எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல நகரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் எண்ணத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியாகும். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த ஒரு வார காலமும் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். போலீஸ் பாதுகாப்புடன் பூஜை நடத்தப்பட்டு கடைசி நாளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இப்படி கோலாகலமாக நடைபெறும் விழாவை சீர்குலைப்பதற்காகவும், வேளாங்கண்ணி திருவிழாவை சீர்குலைப்பதற்காகவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீவிரவாதிகள் இலங்கை வழியாகவே தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையில்தான் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சந்தேகத்திற்கு இடமாக 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது. உஷாராக இருங்கள் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இந்த எச்சரிக்கை கடிதம் வந்துள்ளது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
உளவுப் பிரிவு எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கூடுதல் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் ஐ.ஜி.க்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்நிலையில் உள்ளனர். குறிப்பாக கோவை நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் என வந்த தகவலையடுத்து கோவையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோவையில் உள்ள ஆலயங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில போலீசாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள பதிவு வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. கேரள எல்லையிலும் தீவிர சோதனையை போலீசார் நடத்தினர்.
இதே போல் சென்னை நகரிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக சொன்னால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
மேட்டூர் அணையில் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய போலீசார் அங்கு, அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். இதே போல திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்டறிய கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தளங்கள், விளையாட்டு மைதானங்கள் என ஒன்றுவிடாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வணிக வளாகங்கள், விடுதிகள் ஒன்றையும் போலீசார் விட்டு வைக்கவில்லை. கோவையில் உச்சக்கட்ட உஷார்நிலையில் போலீசார் வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான அனைத்து இடங்களிலும் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் பாரிமுனை, மண்ணடி, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இப்போதும் அந்த பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.