எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேதாரண்யம் ஏப்.12 - கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் தாலுக்காவைச் சேர்ந்த வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதில் பலத்த காயமடைந்து நாகை மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் செளந்திரராஜன் (45), செல்வம் (30) மாரியப்பன் (28) விஜயகுமார் (30) ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர் இவர்கள் மாலை 5 மணியளவில் கோடியக்கரையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய கடற்எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப்பணி மேற்கொண்டு வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த 4 மீனவர்களை மூங்கில் கட்டை, கயிறு போன்றவற்றால் தாக்கி துப்பாக்கி முனையில் கடலில் குதிக்கும்படி கூறினர். தொடர்ந்து படகில் இருந்த வலை, டீசல், இரண்டு செல்போன்கள், ஐஸ்பாக்ஸ், திசைக்காட்டும்கருவி மற்றும் பிடித்திருந்த மீன்கள் உணவுப் பொருட்கள் போன்றவற்றை கடலில் வீசிவிட்டு இலங்கை கடற்படையினர் சென்று விட்டனர். இதையடுத்து இம்மீனவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் நள்ளிரவு 12 மணியளவில் வெள்ளப்பள்ளம் கரை திரும்பினர். காயமடைந்த மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், வெள்ளப்பள்ளம் ஊராட்சி வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அவருடைய தந்தை காளிமுத்து (45), கலைமணி (27) ரவிச்சந்திரன் (40) ரெங்ககையன் (38) ஆகியோரும் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் மாலை 6 மணியளவில் கோடியக்கரையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய கடற்எல்லைப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் உருட்டு கட்டை, இரும்பு பைப், கம்பு போன்றவற்றால் தாக்கினர்.
தொடர்ந்து படகில் இருந்த வலை, டீசல், ஐஸ்பாக்ஸ், திசைக்காட்டும் கருவி மற்றும் பிடித்திருந்த மீன்கள் போன்றவற்றை கடலில் வீசிவிட்டு வழக்கம் போல இலங்கை கடற்படையினர் சென்று விட்டனர். இந்த மீனவர்கள் கரைதிரும்புவதற்கு எரிபொருட்கள் இல்லாததால் நேற்று மதியம் சக மீனவர்கள் உதவியுடன் வானவன்மகாதேவி கரை திரும்பினர். பலத்த காயமடைந்த மீனவர்கள் நான்கு பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த மீனவர்களை நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் தலைஞாயிறு பாலசுப்பிரமணியன், நாகை தங்ககதிரவன், நாகை நகரச் செயலாளர் சந்திரமோகன், ஊராட்சி ஓன்றியக் குழுத்தலைவர் தமிழ்வாணன் வெள்ளப்பள்ளம் ஊராட்சி தலைவர் வனிதா நாகப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரேநாளில் வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவியைச் சேர்ந்த 8 மீனவர்களை தாக்கிய சம்பவம் நாகை, வேதாரண்யம் பகுதி மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ராகுல் நாளை சென்னை வருகை
19 Feb 2026சென்னை, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நாளை (பிப். 21) சென்னை வரவுள்ளதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியா எண்ணெய் வாங்குகிறதா? ரஷ்யா தரப்பில் விளக்கம்
19 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
19 Feb 2026சென்னை, பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையில்
-
அசாம், காமாக்யா கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
19 Feb 2026டெல்லி, காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி காமாக்யா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
சீனாவில் பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து - 12 பேர் பலி
19 Feb 2026பெய்ஜிங், சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோக நிகழ்வாக பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
-
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
19 Feb 2026சென்னை, தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடையாக தி.மு.க.வுடன் கூட்டணி என தெரிவிக்கிறோம்.
-
மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்திற்குள் தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
19 Feb 2026சென்னை, தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
-
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு
19 Feb 2026சென்னை, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது இதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
-
வருகிற மார்ச் 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ரத்து
19 Feb 2026திருச்சி, திருச்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற பெயரில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடக்கம்
19 Feb 2026சென்னை, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
-
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் சகோதரர் ஆண்ட்ரூ கைது
19 Feb 2026லண்டன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் உறுதி
19 Feb 2026சென்னை, வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணநை்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தே.மு.தி.க.
-
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம்: வரும் 22-ம் தேதி 3 மாவட்டங்களில் மழை
19 Feb 2026சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்
19 Feb 2026ஐதராபாத், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
-
'தி கேரளா ஸ்டோரி - 2' திரைப்படத்தை தடை செய்ய கேரள முதல்வர் வலியுறுத்தல்
19 Feb 2026திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
-
உலகின் பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்கிறது: ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
19 Feb 2026சென்னை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அரசு செய்த சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்வதா? தி.மு.க அரசுக்கு மீது இ.பி.எஸ் கேள்வி
19 Feb 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு?
-
இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
19 Feb 2026புதுடெல்லி, தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்று இலவசங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்கேள்வி எழுப்பியுள்ளது.


