எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளது. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்தவும், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை நல்ல பலன்களை கொடுத்தாலும், இன்னும் மாநிலத்திற்கு சவால்கள் இருக்கின்றன.
மாநில அரசின் முற்போக்கான கொள்கைகள் காரணமாக, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகபட்சமாக சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. கல்லூரி பருவத் தேர்வுகளை (செமஸ்டர்) ஏப்ரல் மாதமே நடத்த திட்டமிட்டிருந்தாலும் அதனை கொரோனா தொற்றின் தாக்கத்தால் நடத்த முடியவில்லை.
பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் வசதிக்கேற்ப தேர்வுகளை நடத்திக் கொள்ள பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.), கடந்த 29.04.2020 அன்று விதிமுறைகளை அறிவித்தது. கடந்த 6-ம் தேதி யு.ஜி.சி. அறிவித்த புதிய விதிமுறைகளின்படி அனைத்து கல்வி நிறுவனங்களும் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
பல மாணவர்கள் வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால், அவர்களால் தேர்வு மையங்களுக்கு வர முடியாத சூழல் நிலவுவதால் இந்த புதிய அறிவிப்பு பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் பலரால் இணைய வசதியை (ஆன்லைன்) அணுக முடியாத சூழல் நிலவுவதால் இணையவழி தேர்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது.
இதுதவிர, பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் (விடுதிகள், வகுப்பறைகள் உள்பட) அறிகுறியற்ற கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தி வைக்க கோவிட் கேர் சென்டராக மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறாகவே இன்னும் சில காலத்திற்கு அவை இருக்கும்.
செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும், கேம்பஸ் நேர்காணல் மூலம் வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பித்த மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவின் பல மாநிலங்கள் இறுதி பருவ தேர்வுகளை நடத்துவதில்லை என முடிவெடுத்துள்ளது. தொழில் வாய்ப்புகள், எதிர்கால வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும், மாணவர்களுக்கு சுகாதாரம், பாதுகாப்பு, நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளை பாதுகாப்பதற்கும், தரம் மற்றும் கல்வி நம்பகத்தன்மையில் சமரசம் செய்யாமல், மாநிலங்களுக்கு அதன் சொந்த மதிப்பீட்டு முறைகளை உருவாக்க சுதந்திரம் வழங்கலாம்.
மேற்கூறியவற்றின்படி, யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., சி.ஓ.ஏ., பி.சி.ஐ., என்.சி.டி.இ., தேசிய ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் (என்.சி.ஹெச்.எம்.சி.டி.) ஆகியவை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும். இந்த துன்பகரமான காலங்களில் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நீதியையும் நியாயத்தையும் வழங்குவதில் இது உதவிகரமாக இருக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்: ஜே.பி. நட்டா தகவல்
21 Jul 2025டெல்லி, ஆபரேஷசன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
21 Jul 2025சென்னை, மல்லிகார்ஜுன கார்கே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.