எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் 2.0-வை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார். பிறகு பேசிய அவர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் வீடு முதல் வீதிவரை அனைத்தும் தூய்மையாக காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபோது மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று கூறி, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் நாள் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதனால் மக்கள் அனைவரும் தங்களுடைய பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.மேலும், இது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் என்றும் கூறி, இதை பிரபலப்படுத்த நட்சத்திரங்களை தூதர்களாக நியமித்தார்.
இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் 2.0-வை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார். மக்கள் தொகை அதிகம் உள்ள பெருநகரங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் காற்றை சுவாசிக்க இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல மேற்கண்ட இந்த திட்டங்கள் உதவும். மாசு படிந்த கருமை நிற கழிவுநீரை இல்லாமல் செய்ய இந்த திட்டங்கள் துணைபுரியும். மேலும் நகர்ப்புறங்களில் கழிவுநீர் பாதையை அமைத்து அவை வெளியேற ஏற்ற வழிகளை அமைக்க இந்த திட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது., குப்பையில்லா நகரங்களாக மாற்றுவதே தூய்மை இந்தியா-2 திட்டத்தின் நோக்கம். குப்பைகளை கீழே வீசக்கூடாது என குழந்தைகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். குப்பைகளை பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தூய்மை திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதன் காரணமாகவே குஜராத்திற்கு தனி அடையாளம் கிடைத்தது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் வீடு முதல் வீதிவரை அனைத்தும் தூய்மையாக காட்சியளிக்கின்றன என தெரிவித்தார்.
பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை வரவேற்கிறேன் என தூய்மை இந்திய 2.0 திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளியில் தெரிவித்தார். வேகமாக நடந்து வரும் நகரமயமாக்களை சமாளித்திட தூய்மை இந்தியா திட்டம் அவசியம். தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் பிரதமர் செயல்படுத்திட வேண்டும். நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. நகர்ப்புறங்களில் கழிப்பிட வசதி, திட்டக்கழிவு மேலாண்மை திட்டஞ்களை பெருமளவு மேம்படுத்தியுள்ளளோம் எனவும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –02-02-2026
02 Feb 2026 -
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தனபால் கோரிக்கை
02 Feb 2026புதுடெல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.
-
தமிழ்நாடு முதல்வரின் காருக்கு வழிவிட சிக்னலில் நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்
02 Feb 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காருக்கு வழிவிட சிக்னலில் விஜய் கார் நிறுத்தப்பட்டது.
-
திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை கலெக்டர்
02 Feb 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் மதுரை மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
-
பழனி முருகனுக்கு காவடி எடுத்த அண்ணாமலை
02 Feb 2026பழனி, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார்.
-
திடீரென மூச்சுத் திணறல்: நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
02 Feb 2026சென்னை, நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



