எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.23 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் பணி செய்வோர் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்களின் சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைத்திட 1000 சிற்றுண்டி உணவகங்கள் திறக்கலாம் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி தீர்மானத்தை விளக்கி மேயர் சைதை துரைசாமி பேசினார் தீர்மான விபரம் வருமாறு:- மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப்பகுதிகளில் வாழ்பவர்கள் பெரும்பாலும் அன்றாடக் கூலி வேலை செய்பவர்களாக இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம், உணவுமுறை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தாக உள்ளது.
கூலி வேலை செய்யும் மக்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற முறையில் வெளியில் விற்கும் உணவுப்பொருட்களையே வாங்கி உட்கொள்கின்றனர்.
சென்னை மாநகரில் ஒரு நாளில் நடமாடும் மக்கள் தொகை 10 லட்சம் ஆகும். இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்டு வாழும் ஏழை எளிய மற்றும் வறுமையில் பசியால் வாடும் மக்களின் சுகாதார மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக இடங்களை தேர்வு செய்து சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சலுகை விலையில் தரமான உணவு வழங்கிட 1000 சிற்றுண்டி உணவகங்களை ஏற்படுத்திட திட்டமிட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், தினசரி வேலைக்கு செல்லும் பணியாளர்கள், தள்ளு வண்டி, கைவண்டி மற்றும் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளை சார்ந்த அனைத்து தொழிலாளர்கள் ஆகியோர் பயனடைவார்கள்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாழும் ஏழை, எளிய மக்களின் சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு 1000 சிற்றுண்டி உணவகங்கள் துவங்கப்படும் என்ற அறிவிப்பின் மீது கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சிற்றுண்டி உணவகங்கள் ஏற்படுத்த இடம் தேர்வு செய்தல், உணவு தயார் செய்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் / தேவையான மின் இணைப்பு வசதி (ம) கழிவுநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்காக ஒரு குழுவினை கீழ்க்காணும் அலுவலர்களை கொண்டு அமைத்து பணிகளை மேற்கொள்ளலாம். இக்குழு 1000 சிற்றுண்டி உணவகங்களை செம்மையாக நடைபெறுவதற்கு அனைத்து வகையிலும் பொறுப்பேற்கும்.
மாநகர நல அலுவலர், மாநகர கூடுதல் சுகாதார அலுவலர், வருவாய் அலுவலர், மண்டல அலுவலர்கள்,
சமையற்கூடங்களில் வேலை செய்வதற்கும், உணவுகளை எடுத்துச் செல்வதற்கும் சுய உதவிக்குழுக்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மாநகரில் சாலையோரங்கள், உட்புற சாலைகள் மற்றும் நடைபாதைகளில் சிற்றுண்டி உணவகங்கள் நடத்துவோரின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களையும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த சிற்றுண்டி உணவகங்களில் விற்கப்படும் கீழ்கண்ட உணவுப்பண்டங்களான காலை - இட்லி, மதியம் - சாம்பார் சாதம், தயிர் சாதம், சாப்பாடு.
ஆகியவை அடக்க விலையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது இதற்கான அரிசி எண்ணெய் பருப்பு வகைகள் நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் ஏற்ப்பாடு செய்யப்படும் தமிழக முதல்வர் பிறந்த நாளை உலக சுற்றுச்சூழல் மற்றும் உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு தினமாக கொண்டாடுகின்ற இந்த வேளையில் உறுபசியும் ஒவாப்பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு என்னும் வள்ளுவம் வழியில் தமிழகத்தின் தலைநகரத்தில் தொடங்கும் இந்த தாயுமானவர் தொண்டு திட்டத்தை எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற பரந்த நோக்கமுடைய விலையில்லா அரிசி தந்த தமிழக முதல்வர் பெயரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப்பகுதிகளில் ஏழை, எளிய மக்களின் பொது சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு 1000 அடக்க விலை சிற்றுண்டி உணவகங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, தொடக்கத்தில் 200 இடங்களில் பரிட்சார்த்தமாக திறப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



