எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவிலான 1,217 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 294 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 3,12,082 பயனாளிகளுக்கு 858 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- கன்னியாகுமரி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள் வருமாறு., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சுசீந்திரம், மண்டைக்காடு, விலவூர், உண்ணாமலைக்கடை, திருவிதாங்கோடு, கடையால், அருமணை மற்றும் ஆற்றூர் ஆகிய பேரூராட்சிகளில் 140 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், குழித்துறை நகராட்சி – மார்த்தாண்டத்தில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன தினசரி சந்தை, கிள்ளியூர் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சிகளில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையங்கள், பத்மாபுரம் நகராட்சியில் 6 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், நாகர்கோவில் மாநகராட்சியில் சர்.சி.வி.ராமசாமி பூங்காவில் 3 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் அறிவியல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோதநல்லூர் பேரூராட்சியில் 73 லட்சம் ரூபாய் செலவில் தினசரி சந்தை, அஞ்சுகிராமம் மற்றும் திங்கள் நகர் பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், வேம்பனூர் தேரூர் குளத்தில் 1 கோடி ரூபாய் செலவில் பறவைகள் சரணாலயம் மற்றும் அபிவிருத்திப் பணிகள், 1 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட தெங்கம்புதூர் பால்குளம் மற்றும் ஆளூர் சமஞ்சான்குளம், நாகர்கோவில் மாநகராட்சியில் 85 லட்சம் ரூபாய் செலவில் உலர் குப்பைகள் பலவகையாக தரம் பிரிக்கும் மறுசுழற்சி மையம், குளச்சல் நகராட்சியில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள், 11 லட்சம் ரூபாய் செலவில் உரக்கிடங்கில் அமைக்கப்பட்ட கூரை மற்றும் 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான குழாய்கள், குளச்சல் நகராட்சியில் 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் சிறுபாலம், கொல்லங்கோடு நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 6 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள், பத்மநாபபுரம் நகராட்சி மருந்துகோட்டை உரக்கிடங்கு வளாகத்தில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 20 கே.எல்.டி. கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை நகராட்சிகளில் 4 கோடியே 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சாலைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நீரோடி – இரயுமன்துறை சாலையில் 35 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள T வடிவ Groynes மற்றும் 10 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சாந்தபுரம் சாலை, கோட்டார் - தர்மபுரம் சாலை, அஞ்சுகிராமம் சாலைகள், இடை வழி தடத்திலிருந்து இரு வழித் தடமாக உறுதிப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்ட நாகர்கோவில் கடற்கரை சாலை, ஒரு வழி தடத்திலிருந்து இடை வழி தடமாக மாற்றி உறுதிபடுத்தப்பட்ட புதிய வீராணமங்களம் சாலை, வெள்ளமடம் -சுசீந்திரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட ஓடுதளம், ஒரு வழி தடத்திலிருநுது இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டு சிறுபாலம் கட்டப்பட்டுள்ள ஈத்தாமொழி சந்திப்பு - பெரியகாட்டுத்துறை சாலை, குளச்சல் -திருவட்டார் சாலையில் மேம்படுத்தப்பட்ட ஓடுதளம், ஆரல்வாய்மொழி -நெடுமங்காடு சாலையில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம், மேம்படுத்தப்பட்ட தேனாம்பாறை சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 66 கோடியே 52 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், சிறப்பு உதவி திட்டம், முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம், நம்ம ஊரு நம்ம அரசு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் கீழ் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்கள், சாலைப் பணிகள், தெருவிளக்குகள், சமுதாய நலக்கூடங்கள், சிமெண்ட் சாலைகள், பொது நூலகங்கள், எரிவாயு தகனமேடைகள், அங்கன்வாடி மையங்கள், உணவு தானிய கிடங்குகள், மரக்கன்றுகள், சிறு பாசன குளங்கள் புனரமைப்பு, பள்ளிக் கட்டிடங்கள், பொது விநியோகக் கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பள்ளிகளில் சத்துணவு சமையலறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட 595 முடிவுற்றப் பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் கன்னியாகுமரி மற்றும் பேச்சிப்பாறையில் 50 லட்சம் ரூபாய் செலவில் மதி அனுபவ அங்காடிகள் என மொத்தம், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
25 Feb 2026- ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவாரம்பம்.
- கோவை கோணியம்மந் கிளி வாகனம்.
- திருச்செந்தூர் முருகன் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளி சப்பரம். அம்பாள் இந்திர வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
25 Feb 2026


