எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக. 22 - கிராமப்புற வங்கி கிளைகள் மூடப்படக் கூடாது என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை தொடங்கும் இந்தப் போராட்டம் தொடர்ந்து 48 மணி நேரம் நீடிக்கும் என்று வங்கி ஊழியர் சங்க தலைவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
9 சங்கங்கள் ஒருங்கிணைந்து வங்கி ஊழியர் - அதிகாரிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒருங்கிணைந்த அமைப்பாக இது உருவாகி உள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
மத்திய அரசு வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. வங்கி சீர்திருத்த சட்டம் அமலுக்கு வந்தால் வங்கிகளில் உள்ள பொதுமக்களின் சேமிப்புக்கு ஆபத்து ஏற்படும். அந்த சேமிப்பை காப்பாற்றுவதற்காகவும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். 1969 ம் ஆண்டு இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். இதன் காரணமாகத்தான் உலகளவில் வங்கிகள் சரிவை சந்தித்த போதும் இந்திய வங்கிகள் சரிவுக்கு ஆளாகாமல் தப்பின. மத்திய அரசின் புதிய திட்டம் செயலுக்கு வந்தால் பொதுத்துறை வங்கிகளில் தனியாருக்கு உள்ள ஓட்டுரிமை ஒரு சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும். தனியார் வங்கிகளில் 10 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயரும். தற்போது தனியார் வங்கிகளில் பொதுமக்களின் பணம் ரூ. 12 லட்சம் கோடி உள்ளது. தனியாருக்கு ஓட்டுரிமை அதிகரிக்கப்பட்டால் பணத்தை கையாளும் உரிமை அவர்களிடம் அதிகளவு செல்லும். இது நாட்டுக்கு நல்லதல்ல. நமது நாட்டில் 50 சதவீத மக்களுக்கு வங்கி கணக்கு இல்லாத நிலை உள்ளது. எனவே கூடுதல் வங்கி கிளைகள் கிராமப்புறங்களில் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இருக்கின்ற கிராமப்புற வங்கிகளை மூடி விட்டு அப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடுகிறது. இது நாட்டு வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.
மரணமடையும் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கை கொள்கை அளவில் ஏற்கப்ப்டட போதிலும் அதை அமல்படுத்தவில்லை.
எங்களுடைய பலத்தை எதிர்ப்பை மீறி இன்று வங்கி சீர்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த மசோதாவை கைவிடும்படி கூறும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்றும் நாளையும் நாட்டில் உள்ள 10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள். இதனால் 2 நாட்களுக்கு அனைத்து வங்கிகளும் செயல்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



