எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல நகரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் எண்ணத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியாகும். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த ஒரு வார காலமும் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். போலீஸ் பாதுகாப்புடன் பூஜை நடத்தப்பட்டு கடைசி நாளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இப்படி கோலாகலமாக நடைபெறும் விழாவை சீர்குலைப்பதற்காகவும், வேளாங்கண்ணி திருவிழாவை சீர்குலைப்பதற்காகவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீவிரவாதிகள் இலங்கை வழியாகவே தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையில்தான் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சந்தேகத்திற்கு இடமாக 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது. உஷாராக இருங்கள் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இந்த எச்சரிக்கை கடிதம் வந்துள்ளது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
உளவுப் பிரிவு எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கூடுதல் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் ஐ.ஜி.க்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்நிலையில் உள்ளனர். குறிப்பாக கோவை நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் என வந்த தகவலையடுத்து கோவையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோவையில் உள்ள ஆலயங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில போலீசாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள பதிவு வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. கேரள எல்லையிலும் தீவிர சோதனையை போலீசார் நடத்தினர்.
இதே போல் சென்னை நகரிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக சொன்னால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
மேட்டூர் அணையில் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய போலீசார் அங்கு, அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். இதே போல திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்டறிய கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தளங்கள், விளையாட்டு மைதானங்கள் என ஒன்றுவிடாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வணிக வளாகங்கள், விடுதிகள் ஒன்றையும் போலீசார் விட்டு வைக்கவில்லை. கோவையில் உச்சக்கட்ட உஷார்நிலையில் போலீசார் வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான அனைத்து இடங்களிலும் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் பாரிமுனை, மண்ணடி, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இப்போதும் அந்த பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று நேரம், அட்டவணை வெளியீடு
19 Sep 2025துபாய் : சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 அணிகள் பங்கேற்ற...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
லக்னோவில் நடந்த இந்தியா 'ஏ'-ஆஸி. 'ஏ' டெஸ்ட் போட்டி டிரா
19 Sep 2025லக்னோ : இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே லக்னோவில் நடந்த அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.