எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (87 ரன்) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்டார். போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே அவர் பெவிலியன் திரும்பினார். 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் இந்த ரன்னை எடுத்தார். அவர் ரன் அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அவர் தொடர்ந்து பேட்டிங் செய்திருந்தால் முச்சதம் அடிக்கும் வாய்ப்பு கூட பிரகாசமாக இருந்தது. அதனையும் அவர் தவறவிட்டார் என்றே சொல்லலாம்.
________________________________________________________________________________________
இங்கிலாந்து கேப்டன் புதிய சாதனை
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் சதம் விளாசி அசத்தினார். அவர் 117 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இந்த சதத்தின் மூலம், உலகக் கோப்பைத் தொடரில் அதிக சதங்கள் அடித்துள்ள வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் இது அவரது 5-வது சதமாகும்.
________________________________________________________________________________________
ஆஸி., தொடர் குறித்து ஜடேஜா
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும், அணியில் சேர்க்க முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகம் தன்னிடம் கூறியதாகவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்த பிறகு ஜடேஜா பேசியதாவது: 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவது என்னுடைய கைகளில் இல்லை. ஆனால், 2027 உலகக் கோப்பையில் நான் விளையாட விரும்புகிறேன். இந்த விஷயத்தில் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணியை தேர்வு செய்தது போன்று வித்தியாசமாக யோசிக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம்பெறாததன் பின்னணியில் கண்டிப்பாக ஏதேனும் காரணம் இருக்கும் என்றார்.
________________________________________________________________________________________
தனித்தனியாக பேசிய லாரா
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் முன்னாள் வீரர் பிரையன் லாரா தனித்தனியாக பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவடைந்த பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களின் அறைக்குச் சென்றார். மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுடன் அவர் எந்த ஒரு பொதுவான ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி மற்றும் கேப்டன் ராஸ்டன் சேஸ் இருவருடனும் தனித்தனியாக பேசினார். மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் அறையில் அவர் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நிலை மற்றும் அதன் வளர்ச்சி குறித்து அவர் பொதுவான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
நாங்கள் செய்ததுபோன்று செயல்படுங்கள்: பாகிஸ்தானுக்கு ஆப்கான் அமைச்சர் வேண்டுகோள்
11 Oct 2025புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 92,000
11 Oct 2025சென்னை : தங்கத்தின் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்த நிலையில் மாலை மேலும் ரூ. 600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 92,000 ஆக உயர்ந்துள்ளது.
-
முதல் முறையாக டாஸ் வென்ற சுப்மன் கில்லை கலாய்த்த வீரர்கள்
11 Oct 2025புதுடெல்லி : முதல் முறையாக டாஸ் வென்ற கேப்டன் சுப்மன் கில்லை வீரர்கள் கலாய்த்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம்: திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது: கமல் எம்.பி.
11 Oct 2025சென்னை : கார் வழிமறிக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது என்று கமல் எம்.பி. தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-10-2025.
11 Oct 2025 -
பீகார் சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 12 தொகுதிகள்?
11 Oct 2025ராஞ்சி : பீகார் சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 12 தொகுதிகள் கேட்டுள்ளது.
-
மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை
11 Oct 2025சென்னை : தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (அக்.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை: நயினார் நாகேந்திரன் கேள்வி
11 Oct 2025சென்னை : மகளிர் உரிமைத் தொகை குறித்து நயினார் நாகேந்திரன் முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அனில் அம்பானியின் உதவியாளர் கைது
11 Oct 2025புதுடெல்லி : அனில் அம்பானியின் உதவியாளரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
-
35,440 கோடி ரூபாய் மதிப்பிலான 2 வேளான் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி
11 Oct 2025புதுடெல்லி : புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில், ரூ.35,440 கோடி மதிப்பிலான இரண்டு வேளாண் திட்டங்களை ப
-
கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய மாணவர் பலி
11 Oct 2025சென்னை : சென்னையில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழந்தான்.
-
சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா? - அன்புமணி ராமதாஸ்
11 Oct 2025சென்னை : சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
11 Oct 2025விருதுநகர் : சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. காயமோ, உயிரிழப்பு குறித்த தகவலோ இதுவரை வெளியாகவில்லை.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தானை சேரந்தவர் கைது
11 Oct 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் உளவு பார்த்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை : மத்திய அரசு விளக்கம்
11 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: 2 குழந்தைகளை கொன்று பெண் தூக்கிட்டு தற்கொலை
11 Oct 2025பெங்களூரு : 2 குழந்தைகளை கொன்று இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபர் கைது
11 Oct 2025பெங்களூரு : திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
-
விமானம் மீது மோதிய பறவைகள்: டெல்லி புறப்பட்ட விமனம் அவசர தரையிறக்கம்
11 Oct 2025டெல்லி : டெல்லி புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதையடுத்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 1,500 பேர் விரைவில் பணி நிரந்தரம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
11 Oct 2025சென்னை : 2026 பிப்ரவரிக்குள் கோவில்களில் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
11 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வருகிற 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ்
11 Oct 2025காசா : காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையடுத்து இஸ்ரேல் படைகள் வாபஸ் பெற்றனர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திருமாவளவன் நேரில் நிதியுதவி
11 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களை திருமாவளவன் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கினார்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
11 Oct 2025சென்னை : தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்ற நிலையில் இதுவரை 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட
-
நோபல் பரிசு விவகாரம்: ட்ரம்பின் அமைதி முயற்சிக்கு புதின் பாராட்டு
11 Oct 2025மாஸ்கோ : ட்ரம்பின் அமைதி முயற்சிகளுக்கு புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
காலை உணவுத்திட்ட சம்பள விவகாரம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
11 Oct 2025சென்னை : காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.