எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ல்யூஸாகா : சாம்பியாவில் மாங்காய் சாப்பிடுவதற்காக தங்கும் விடுதியின் சுவரை தாண்டிய யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானைகள் பெரும்பாலும் புல், தழைகள், பூக்கள், காடுகளில் உள்ள சில வகையான பழங்கள், புதர்ச்செடிகள், மூங்கில் மற்றும் வாழைப்பழங்களை சாப்பிடுகின்றன. அவற்றின் முக்கிய உணவு புற்கள். ஆனால் வானிலை வறண்டு, புற்கள் மடிந்து விட்டால், காட்டில் காணக் கூடிய எந்த வகையான தாவரங்களையும் யானைகள் சாப்பிடுகின்றன. சில சமயங்களில் தனக்கு பிடித்த உணவுக்காக, வேலியைக்கூட தாண்டி ஊருக்குள் வருகின்றன.
இந்நிலையில், சாம்பியாவில் மாங்காய் சாப்பிடுவதற்காக, அங்குள்ள ஒரு தங்கும் விடுதியின் சுவரை தாண்டிய யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாம்பியா நாட்டின் தெற்கு லுங்வா தேசிய பூங்கா பகுதியில் உள்ளது எம்புவே தங்கும் விடுதி. சம்பவத்தன்று ஆப்பிரிக்க யானை ஒன்று விடுதியின் சுவரை தாண்டி உள்ளே வந்தது. இதைக் கண்ட அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த யானை கீழே தடுமாறி விழாமல் தனது மிகப்பெரிய 4 கால்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து சுவரை தாண்டியது. இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து அந்த விடுதியின் மேலாளர் கூறுகையில், யானை மிகவும் நேர்த்தியான வழியை தேர்ந்தெர்ந்தெடுத்து உள்ளே வந்தது. சுவரை தாண்டிய யானையின் யோசனையை கண்டு சுற்றுலாப்பயணிகள் வியந்தனர். அந்த யானை இங்குள்ள மாம்பழங்களை சாப்பிட வந்திருக்க வேண்டும் என தெரிவித்தார். விடுதியின் சுவரை தாண்டி உள்ளே வந்த யானை திரும்பிச் செல்வதற்கு முன்பு சில மாங்காய்களை திருடி சாப்பிட்டதாக அங்குள்ள ஊழியர்கள் சிலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


