எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சி.பி.ஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். இதை நிறைவேற்றும் வகையில் அவர் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ளார்.
துணை குடியரசு தலைவராக ஜெக்தீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து அப்பதவிக்கானத் தேர்தலில் தன் புதிய வேட்பாளரை தேர்வு செய்ய பாஜக ஆலோசித்தது. இதற்கான பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பெயரை அதிகாரபூர்வமாக பாஜகவின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா அறிவித்தார். பிரதமராக நரேந்திர மோடி அமர்ந்தது முதல் பாஜகவின் பெரும்பான எதிர்கால நடவடிக்கைகளை ஊடகங்களால் கணிக்க முடிவதில்லை. இந்தநிலையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வாகி உள்ளார்.
சி.பி.ஆர். என சுருக்கமாக அழைக்கப்படுபவரின் முமுப்பெயர் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன். இவர், திருப்பூரில் அக்டோபர் 20, 1957-ல் பிறந்தவர். அப்போது 1952 முதல் இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இருந்தார். இவரது நினைவால் சிபிஆரின் பெற்றோர்களான சி.கே.பொன்னுசாமி மற்றும் கே.ஜானகி அவருக்கு ராதாகிருஷ்ணன் எனப் பெயர் வைத்துள்ளனர்.
பிறகு 1962-ல் நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவராகவும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உயர்ந்தார். எனவே, சிபிஆரின் பெற்றோர்கள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் போல் அவர் உயர வேண்டும் என எண்ணி பெயர் வைத்துள்ளனர்.
இந்த நோக்கம் குடியரசு துணைத் தலைவராக அவர் தற்போது அமர இருப்பதால் நிறைவேறியதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த சி.பி.ஆர்., தனது 16 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார்.
இத்துடன் அதன் தோழமை அரசியல் கட்சியாக இருந்த பாரதிய ஜனசங்கத்திலும் சி.பி.ஆர். இணைந்திருந்தார். தூத்துக்குடியின் வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் பிபிஏ பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றார்.
கல்லூரிக் காலத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரராக இருந்த சி.பி.ஆர்., நீண்டதூர ஓட்டம், கைப்பந்து மற்றும் கிரிக்கெட்டிலும் இடம் பெற்றிருந்தார். சிபிஆருக்கு மனைவி ஆர்.சுமதி மற்றும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.
தமிழக அரசியலில் சி.பி.ஆர். காட்டிய தீவிரத்திற்கு 1974 முதல் பலன் கிடைக்கத் துவங்கியது. அந்த ஆண்டில் அவர் பாரதிய ஜன சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரானார்.
பாரதிய ஜன சங்கம் பின்னாளில் பாஜகவாக மாறிய பின்பும் சிபிஆரின் முக்கியத்துவம் அக்கட்சியில் தொடர்ந்தது. 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அவர் பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தார்.
அப்போது அவர் நதிகள் இணைப்பு, தீண்டாமை மற்றும் தீவிரவாதம் ஒழிப்பை தமிழகத்தில் வலியுறுத்தி 18,000 கி.மீ தூரம் 93 நாட்கள் ரத யாத்திரை நடத்தினார். இத்துடன், சிபிஆரும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றி இருந்தார். இதன் பலனாக, 1998 மக்களவை தேர்தலில் பாஜகவின் கோயம்புத்தூர் எம்பியானார் சி.பி.ஆர்.. அப்போது பாஜகவில் வென்ற 3 எம்பிக்களில் ஒருவராக சி.பி.ஆர். இருந்தார்.
பிறகு மீண்டும் 1999 மக்களவை தேர்தலிலும் சிபிஆருக்கு தொடர்ந்து இரண்டாவது முறை எம்பியாகும் வாய்ப்பு கிடைத்தது. 2012-ல் ஆர்எஸ்எஸ் நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஆர். ஆர்பாட்டம் நடத்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கைதானார்.
இந்த நிகழ்வு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. அடுத்து 2014 மக்களவை தேர்தலில் கோயம்புத்தூர் பாஜக வேட்பாளரானவர், இரண்டாவது நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்த தேர்தலில் தமிழகத்தின் பாஜக வேட்பாளர்களை விட சிபிஆருக்கு அதிகமான வாக்குகளாக 3,89,000 வாக்குகள் கிடைத்தன. அடுத்து 2019 மக்களவை தேர்தலில் சிபிஎம் வேட்பாளரை சிபிஆரால் வெல்ல முடியவில்லை.
பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் சிபிஆருக்கு சிறு, குறு மத்திய தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் இந்திய நார் வாரிய தலைவர் பொறுப்பு 2016 முதல் 2020 வரை கிடைத்தது. இவரது ஆதரவாளர்கள் சிபிஆரை, ‘தமிழகத்தின் மோடி’ எனவும் அழைப்பது உண்டு.
இதையடுத்து மேலும் உயர்வு பெற்ற சி.பி.ஆர்., பிப்ரவரி 12, 2023-ல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகும் வாய்ப்பும் கிடைத்தது.
தனது அரசியல் அனுபவத்தில் சி.பி.ஆர். பல வெளிநாடுகளுக்கும் பயணித்துள்ளார். இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், நார்வே, டென்மார்க், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, எகிப்து, அரபு நாடுகள், ஸ்வீடன், பின்லாந்து, பெல்ஜியம், ஹாலாந்து, துருக்கி, சீனா, மலேசியா, பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகியன இடம்பெற்றுள்ளன. ஜார்கண்டிலிருந்து மிகவும் முக்கியமான மாநிலமான மகாராஷ்டிராவின் ஆளுநராக சி.பி.ஆர். மாற்றலானார். இப்பதவியில் தொடர்ந்தவருக்கு நேற்று நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவி வகிக்கும் மூன்றாவது தமிழர் சி.பி.ஆர். இவருக்கு முன்பாக தமிழர்களாக சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனுடன் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
பேச்சுவார்த்தை ரத்து: இந்திய பயணத்தை தவிர்த்த அமெரிக்க குழு - அமலுக்கு வரும் 50 சதவீத வரி?
18 Aug 2025அமெரிக்கா : பேசசுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து இந்திய பயணத்தை அமெரிக்க குழு ரத்து செய்து 50 சதவீத வரியை அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
-
நடவடிக்கை எடுக்கப்படும்: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை
18 Aug 2025டெல்லி : பாராளுமன்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - தமிழக அரசு பெருமிதம்
18 Aug 2025சென்னை : தமிழ்நாடு, பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-08-2025.
18 Aug 2025 -
இன்றைய தங்கம் விலை
18 Aug 2025சென்னை, இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
-
தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகள்
18 Aug 2025சென்னை : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
ஆக 29 ல் வெளியாகும் சமுத்திரக்கனியின் வீரவணக்கம்
18 Aug 2025பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் இணைந்து நடித்திருக்கும் படம் வீரவணக்கம்.
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்
18 Aug 2025சென்னை : குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆரவு கோரினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்.
-
நிவின்பாலி - நயன்தாரா இணைந்து நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்
18 Aug 2025நிவின்பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப்குமார் எழுதி இயக்கியுள்ளனர்.
-
விடியல் பயணத்தில் ரூ.50 ஆயிரம் சேமித்த பெண்கள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
18 Aug 2025சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
-
த.வெ.க. மீது சீமான் விமர்சனம்
18 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் மீது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
கடுக்கா இசை வெளியீட்டு விழா
18 Aug 2025விஜய் கெளரிஷ் புரொடக்ஷன்ஸ் - நியந்த் மீடியா அண்ட் டெக்னாலஜி, மலர் மாரி மூவிஸ் - கௌரி சங்கர் ரவிச்சந்திரன் - ஆனந்த் பொன்னுசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் கட
-
திரையுலகில் 50 ஆண்டு நிறைவு: நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ.க. தலைவர் சந்திப்பு
18 Aug 2025சென்னை : திரையுலகில் 50 ஆண்டுகள் நிறை ஆனதையொட்டி நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் ஆர்.ஜே.சாய்
18 Aug 2025கனடா நாட்டின் டொராண்டோவில் உள்ள ஆர்.ஜே.சாய், தனது பிறந்த முன்னிட்டு இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துளார்.
-
மும்பையில் 3-வது நாளாக தொடர் கனமழையால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
18 Aug 2025மகாராஷ்டிர : மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வ
-
கூலி திரைவிமர்சனம்
18 Aug 2025சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதியன்று வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் கூலி.
-
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் திருமாவளவன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
18 Aug 2025சென்னை, தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது” என ‘மாற்றுப் பார்வை’யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளது, பல்வேறு தரப்பிலும் கடு
-
ராணுவ பயிற்சியில் படுகாயமடைந்ததால் மாற்றுத் திறனாளி: வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம்
18 Aug 2025புதுடெல்லி, ராணுவ பயிற்சியில் படுகாயமடைந்ததால் மாற்றுத்திறனாளி மீது வழக்கு பதிவு செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அக்யூஸ்ட் படக்குழு
18 Aug 2025ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோரின்
-
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தல்: தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா வெற்றி
18 Aug 2025தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றுள்ளார்.
-
முன்னாள் குடியரசு தலைவர் போல் உயர வேண்டும்- சி.பி.ஆர்.
18 Aug 2025புதுடெல்லி : முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சி.பி.ஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
18 Aug 2025சென்னை : துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
-
நேட்டோவை மறந்து விடுங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் ‘செக்’
18 Aug 2025வாஷிங்டன் : கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள் என்று ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
18 Aug 2025கர்நாடக : கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவ
-
டிரம்ப் - புதின் - ஸெலன்ஸ்கி பேச்சு: உலகளவில் நடக்கும் மிகப்பெரிய விளையாட்டு -நரவனே தகவல்
18 Aug 2025டெல்லி, ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை என்பது உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு என்று இந்திய முன்னாள் முப்படைகள் தளபதி எம்எம் நரவனே தெரிவித்துள்ளார்