எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில், ஜூலை. 1 - முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக நாகர்கோவில் கோர்ட்டுக்கு நேற்று பகல் 11.30 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்தார். அவரை பார்க்கவும், வழக்கில் ஆஜராகவும், தே.மு.தி.க. தொண்டர்களும், வக்கீல்களும் கோர்ட்டு முன்பு கூடி நின்றனர். விஜயகாந்த் கோர்ட்டுக்குள் நுழைந்ததும், தே.மு.தி.க. வக்கீல்களும், தொண்டர்களும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டுக்குள் சென்றனர்.
சிலர் கோர்ட்டு வளாகத்தில் விஜயகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இதற்கு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த வக்கீல்களும், அரசு வக்கீல் ஞானசேகரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டுக்குள் கோஷமிடுவோரை கோர்ட்டு வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தும் படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோர்ட்டு அறையில் இருந்து வழக்கு விசாரணைக்கு வந்தவர்களை தவிர மற்றவர்கள் வெளி யேற்றப்பட்டனர். அப்போது தே.மு.தி.க. வக்கீல்களுக்கும், கோர்ட்டில் இருந்த மற்ற வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மூண்டது. இதில், சிலர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வக்கீல்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து கோர்ட்டு முன்பு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தகராறில் ்டுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அ.தி.மு.க. வக்கீல் ஞானசேகர் கோட்டார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.அதில், கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் நாகர்கோவில் கோர்ட்டுக்கு இன்று ஆஜராக வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள் கோர்ட்டில் இருந்த என்னை தாக்கி தகாத வார்த்தைகள் பேசினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள் போர்வையில் வக்கீல் அல்லாதவர்களும் கோர்ட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடவடிக்கையில் ்டுபட்டனர். அவர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
பின்னர் வக்கீல் ஞானசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் கோர்ட்டில் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் விஜயகாந்த் வந்து கொண்டிருப்பதாகவும், வழக்கை சிறிது நேரம் ஒத்திவைக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். நீதிபதியும் அதை ஏற்று சிறிது நேரம் வழக்கை தள்ளி வைத்தார்.
அடுத்து ஒரு கொலை வழக்கு மீதான விசாரணை நடந்தது. நான் அந்த வழக்கில் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரித்து கொண்டு இருந்தேன். பகல் 11.30 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது. என்னவென்று விசாரிப்பதற்குள் கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் நுழையும் பாதை வழியாக விஜயகாந்த்தும், அவருடன் வந்தவர்களும் நுழைந்து விட்டனர். விஜயகாந்த் சாட்சி கூண்டில் ஏறாமல் என் அருகே வந்து நின்றார். இதுபற்றி நான் நீதிபதியிடம் முறையிட்டேன். விசாரணைக்கு தேவை இல்லாதவர்களை அறையில் இருந்து வெளியேற்றும்படியும் கூறினேன். இதை கேட்டதும் விஜயகாந்த் என்னை முறைத்தார். அவருடன் இருந்த வக்கீல்கள் என்னை அடிக்க பாய்ந்தனர். சிலர் தாக்கவும் செய்தனர்.
நீதிபதி முன்னிலையில் நடந்த இந்த தாக்குதலில் எனது மூக்கு கண்ணாடி உடைந்தது. அருகில் இருந்த மற்ற வக்கீல்கள் என்னை பாதுகாத்தனர். விஜயகாந்த் மற்றும் அவருடன் வந்தவர்களால் தாக்கப்பட்டது பற்றி போலீசில் நான் புகார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கோர்ட்டில் அரசு வக்கீல் ஞானசேகர் தாக்கப்பட்டதற்கு நாகர்கோவில் வக்கீல் சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவசெல்வராஜன், ஜான் தங்கம் மற்றும் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், பால்வளத்துறை தலைவர் அசோகன் உள்பட பல்வேறு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் விரைந்து வந்தனர். அவர்கள் ஞானசேகருக்கு ஆறுதல் கூறியதோடு சம்பவம் பற்றியும் கேட்டறிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. உதயகுமார் தலைமையில் போலீசார் கோர்ட்டை சுற்றி பாதுகாப்பு பணியில் ்டுபட்டனர். தாக்கப்பட்ட அரசு வக்கீல் ஞானசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –06-02-2026
06 Feb 2026 -
நெல்லை வடக்குபச்சையாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
06 Feb 2026நெல்லை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு அணையில் இருந்து இன்று முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வ
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
06 Feb 2026சென்னை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான்: மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் 31 பேர் பலி - பலர் படுகாயம்
06 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள் மேலும் இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்
-
மியான்மரில் நிலநடுக்கம்
06 Feb 2026நைப்பியிடா, மியான்மரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தருமபுரி: வாணியாறு அணையில் 55 நாள்களுக்கு நீர் திறக்க உத்தரவு
06 Feb 2026தருமபுரி, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூற
-
பாக்.கில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
06 Feb 2026லூகூர், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 பயங்கரவாதிகள் சுட்
-
நேபாளத்தில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
06 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் திருமணத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மின்னஞ்சலில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்
06 Feb 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க த.வெ.க.
-
'புராஜெக்ட் வால்ட்' திட்டம் மூலம் பாகிஸ்தானில் 13 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு
06 Feb 2026நியூயார்க், 'புராஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
06 Feb 2026சென்னை, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
-
சிங்கப்பூரில் ரூ. 1.9 கோடி மோசடி: இந்திய வம்சாவளிக்கு சிறை
06 Feb 2026சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.
-
பீகார் தேர்தல் முடிவை எதிர்த்த பிரசாந்த் கிஷோர் கட்சி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
06 Feb 2026பாட்னா, பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த பிரசாந்த் கிஷோர் கட்சியின் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து தள்ளுபடி செய்தது.


