எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரம் செலவிட்டனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருக்கும் அணி வீரர்கள் பள்ளி குழந்தைகளை சந்திக்கும் கிரிக்கெட் கிளீனிக் என்ற நிகழ்ச்சியை ஐசிசி நடத்தி வருகிறது. அதன்படி சவுத்தாம்டனில் உள்ள ஹாம்ஸ்பியர் பவுல் மைதானத்தில் 30 பள்ளி குழந்தைகளுடன் இந்திய அணி வீரர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நேரம் செலவிட்டனர். அப்போது கேப்டன் விராட் கோலி குழந்தைகளுக்கு பந்துவீசினார். பின்னர் பேசிய கோலி, குழந்தைகளின் வாழ்க்கையில் கிரிக்கெட் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாக கூறினார்.
____________
பாகிஸ்தான் வீரர் ட்விட்டால் சர்ச்சை
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப்பின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், உலகக்கோப்பையை வெல்லவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைக்கண்ட பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹசன் அலி, உங்கள் விருப்பம் நிறைவேறட்டும். அதற்கு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த ட்விட் பாகிஸ்தான் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், ட்விட் போட்ட சில நிமிடங்களிலேயே அதை அவர் நீக்கி விட்டார். இருப்பினும் ஒரு பாகிஸ்தான் வீரராக இருந்து கொண்டு, எப்படி இப்படி சொல்ல முடிகிறது என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்திய அணிக்கெதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசிய ஹசன் அலி 89 ஓட்டங்கள் வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
____________
கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார் வார்னர் !
நாட்டிங்காமில் நடந்த ஆட்டத்தில் வங்காள தேசத்தை 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 381 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 147 பந்தில் 166 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரி, 5 சிக்கர்கள் அடங்கும். பின்னர் விளையாடிய வங்காள தேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன் எடுத்தது. இந்த அணியில் முஷ்பிகுர் ரஹிம் சதம் (102 ரன்) அடித்தார். வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அடித்தது அவரது 16-வது சதமாகும். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார். இருவரும் 3-வது இடத்தில் உள்ளனர். 29 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மார்க் வாக்கும் (18 சதம்) உள்ளனர். டேவிட் வார்னர் 110-வது இன்னிங்சில் 16-வது சதத்தை தொட்டார். இந்திய கேப்டன் விராட் கோலியும் தனது 16-வது சதத்தை 110-வது இன்னிங்சில்தான் அடித்தார். ஒட்டு மொத்தமாக டேவிட் வார்னர் 14-வது இடத்தில் உள்ளார்.
____________
தவானுக்காக வருத்தப்பட்ட சச்சின் டெண்டுல்கர்
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து தவானுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ‘அன்பிற்குரிய தவான், ஆடுகளம்தான் உங்களை மிஸ் செய்ய இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் நீங்கள் குணம் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பி, இந்தியாவின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும்’ என பதிவிட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் உருக்கமான பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சச்சின் கூறுகையில், ‘ஷிகர், நான் உங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். முக்கியமான சமயத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயம் என் இதயத்தை நொறுக்கிவிட்டது. நீங்கள் நிச்சயம் மீண்டு வருவீர்கள். உங்கள் திறமையை நிரூபிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்’ என உருக்கமாக கூறியுள்ளார்.
____________
பாக். அணியில் ஓரங்கட்டப்பட்ட வீரர் இம்ரான் கானிடம் கோரிக்கை
உலககோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. மோசமான பேட்டிங், பவுலிங் என்று சகல விதத்திலும் அந்த அணி சொதப்பியது. மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிந்தும் டாஸ் வென்று பீல்டிங் செய்தது அணியின் கேப்டன் சர்பராஸை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் என்று போட்டிக்கு முன்னதாக கூறியிருந்த நிலையில், சர்பராஸின் முடிவு வேறு விதமாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓரங்கட்டப்பட்ட வீரரான கம்ரான் அக்மல், அணி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். “உலகக்கோப்பை தொடரில் முதலில் பவுலிங் செய்த எந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அதிக ரன்களை குவித்து வெற்றி பெற்றது. எனினும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றும் சர்பராஸ் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். நான் பிரதமர் இம்ரான் கானுக்கு கேட்டுக்கொள்வது, அணிக்காக விளையாட உண்மையான திறனுடன் ஏராளமான வீரர்கள் தயாராக உள்ளனர். மெரிட் அடிப்படையில் வீரர்கள் தேர்வு நடந்தால் பாகிஸ்தான் அணி சிறந்த இடத்துக்கு செல்வது உறுதி” என்று கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.
____________
தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை - மைக்கேல் ஹசி
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர் ஷிகர் தவானுக்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டியின் போது இடது கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இவர் அந்தப் போட்டியில் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவானுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது கைவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் காரணமாக ஷிகர் தவான் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஷிகர் தவான் உலகக் கோப்பையிலிருந்து விலகியது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தவான் உலகக் கோப்பையிலிருந்து விலகியது இந்திய அணிக்கு பெரிய அளவில் பாதிப்பாக இருக்காது. இந்திய அணியில் தவானின் இடத்தை நிரப்ப திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே இந்திய அணியின் உலகக் கோப்பை பயணத்தில் தவான் இல்லாதது எந்தவித தொய்வும் ஏற்படுத்தாது. இந்திய அணியிலுள்ள வீரர்களின் திறமையை வைத்து பார்க்கும் போது இந்திய அணி இறுதி வரை செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
_____________
குளோபல் டி20 தொடரில் யுவராஜ் சிங் ஒப்பந்தம் !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் இவர் அறிவித்திருந்தார். அப்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறியிருந்தார். அதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அவர் சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு வாரியம் பதில் ஏதும் அனுப்பவில்லை. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த அனுமதி தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கனடாவில் நடக்கும் ’குளோபல் டி20’ தொடரில் விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு கனடா வீரர்களும் இடம் பெறுவார்கள். இந்த தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘டொரண்டோ நேஷனல்ஸ்’ அணிக்காக விளையாட யுவராஜ் சிங் ஒப்பந் தமாகியுள்ளார். இதை குளோபல் டி20 கனடா தனது அதிகாரப் பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
____________
வார்னரின் செல்லப் பெயர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 89.40 சராசரியில் 447 ரன்கள் எடுத்துள்ளார். வங்காள தேசத்திற்கு எதிராக நடந்த போட்டியில் 166 ரன்களை வார்னர் குவித்தார். இதனால் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2019 உலக கோப்பையில் இதுவே அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். இது குறித்து வார்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது அணியினர் என்னை இப்போதெல்லாம் ‘Hum-Bull' (Humble- அமைதி Bull-காளை) என அழைக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக நான் நல்ல முறையில் நடந்து கொள்வதால் இப்படிச் செல்லமாக அழைக்கின்றனர். நான் வாழ்க்கையிலும், கிரிக்கெட்டிலும் கோபமாக நடந்துக் கொள்ள முடியாத சூழலில் இருக்கிறேன்.
____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது
01 Jan 2026சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
-
ராகுல் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தி.மு.க.வுக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி பேட்டி
01 Jan 2026சென்னை, தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வல
-
தமிழ்நாட்டில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது எப்பொழுது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
01 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் அதிபர் புதின் சூளுரை
01 Jan 2026மாஸ்கோ, உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
-
சென்னையில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
01 Jan 2026சென்னை, சென்னையில் 7-வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Jan 2026சென்னை, கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.;
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Jan 2026சென்னை, தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026 -
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்
01 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
-
உலகம் அழியும் என கூறிய கானாவை சேரந்தவர் கைது
01 Jan 2026கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும்.
-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Jan 2026சென்னை, 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞ
-
15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் பீகாரில் என்கவுன்ட்டரில் படுகொலை
01 Jan 2026பெகுசராய், பீகார் மாநிலத்தில் 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jan 2026சென்னை, ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வ
-
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
01 Jan 2026சென்னை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் நேற்று திரண்டனர்.
-
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: மாநகர காவல் துறை அறிவிப்பு
01 Jan 2026சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
2026-ல் மட்டும் நடைபெறும் 3 உலகக்கோப்பை போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து
01 Jan 2026மும்பை, புதியதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
-
வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் சிகரெட் விலை வரும் பிப்.1 முதல் புதிய வரி அமல்
01 Jan 2026புதுடெல்லி, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் கிடைக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் வெடிவிபத்து; பலர் பலி..!
01 Jan 2026பெர்ன், சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் மம்தானி
01 Jan 2026நியூயார்க், 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்றதன் மூலம் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு தாக்கல்
01 Jan 2026சென்னை, அ.தி.மு.க.
-
நெதர்லாந்து தேவாலயத்தில் தீ விபத்து
01 Jan 2026ஆம்ஸ்டர்டாம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே நெதர்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் துணை ஜனாதிபதி நேரில் சந்திப்பு
01 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
-
போரை நிறுத்தவே விருப்பம்; ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை
01 Jan 2026கீவ், நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை



