முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 குழந்தைகள் பலியான விவகாரம்: விதிமீறலில் ஈடுபட்ட மருந்து நிறுவனம்

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2025      இந்தியா
Medisan-2 2025-10-04

Source: provided

புதுடெல்லி : காஞ்சீபுரத்தை சேர்ந்த சிரேசன் பார்மா என்ற அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்ததில், அந்த நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

விஷத்தன்மை வாய்ந்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குடித்ததால், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 22 குழந்தைகள் பலியாகி உள்ளனர். அந்த மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சீபுரத்தை சேர்ந்த சிரேசன் பார்மா என்ற அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்து உள்ளனர்.

இதில் அந்த நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு லைசென்ஸ் பெற்றுள்ள அந்த நிறுவனம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை பலமுறை மீறிய போதிலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தடையின்றி இயங்கி வந்துள்ளது.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக விதிகளின்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்ற தங்கள் தயாரிப்புகளை ‘சுகம்’ தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். ஆனால் சிரேசன் பார்மா மருந்து நிறுவனம் தங்கள் தயாரிப்புகள் குறித்து மேற்படி தளத்தில் எதுவும் பதிவு செய்யவில்லை. மேலும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகத்தின் தரவுத்தளத்தில் இந்த நிறுவனம் எந்த வகையிலும் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

இதைப்போல இந்த விவகாரத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மீதும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அதிகமான குழந்தைகள் இறந்ததை தொடர்ந்து சிரேசன் பார்மா நிறுவனத்தில் ஆய்வு நடத்துமாறு தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு மத்திய பிரதேச அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி கடந்த 1 மற்றும் 2-ந்தேதிகளில் தமிழக அரசு சார்பில் மேற்படி நிறுவனத்தில் தணிக்கை நடந்ததாகவும், அதன் தகவல்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுக்கழக அலுவலகத்துக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து