எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 27.7.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில், 8 தொழில் திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 23,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், CapitaLand நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai, Radial Road தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம்.
கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், TATA Chemicals நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nissei Electric நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.9.2019 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது),
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Usui Susira நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Dinex நிறுவனத்தின் Diesel Engine-களுக்கான Exhaustஉற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25.5.2020 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது).
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Steel Shoppe நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.
கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் MRC Mills நிறுவனத்தின் Textiles processing திட்டம்.
விழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில் 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Sri Raajarajeshwari Life Careநிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். இந்த நிறுவனம் COVID-19 நிவாரண மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.
என மொத்தம் 8 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 2,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தி தொழிற்பூங்காவில், டிட்கோ மற்றும் டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கான AERO HUB உயர்நுட்ப தொழில் மையத்திற்கும் முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 3,185 கோடி ரூபாய் முதலீட்டில், 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார். இந்த 11 திட்டங்களில், 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள CapitaLand தொழிற் பூங்காவில் 730 கோடி ரூபாய் முதலீட்டில் 875 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த TPI Composites நிறுவனத்தின் Wind blades உற்பத்தி திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 608 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Glovis Hyundai நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் Knitting / Packaging திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, Sojitz Motherson நிறுவனத்தின் தொழிற் பூங்கா திட்டம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் 625 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட Rajapayalam Mills நிறுவனத்தின் Textile fabrics உற்பத்தி திட்டம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 220 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Gulf Oil நிறுவனத்தின் Oil lubricants திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 80 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், JMatadee நிறுவனத்தின், கிடங்கு திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 75 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Hibrow Healthcare நிறுவனத்தின், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம், சிப்காட் சிறுசேரி தொழில் நுட்பப் பூங்காவில் 24 கோடி ரூபாய் முதலீட்டில் 330 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், TCS நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்ப சேவைகள் (Phase I)திட்டம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 451 கோடி ரூபாய் முதலீட்டில் 1150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், Mothi Spinners,Lucky Yarn Tex மற்றும் Lucky Weavess நிறுவனங்களின் நூல்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தி திட்டங்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள Indospace தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் 75 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Mahindra Steel Services நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.
காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 47 கோடி ரூபாய் முதலீட்டில் 950 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Teemage Builders நிறுவனத்தின் கட்டுமான பொருட்கள் உற்பத்தி திட்டம். என மொத்தம் 11 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 3,185 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,955 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட 8 திட்டங்களில், 6 திட்டங்கள், 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும். அதேபோன்று, வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட 11 திட்டங்களில், 2 திட்டங்கள் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், 8 திட்டங்கள் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு -2019ல், 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. 27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 8 திட்டங்களையும் சேர்த்து, இதுவரை 81 திட்டங்கள், அதாவது 26.64 சதவீத திட்டங்கள், தமது வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன.
மேலும் 191 திட்டங்கள், அதாவது 62.82 சதவீத திட்டங்கள், பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில் 89.46 சதவீதம் (அதாவது 272/304) திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2015ல், 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,70,065 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 2 திட்டங்களையும் சேர்த்து, 44 திட்டங்கள் நிறைவு பெற்று வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன. 27 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில், 72 சதவீத திட்டங்கள் (அதாவது 71/98) செயல்பாட்டு நிலையில் உள்ளன.
2019-2020ஆம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) சார்பில் 37 கோடியே 3 லட்சத்து 3 ஆயிரத்து 205 ரூபாய் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் 40 கோடி ரூபாய் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலைகளை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தமிழக முதல்வரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மைச்செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர். நீரஜ் மித்தல், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தலைவர் குமரகுருபரன் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் அனீஷ்சேகர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
13-வது மகளிர் உலகக்கோப்பை: இந்தியா-தெ.ஆப்பிரிக்கா அணிகள் : இன்று இறுதி போட்டியில் மோதல்
01 Nov 2025மும்பை : 13-வது மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பை மைதானத்தில் தங்களது முதலாவது உலகக்கோப்பைக்காக இந்தியா- தென் ஆப
-
ஆஸி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - இன்று 3-வது டி-20 போட்டியில் மோதல்
01 Nov 2025ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
-
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி
01 Nov 2025வெலிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.
-
நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
01 Nov 2025கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் க
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
இ.பி.எஸ். தலைமையில் வரும் 5-ம் தேதி அ.தி.முக. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
01 Nov 2025சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
-
உலகின் மிகப்பெரிய மியூசியம் எகிப்தில் திறப்பு
01 Nov 2025கெய்ரோ : உலகின் மிகப்பெரிய மியூசியம் எகிப்தில் திறக்கப்பட்டது.
-
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலைகள் எப்போது வழங்கப்படும்? - அமைச்சர் காந்தி தகவல்
01 Nov 2025சென்னை : பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலைகள் எப்போது வழங்கப்படும்? என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கரூர் மாவட்டத்தில் சோகம்: மணல் லாரி கவிழ்ந்து வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு
01 Nov 2025கரூர் : கரூர் மாவட்டம் தென்னிலை அருகே எம் சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
-
ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்கள்
01 Nov 2025பழநி : ஒட்டன் சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்கள்.
-
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க திருப்பூரில் இருந்து செல்லும் பீகார் மாநில தொழிலாளர்கள்
01 Nov 2025திருப்பூர் : திருப்பூரில் தங்கி இருந்த தொழிலாளர்களும் தற்போது தங்கள் மாநில தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலத்திற்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.
-
பழனியில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்த விவசாயிகள்
01 Nov 2025பழநி : பழநி பகுதியில் ஆளில்லா விமானம் எனப்படும் ‘ட்ரோன்’களை பயன்படுத்தி வயல்களில் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த


