எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.26 - இந்திய குடியரசின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நேற்றுக்காலையில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தனர். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், எல்.கே.அத்வானி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பதவி ஏற்பு விழாவில் ஏ.கே. அந்தோணிக்கு அடுத்துதான் சரத்பவாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி புதிய ஜனாதிபதியாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி அவர் நேற்றுக்காலையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுக்காலையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் வீர்பூமிக்கு சென்று ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சக்தி தளத்திற்கு சென்று இந்திரா காந்தி சமாதியிலும் லால் பகதூர் சாஸ்திரி சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார். முகர்ஜியுடன் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத்தும் உடன் சென்றார். பாராளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த மையமண்டபத்திற்கும் பிரணாப் முகர்ஜிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் அவர் கடந்த 40 ஆண்டுகளாக எம்.பி.யாக பதவி வகித்தவர். பதவி ஏற்பதற்கு முன்பு ஜனாதிபதி மாளிகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் பிரணாப் முகர்ஜியும் சம்பிரதாயப்படி பாராளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா,துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் வரவேற்று பாராளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர். பிரணாப் முகர்ஜி சரியாக நேற்றுக்காலை 11.38 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். பதவி ஏற்பின்போது நான் இந்திய குடியரசையும் சட்டத்தையும் பாதுகாத்து காப்பாற்றுவேன். இந்திய மக்களின் நலனுக்காக உழைப்பேன் என்று மனதாகவும் கடவுள் சத்தியமாகவும் உறுதி கூறுகிறேன் என்று பிரணாப் முகர்ஜி கூறினார். அரசியல் சட்டத்தை நான் தொடர்ந்து பின்பற்றுவதோடு மதித்து பாதுகாப்பேன். மக்களின் நலன்களுக்காக என் முழு நேரத்தையும் செலவழிப்பேன் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றுக்கொண்டவுடன் பிரதீபா பாட்டிலும் பிரணாப்பும் இருக்கைகளை மாற்றிக்கொண்டனர். அப்போது 21 குண்டுகள் முழங்கின. ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார். அதன்பின்னர் பிரணாப் உருக்கமாக உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் அரசியல் சட்டத்தை பாதுகாப்பதோடு அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன் என்றும் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார். ஆங்கிலத்தில் பேச்சை தொடங்கிய பிரணாப் ஜெயஹிந்த் என்று முடித்தார். பிரணாப் வழக்கமாத ஷூட்ஷ் அல்லது வேஷ்டிதான் அணிந்திருப்பார். ஆனால் நேற்று பதவி ஏற்பு விழாவின்போது கறுப்பு நிற ஷெர்வானியும் வெள்ளைநிற சுரிதாரும் அணிந்திருந்தார்.
பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ.கே. அந்தோணிக்கு பிறகுதான் சரத்பவாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து ப.சிதம்பரத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பா.ஜ. லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், மாநில கவர்னர்கள், முதல்வர்கள் மற்றும் முக்கிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 76 வயதாகும் பிரணாப் முகர்ஜி, மேற்குவங்கத்தை சேர்ந்தவர். அதனால் அந்த மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு அனுமதி சீட்டு கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



