முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளவை சேர்ந்த 11 மாணவர்கள் கைது

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      இந்தியா
Poothai-2025-02

Source: provided

மங்களூரு : மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம், மங்களூருவில் ரகசிய தகவலின் பேரில் ஷீதல் அழகூர் தலைமையிலான மங்களூர் தெற்கு காவல் துறை குழு அட்டாவரில் உள்ள கப்ரிகுட்டே மசூதிக்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை மாலை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 12.26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட கஞ்சா ஒடிசாவில் இருந்து வரவழைக்கப்பட்டு ஏழு பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்தது. மேலும், ரூ.2,000 மதிப்பிலான எடை எந்திரங்கள் மற்றும் ரூ.1.05 லட்சம் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.3.52 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் அழிப்பு இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கேரளத்தைச் சேர்ந்த 11 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காண தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் மேலும் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து