எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்?
சீனப் பெருஞ்சுவர், இதனைப்பற்றி கேள்விப்பட்டிராதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட 2,000 கி.மீ நீளமுடைய இந்த பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. எங்கோ சீனாவில் இருக்கும் இந்த இடத்தை பற்றி அறிந்திருக்கும் நமக்கு ராஜஸ்தானில் இருக்கும் கும்பல்கர்க் கோட்டையை (Kumbhalgarh Fort) பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கும்பல்கர்க் கோட்டையை (Kumbhalgarh Fort) பற்றி சில தகவல்கள் இதோ!
சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது. பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்றர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் எல்லை சுவர்களின் நீளம் மட்டுமே சுமார் 36 கி.மீ நீளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 36 கி.மீ சுவர் தான் உலகளவில் மிகபெரியதான சீன பெருஞ்சுவருக்கு அடுத்து மிகப்பெரிய சுவராக அமைந்துள்ளது. இந்த எல்லை சுவரின் முன் சுவர்களின் அகலம், சுமார் 15 அடிகள் தடிமனாக அமைந்திருக்கும். மேலும் இந்த கோட்டையில் 7 பலத்த பாதுகாப்பான நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன.
இந்த கோட்டைக்குள் சுமார் 360 கோவில்கள் உள்ளதாகவும், அவற்றில் 300 பழமைவாய்ந்த சமண மத கோவில்களும், 60 இந்து மத கோவில்களும் உள்ளதாக கூறுகின்றனர். இந்த கோட்டைக்குள் ஏன் இத்தனை கோவில்களை கட்டியுள்ளனர் என்பதும் மர்மமாகவே உள்ளது. இதுபோல் பல மர்மங்களை உள்ளடக்கியதாக கருதப்படும் இந்த கோட்டைச் சுவர் பல நூற்றாண்டுகளை கடந்தும் பெருமளவில் சேதமாகாமல் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் இந்திய பெருஞ்சுவர் என அழைக்கப்படும், உலகின் 2வது மிகப்பெரிய பெருஞ்சுவரான இதனை பற்றி உலகில் பலரும் அறியாமல் உள்ளது தான் வியப்பையும், மர்மத்தையும் ஏற்படுத்துகிறது.
மேலும், இந்த சுவர் கட்டப்பட்டது பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றையும் புராணத்தில் கூறியுள்ளனர்.
கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) வரலாறு : 1443-ம் ஆண்டு இந்த கோட்டை சுவரை மன்னர் ராணா கும்பா கட்ட முயற்சித்த போதெல்லாம் மீண்டும் மீண்டும் இன்னல்கள் வந்த வண்ணமே இருந்துள்ளன. அப்போது ராணா கும்பாவிடம் ஆன்மிகவாதி ஒருவர், யாராவது உயிர்பலி கொடுக்க தாமாக முன்வந்தால் இந்த சுவரை கட்ட வரும் தடைகள் அனைத்தும் விலகும் என்று யோசனை கூறியுள்ளார்.
மேலும், அவ்வாறு நரபலி கொடுக்கப்படும் நபரின் தலை விழும் இடத்தில் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்றும், அந்த நபரது உடல் விழும் பக்கத்தில் கோட்டையும், கோட்டைச் சுவரும் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். எதிர்பார்த்தது போலவே பலகாலமாக உயிர் பலி கொடுக்க யாரும் தாமாக முன்வராத சூழ்நிலையே நிலவியுள்ளது.
பின்னர் ஒருநாள் யாத்ரீகர் ஒருவர் உயிர்பலி கொடுக்க முன்வந்துள்ளார். இதையடுத்து சடங்குகள் சம்பிரதாயத்துடன் அந்த நபரின் உயிர் பலியிடப்பட்டுள்ளது. இதனை விளக்கும் விதமாகவும் அந்த தியாகத்தை போற்றும் விதமாகவும் அந்த கோட்டையின் பிரதான வாசலான Hanuman Pol அருகே நினைவு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
எந்த தாக்குதல்களாலும் நிலைகுலையாத இந்த கோட்டை, ஒரே ஒரு முறை மட்டுமே போரில் தோல்வியை சந்தித்துள்ளது. மொகலாய பேரரசர் அக்பர், அம்பரின் மன்னன் ராஜா மான் சிங், மார்வாரின் அரசர் ராஜா உதய் சிங் போன்ற அனைவரும் ஒன்றினைந்து இந்த கோட்டையை எதிர்த்து போரிட்டபோது ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 360 கோவில்களை உள்ளடக்கியுள்ள இந்த கோட்டை, உலகின் அறியப்படாத மர்மம் நிறைந்த புதையலாகவே விளங்குகிறது.இந்த மலைக்கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீட்டரில் அமைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.