எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டாக்கா, வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி, வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் பல பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள் வீடுகள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.
ஆட்சியை ராணுவம்...
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தடைந்தார். இதனால் வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் பல பகுதிகளில் தொடர் வன்முறை நிகழ்ந்துள்ளது.
440 பேர் உயிரிழப்பு...
டாக்காவில் போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் சென்று சூறையாடினர். ஹசீனாவுக்கு சொந்தமான நிறுவனங்களும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. மேலும் அந்த நாட்டு அமைச்சர்கள், எம்.பி.க்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது வரை வங்கதேச வன்முறையில் 440 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய ஊடகம்....
நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 37 உடல்கள் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் நேற்று செவ்வாய்க் கிழமை காலை வங்கதேசத்தில் சற்று அமைதி நிலவியதாகவும் பேருந்து, ஆட்டோ என போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதாகவும் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வாகனங்கள் அலுவலகத்திற்குச் செல்வதாகவும் அந்த நாட்டு இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றம்....
இதற்கிடையே வங்கதேச நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த ஜனவரி 7-ம் தேதி நடைபெற்ற தேசியத் தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட 12-வது நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் நேற்று (ஆக.6) கலைத்தார். முப்படைகளின் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத் தலைவர்கள் ஆகியோருடன் அதிபர் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
கலீதா ஜியா விடுவிப்பு...
வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலீதா ஜியா விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜூலை 1 முதல் ஆகஸ்ட் வரை கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 90 நாட்களுக்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் முன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால் அடுத்த 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, வரும் 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
தலைமை ஆலோசகர்...
இதனிடையே, வங்கதேசத்தில் இடைக்கால அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை, ராணுவத் தளபதி நேற்று சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக, நோபல் பரிசுபெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ், புதிய அரசின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். அவரைத் தவிற வேறு யாரையும் தங்களால் ஏற்க முடியாது என்றும் அவர்கள் கூறி உள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய அரசை வழிநடத்த தயார் என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தஞ்சம்...
முன்னதாக, வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 days ago |
-
வரும் 1-ம் தேதி முதல் டிஜிட்டல் பரிவர்த்தனையில் முக்கிய மாற்றங்கள் அமல்
29 Jul 2025மும்பை : டிஜிட்டல் பரிவர்த்தனையில் வரும் ஆகஸ்ட் 1 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
-
பிரதமர் மோடி தலையீட்டால் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைப்பு: இ.பி.எஸ்
29 Jul 2025திருச்சி : மோடி தலையீட்டால் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீர்வரத்து
29 Jul 2025ஒகேனக்கல் : கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விட்ட நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
-
ஜார்க்கண்ட்: விபத்தில் 18 பேர் பலி
29 Jul 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் பேருந்து விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்தனர்.
-
நெல்லையில் ஐ.டி. ஊழியர் படுகொலை: போலீஸ் எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்
29 Jul 2025திருநெல்வேலி, நெல்லையில் ஐ.டி.ஊழியர் கவின்குமார் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதியை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டி.ஐ.ஜி.
-
சென்னையில் பாரா விளையாட்டு மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
29 Jul 2025சென்னை, நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் பாரா பாட்மிட்டன் மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்
-
நெல்லை: இரு தரப்பினர் இடையே மோதல் - போலீசார் துப்பாக்கி சூடு
29 Jul 2025நெல்லை : நெல்லையில் நடந்த இரு தரப்பினர் இடையே மோதலில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
-
மருத்துவ சேர்க்கையில் ஓ.பி.சி. மாணவர்கள்: வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம்: முதல்வர்
29 Jul 2025சென்னை : மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.
-
காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்
29 Jul 2025சென்னை : காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
-
இன்று விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ- நாசா கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள்
29 Jul 2025ஐதராபாத் : இஸ்ரோ நாசா.கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 ராமேசுவரம் மீனவர்கள் கைது
29 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படைநேற்று கைது செய்தது.
-
வருகிற 1-ம் தேதி முதல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தம்
29 Jul 2025சேலம் : தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்
-
தங்கம் விலை சற்று சரிவு
29 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
எதிக்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
29 Jul 2025டெல்லி, எதிக்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை நேற்று மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
-
5-வது டெஸ்ட் போட்டி: அறிமுகமாகிறார் அர்ஷ்தீப் சிங்?
29 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
29 Jul 2025புதுடில்லி : பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) சாதனை படைத்துள்ளது.
-
சீனாவில் மக்கள் தொகை சரிவை சரிசெய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க முடிவு
29 Jul 2025பெய்ஜிங் : சீனாவில் மக்கள் தொகையை சரிவை சரிசெய்ய ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
-
நேரு, இந்திரா மீது பழிபோடுவது பா.ஜ.க.வின் வாடிக்கை: ஆ.ராசா
29 Jul 2025புதுடில்லி : நேரு, இந்திரா மீது பழிபோடுவது பா.ஜ.க.வின் வாடிக்கை என மக்களவையில் தி.மு.க. எம்.பி. ஆ. இராசா பேசியுள்ளார்.
-
நிமிஷா மரண தண்டனை ரத்தா..? - மத்திய வெளியுறவு துறை மறுப்பு
29 Jul 2025புதுடெல்லி : ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மற
-
போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது: தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை : ஆப்ரேசன் சிந்தூர் குறித்து பார்லி.யில் பிரதமர் மோடி விளக்கம்
29 Jul 2025புதுடெல்லி : போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது என்று தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை என்று ஆப்ரேசன் சிந்தூர் குறித
-
நாடு முழுவதும் இயல்பை விட 7 சதவீதம் அதிக பருவமழை பதிவு
29 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
-
கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் மாற்றம்?
29 Jul 2025லண்டன் : கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாணவர் சேர்க்கை குறைவு: தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறுத்தம்
29 Jul 2025சென்னை : தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு அரசு தகவல்
29 Jul 2025சென்னை, `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் 5.88 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை கோரி மனுக்கள் வழங்கியுள்ளனர்.
-
சர்வதேச புலிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
29 Jul 2025சென்னை, புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம். என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.