோது ராமேஸ்வரம் போக பெப்சி தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். காவேரி பிரச்சனைக்காக நெய்வேலி சென்று போராட பெப்சி தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். மொழி உணர்வு பிரச்சனைக்களுக்கும் பெப்சி தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், பெப்சி தொழிலாளர்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது மற்ற மாநிலங்களிலிருந்து ஆட்களை கொண்டு வந்து வேலை செய்வோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இது தான் தமிழ் உணர்வா?
பெப்சியின் தொழிலாளர் அமைப்பில் இருந்துக் கொண்டு, தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில், தொழிலாளர்களுக்காக நியாயம் கிடைக்க பேசிவரும் பெப்சி ஊதியக்குழுத் தலைவர் இயக்குநர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய இயக்குநர் சேரனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த பெப்சி தலையிடாமல் இருந்திருந்தால் இயக்குநர் சேரன் இயக்கிய அவரது முதல் திரைப்படம் ``பாரதி கண்ணம்மா'' வெளிவந்திருக்கமுடியாது. அத்திரைப்படத்தில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையை பெப்சி சுமூகமாக பேசி தீர்த்திருக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் ஹென்றி தற்போது இயக்குநராக இருந்து வரும் சேரன் மூடிமறைத்திருப்பார். சேரன் என்ற ஒரு இயக்குநரே தற்போது இருந்திருக்க மாட்டார். இப்படி இவர் வாழ்க்கைக்கு பெரிதும் உதவிய பெப்சியைப் பற்றி அவர் விமர்சித்ததை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இயக்குநர் அமீர் மீது நடவடிக்கை எடுத்தால் அவருக்காக எந்த வித போராட்டமும் நடத்த எங்களின் 23 சங்க தொழிலாளர்களும் தயாராக உள்ளோம் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே, பெப்சி தொழிலாளர்களுக்கு இதே பிரச்சனை வந்தபோது, கிட்டத்தட்ட ஏழு தொழிலாளர்கள் தங்களின் உயிரை விட்டனர். அதே நிலை தற்போதும் எங்களின் தொழிலாளர்களுக்கு ஏற்பட நேர்ந்தால் அதற்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், சேரன் ஆகியோரே முழு பொறுப்பாளர்கள் ஆவார்கள் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த செயல்களை கண்டித்தும், எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அனைவரும், தமிழக அரசு அனுமதி பெற்று, பெப்சியை உருவாக்கிய, எங்களின் 23 சங்கங்களும் உருவாக காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பிக்கும் காலம் நிறைவு
19 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கலில் புதிய ரூட்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பங்கள் நிறைவு பெற்றது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் விமான விபத்து: முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக வழக்கு
19 Sep 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்தின் முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர