எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீவ், உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.
ஆனால் அன்றைய தினத்திலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே நேற்று அதிகாலை ரஷ்ய ராணுவம் மாபெரும் ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கீவ் நகரின் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்று என இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்க கூடும் என்றும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


