எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 18 - தமிழக மீனவர்கள் நமது கடலில் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படும் துன்பம் தொடர்கையில், பிழைப்பதற்காக வேறு நாடுகளுக்குச் சென்று, சட்டப்படியான ஒப்பந்தப்படி கடலில் மீன்பிடிக்கும்போதும் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை, தமிழனுக்கு இதுதான் தலைவிதியா என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவுக்குப் பொருள்களைக் கொண்டு சென்ற கப்பலின் பாதுகாப்புப் படையினர், துபாய் கடல்பரப்பில் சிறிய படகில் இருந்து மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டதில், இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் சேகர் கொல்லப்பட்டார்; அவருடன் இருந்த இராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி முள்ளுமுனையைச் சேர்ந்த கண்ணன் என்ற பண்புவன், முருகன் ஆகிய மூவரும் படுகாயமுற்றனர். பன்னாட்டு கடல்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறி நடத்திய இக்கொலை வெறித் தாக்குதலை ம.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க கடற்படை வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, இந்தக் கொலை வெறித்தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக, அந்த மீன் பிடிப்படகு தங்கள் கப்பலுக்கு அருகில் நெருங்கி வந்ததாகவும், வாய்மொழியாக எச்சரித்தும், வான்வெளியில் சுட்டபின்னரும், படகு கப்பலை நெருங்கி வந்ததாகவும், அதனால் எந்திர துப்பாக்கியால் சுட்டதாகவும், அமெரிக்க கடற்படையினர் கூறுவது திமிர்வாதம் ஆகும். வேடிக்கைக்காகவும், கேளிக்கைப் பொழுது போக்குக்காகவும், அவர்கள் தமிழக மீனவர்கள் உயிரை மிக அற்பமாக கருதி சரமாரியாக சுட்டு உள்ளனர். பெரும் தாக்குதல் நடத்தக் கூடிய நவீன போர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ள கப்பலில் இருந்து கொண்டு சின்னஞ்சிறிய மீன்படி படகு மீது எந்திர துப்பாக்கிகளால் சுட்டது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல் ஆகும். தமிழக மீனவர்கள் நமது கடலில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் துன்பம் தொடர்கையில் பிழைப்பதற்காக வேறு நாடுகளுக்கு சென்று சட்டப்படியான ஒப்பந்தப்படி கடலில் மீன்பிடிக்கும்போதும் சுட்டு கொல்லப்படும் கொடுமை, தமிழனுக்கு இதுதான் தலைவிதியா? என்ற கேள்வியை எழுப்புகிறது. கேரள கடல் எல்லையில் 2 கேரளத்தினரை சுட்டுக் கொன்ற இத்தாலிய வணிக கப்பலின் காவலர்களை, சட்டப்படி கைது செய்து கூண்டில் நிறுத்தியதற்கே இத்தாலி அரசு, கண்டனமும், எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு இதுவரையிலும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. தமிழர்கள் உயிர் என்றால், மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரைதான் போலும். தமிழக மீனவர் உயிரை பறித்த அமெரிக்க கப்பல் காவலர்களை, அமெரிக்க அரசு கைது செய்து நட வடிக்கை எடுக்கவும், பாதிக் கப்பட்ட மீனவர்கள் குடும்பத் துக்கு தக்க நிவாரணம் வழங்க வும் மத்திய அரசு உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வைகோ அதில் கூறியுள்ளார். உடனடி நிவாரணம் கிடைக்க தேமுதிக வலியுறுத்தல்
தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்யவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



