எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ்நாடு, பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;-
உலக மனித சமுதாயத்தில் மகளிர் ஏறத்தாழ சரிபாதியாக உள்ளனர், அவர்களின் சிந்தனைகளும் உழைப்பும் உலக முன்னேற்றத்திற்குப் பயன்படக்கூடியவை ஆனால் மகளிர் சமுதாயம் சுதந்திரமற்ற ஒரு கூட்டுப் பறவை போல் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தது. உலகில் நிலவும் ஆட்சி முறைகளில் முதன்மையானது குடியாட்சி முறை. குடி ஆட்சிமுறையில் ஒவ்வொருவரும் வாக்களித்து தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது.
இந்த வாக்களிக்கும் உரிமையைக் கூட மகளிருக்கு வழங்கப்படாத சூழ்நிலையில் 1921 ஆம் ஆண்டில் நீதிக் கட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் தான் முதல்முதலில் மகளிருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அதன் பின்னர்தான் மேலை நாடுகளில் எல்லாம் வாக்களிக்கும் உரிமை மகளிருக்கு வழங்கப்பட்டது என்பது வரலாறு. அதேபோல தமிழ்நாட்டில் 1971 இல் அமைந்த நீதிக் கட்சி அரசும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் அமைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்குக் கல்வி உரிமை அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு உரிமைஇ உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, பின்னர் அதுவே 50 விழுக்காடாக நடைமுறைபடுத்தப்பட்டமை, முதலிய மகத்தான சாதனைகள் இந்தியாவிலேயே நிகழ்த்தப்பட்டன.
திராவிட மாடல் அரசின் புரட்சிகரமான திட்டங்கள்
2021 திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு மகளிர் சமுதாயம் மேலும் முன்னேற வேண்டும் என்னும் குறிக்கோளுடன் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிரைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் முதலிய புரட்சிகரமான திட்டங்கள் இந்தியாவிற்கே வழி காட்டும் திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு மகளிர் சமூக விடுதலை பொருளாதார விடுதலை முதலிய அனைத்து வகையிலும் ஆண்களுக்குச் சமமாக உரிமைகள் பெற்றுப் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். இவையெல்லாம்இ இந்திய மாநிலங்கள் எதிலும் நடைமுறைப்படுத்தப்படாத புதிய திட்டங்கள். இத்திட்டங்களைப் பிற மாநிலங்கள் தற்போது தான் பின்பற்றத் தொடங்குகின்றன.
நிர்வாகத் துறையில் மட்டும் அல்ல தொழில்துறையிலும்
தமிழ்நாட்டுப் பெண்கள் நிர்வாகத் துறையில் மட்டும் அல்லாமல் தொழில்துறையிலும் மகத்தான சாதனைகள் புரிந்து வருகின்றனர். தொழில்துறையில் மகளிர் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரும்பாராட்டுகின்றனர்.
தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும், அவர்களுக்கான வேலைவாய்ப்பிலும் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரி மாநிலமாக விளங்குகிறது. ஒரு சமூகத்தின் உண்மையான வளர்ச்சி என்பது அங்கிருக்கும் பெண்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. இந்த வகையில், தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அரசின் கொள்கைகளும் திட்டங்களும் சமூக ஆதரவும் இணைந்து, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலையும், பொருளாதார சுதந்திரத்தையும் உறுதி செய்கின்றன. முறைப்படுத்தப்பட்ட உற்பத்தித் துறையில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கும் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இந்தத் துறை, பெண்களுக்கு நிலையான வருமானத்தையும், வேலை பாதுகாப்பையும் வழங்குகிறது. மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்ததாக, முறைசாராத துறைகளில் பெண்கள் பணியாற்றுவதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது மொத்தத்தில் இந்தியாவின் 9.3% பங்களிப்பை வழங்குகிறது என்று சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களில் 41.4% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது, பெண்கள் தொழில்வாய்ப்புகளைப் பெறுவதிலும், பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக முன்னேற்றம் காண்பதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை வெளிப்படுத்துகிறது, இது, பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்கள் என்பதற்கான முக்கிய ஆதாரம்.
தொழில்துறையில் பெண்களின் இந்த அதிகப்படியான பங்கேற்பு, வேலைவாய்ப்பில் பெண்களுக்குப் பாரபட்சம் இல்லை என்பதையும், அவர்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது, இது ஒரு பாதுகாப்பான, பாலின சமத்துவம் நிறைந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம், அவர்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானது. ஒரு பெண் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருக்கும்போது, அவர் குடும்பம் மற்றும் சமூகத்தில் அதிக மரியாதையைப் பெறுகிறார். மேலும்; எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறார்.
தமிழ்நாட்டில், அரசுப் பணியிடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்குக் கணிசமான இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. இது, அவர்கள் பணியிடங்களில் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்கிறது. அதேபோல், பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காகப் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் போக்சோ சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டம், பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதி செய்வதோடு, புகார் அளிப்பதற்கான வழிமுறைகளையும் எளிதாக்குகிறது.
தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகமாக இருப்பதால், சமூகத்தில் பெண்கள் குறித்த விழிப்புணர்வும் உயர்ந்துள்ளது. திராவிட மாடல் அரசு வழங்கும் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பெண்களின் கல்வி மற்றும் தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கின்றன.
பெண்களின் பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கிய ஒரு திட்டம் விடியல் பயணம். விடியல் பயணத்திட்டத்திற்கு அரசு செய்யும் செலவு மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடாக மட்டுமே பார்க்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டம் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவிகளின் இடை நிற்றலைக் குறைத்து, அவர்களின் உயர்க்கல்விக் கனவைச் சாத்தியாக்கியிருக்கிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் பல இலட்சக்கணக்கான மாணவிகள் தங்களது திறனை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர். நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் காவல்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களான காவலன் செயலி, இரவு நேரக் கண்காணிப்புப் பேட்ரோல் போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
பெண்கள் சமுதாயம் மேலும் முன்னேற
எதிர்காலத்தில், பெண்கள் சமுதாயம் மேலும் முன்னேற, சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி போன்ற ஆய்வு நிறுவனங்களின் பரிந்துரைகள் மிகவும் அவசியமானவை. குறிப்பாக, பெண்களுக்குத் தனி கழிப்பறை வசதிகள், எளிதாக அதிக எடையைத் தூக்க உதவும் உபகரணங்கள், பயண சிரமங்களைச் சரிசெய்தல் போன்றவை, மேலும் அதிக அளவில் பெண்களை முறைசார்ந்த துறைகளுக்குக் கொண்டு வர உதவும்.
தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர் என்பது வெறும் ஒரு கருத்து அல்ல. இது, தரவுகளாலும், நடைமுறை முன்னேற்றங்களாலும் நிரூபிக்கப்பட்ட உண்மை. உற்பத்தித் துறையில் பெண்களின் பங்களிப்பு, பொருளாதாரச் சுதந்திரம், மற்றும் அரசு வழங்கும் பாதுகாப்பு அம்சங்கள், முதலியவை தமிழ்நாடு பெண்களுக்கான சிறந்த இடமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
பேச்சுவார்த்தை ரத்து: இந்திய பயணத்தை தவிர்த்த அமெரிக்க குழு - அமலுக்கு வரும் 50 சதவீத வரி?
18 Aug 2025அமெரிக்கா : பேசசுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து இந்திய பயணத்தை அமெரிக்க குழு ரத்து செய்து 50 சதவீத வரியை அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-08-2025.
18 Aug 2025 -
இன்றைய தங்கம் விலை
18 Aug 2025சென்னை, இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
-
ஆக 29 ல் வெளியாகும் சமுத்திரக்கனியின் வீரவணக்கம்
18 Aug 2025பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் இணைந்து நடித்திருக்கும் படம் வீரவணக்கம்.
-
நிவின்பாலி - நயன்தாரா இணைந்து நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்
18 Aug 2025நிவின்பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப்குமார் எழுதி இயக்கியுள்ளனர்.
-
நடவடிக்கை எடுக்கப்படும்: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை
18 Aug 2025டெல்லி : பாராளுமன்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்
18 Aug 2025சென்னை : குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆரவு கோரினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்.
-
விடியல் பயணத்தில் ரூ.50 ஆயிரம் சேமித்த பெண்கள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
18 Aug 2025சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
-
பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - தமிழக அரசு பெருமிதம்
18 Aug 2025சென்னை : தமிழ்நாடு, பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகள்
18 Aug 2025சென்னை : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
கூலி திரைவிமர்சனம்
18 Aug 2025சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதியன்று வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் கூலி.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அக்யூஸ்ட் படக்குழு
18 Aug 2025ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோரின்
-
கடுக்கா இசை வெளியீட்டு விழா
18 Aug 2025விஜய் கெளரிஷ் புரொடக்ஷன்ஸ் - நியந்த் மீடியா அண்ட் டெக்னாலஜி, மலர் மாரி மூவிஸ் - கௌரி சங்கர் ரவிச்சந்திரன் - ஆனந்த் பொன்னுசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் கட
-
த.வெ.க. மீது சீமான் விமர்சனம்
18 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் மீது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
18 Aug 2025டெல்லி : பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
-
ராயபுரம்: ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
18 Aug 2025சென்னை : ராயபுரம் மண்டலம் போஜராஜன் நகரில் 30.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாகனச் சுரங்கப்பாதையினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார
-
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
18 Aug 2025சென்னை, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் ஆர்.ஜே.சாய்
18 Aug 2025கனடா நாட்டின் டொராண்டோவில் உள்ள ஆர்.ஜே.சாய், தனது பிறந்த முன்னிட்டு இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துளார்.
-
மும்பையில் 3-வது நாளாக தொடர் கனமழையால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
18 Aug 2025மகாராஷ்டிர : மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வ
-
முன்னாள் குடியரசு தலைவர் போல் உயர வேண்டும்- சி.பி.ஆர்.
18 Aug 2025புதுடெல்லி : முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சி.பி.ஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.
-
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
18 Aug 2025கர்நாடக : கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவ
-
நேட்டோவை மறந்து விடுங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் ‘செக்’
18 Aug 2025வாஷிங்டன் : கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள் என்று ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கொடிக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
18 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தல்: தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா வெற்றி
18 Aug 2025தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றுள்ளார்.
-
டிரம்ப் - புதின் - ஸெலன்ஸ்கி பேச்சு: உலகளவில் நடக்கும் மிகப்பெரிய விளையாட்டு -நரவனே தகவல்
18 Aug 2025டெல்லி, ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை என்பது உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு என்று இந்திய முன்னாள் முப்படைகள் தளபதி எம்எம் நரவனே தெரிவித்துள்ளார்