எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி அருகே ஏடிஎம் நம்பரை கேட்டு நூதன முறையில் ரூ.1.26 லட்சம் பணத்தை மோசடி செய்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
16 இலக்க எண்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, அடைக்கலாபுரம், ஜெபஸ்தியார் தெருவைச் சேர்ந்தவர் பேரின்ப நாடார் மகன் பால்ராஜ் (54). கடந்த 25 ஆண்டுகளாக பனைத்தொழில் செய்து வருகிறார். ஆறுமுகநேரி கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து பல ஆண்டுகளாக வரவு செலவு செய்து வந்ததுள்ளார். தனது வங்கி கணக்கிற்கு ஏடிஎம் கார்டு வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 31.01.2017-ம் தேதி மதியம் அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் பேங்க் மேனேஜர் பேசுவதாகவும், உங்களுடைய ஏடிஎம் லாக் ஆகிவிட்டதால், கார்டில் முன்பக்கமுள்ள 16 இலக்க எண்ணை தெரிவிக்கும்படி கேட்டுள்ளார்.
அதிர்ச்சி
இதையடுத்து பால்ராஜ் தனது ஏடிஎம் கார்டு நம்பரை தெரிவித்துள்ளார். அதன்பின் மீண்டும் தொடர்பு கொண்டு கைப்பேசியில் வந்த குறுந்தகவலை (OTP Password)) கேட்டவுடன், அதையும் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் தனது கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலை எடுத்துப் பார்த்தபோது, தனது சேமிப்பு கணக்கில் இருந்த ரூ. 1,36,605.47/-ம் பணத்தில், தற்போது இருப்பு ரூ 9,792.47/- பணம் மட்டும் இருப்பதை தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆறுமுகநேரி கனரா வங்கி மேனேஜரை சென்று பார்த்து விபரம் கேட்டதாகவும், அதற்கு மேனேஜர் தங்கள் வங்கியிலிருந்து யாரும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
எஸ்.பி.யிடம் புகார்
மேலும், பால்ராஜ் கணக்கிலிருந்து ரூ. 1,27,919/- பணத்தை மனுதாரருக்கு போன் செய்த நபர் ஆன்லைன் மூலம் Paytm-க்கு மாற்றம் செய்துவிட்டதாக தெரிவித்து, பால்ராஜின் வங்கி கணக்கிற்குரிய ஸ்டேட்மென்ட் நகலை கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பால்ராஜ் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி கண்காணிப்பின் கீழ் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா பிரின்ஸஸ் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் விஜய அனிதா வழக்கு பதிவு செய்துள்ளார்.
2 பேர் கைது
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடியும், துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மாவட்ட குற்ற ஆவணக்கூடம் (பொ) மாவட்ட குற்றப் பிரிவு அறிவுரையின் படியும், காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, தாளமுத்து நகர் உதவி ஆய்வாளர் சாம் சுந்தர் மற்றும் காவலர்கள் சகிதம் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இது தொடர்பான குற்றவாளிகள் மேற்கு வங்கத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கு வங்கம் மாநிலம் சென்று கூக்ளி மாவட்டம், மோக்ரா காவல் நிலையம் சரகத்தில் இருந்த கமாலுதீன் மகன் ஜாவீத் அக்தர் (19), மேற்கு வங்கம், கூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த லால் முகம்மது மகன் காதீர் உசைன் (37) ஆகிய இருவரையும் மேற்கு வங்கம் சென்று அவர்களது இருப்பிடம் கண்டறிந்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
வெங்கட் பிரபு வெளியிட்ட அனலி பர்ஸ்ட் லுக்
01 Dec 2025சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், தினேஷ் தீனா இயக்கியுள்ள படம் அனலி. சிந்தியா லூர்டே முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-12-2025.
01 Dec 2025 -
துல்கர் சல்மானின் 40-வது படம் ஐ அம் கேம்
01 Dec 2025துல்கர் சல்மானும், ஜோம் வர்கீசும் இணைந்து தயாரிக்கும் படம் ஐ அம் கேம்.
-
ப்ரைடே திரை விமர்சனம்
01 Dec 2025நாயகன் அனிஷ் மாசிலாமணியும் கே.பி.ஒய் தீனாவும் சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கும் தருவாயில் தீனாவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது.
-
ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்
01 Dec 2025கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து எதிர்பாராமல் உயிரிழக்கும் ரவுடி சூப்பர் சுப்பராயனை, அவரது மகன் சுனில் தேடி வருகிறார்.
-
தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பார்லி., மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கேக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 151 ஆக உயர்வு
01 Dec 2025ஹாங்காங், ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 151 பேர் ஆக உயர்ந்துள்ளது.
-
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்க குளங்கள் அமைக்க வேண்டும்: ஐகோர்ட்
01 Dec 2025சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை ப
-
அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
01 Dec 2025புது டெல்லி, சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவ
-
மகர விளக்கு சீசன்:கடந்த 15 நாட்களில் சபரிமலையில் ரூ.92 கோடி வருவாய்
01 Dec 2025திருவனந்தபுரம், மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
அஞ்சான் (ரீ எடிட்) திரை விமர்சனம்
01 Dec 2025மும்பை தாதா சூர்யா, அவரது நண்பர் வித்யுத்.
-
பீகார் சட்டசபை சபாநாயகரை தேர்வு செய்ய இன்று தேர்தல் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
01 Dec 2025பாட்னா, பீகார் சட்டப்பேரவை கூடியதை தொடர்ந்து புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகர் நரேந்திர நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
-
பீகார் தோல்வியை மனதில் வைத்து கொண்டு அமளியில் ஈடுபட கூடாது: எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் வேண்டுகோள்
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பீகார் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து கொண்டு எதிர்க்கட்சியினர் அமளியி
-
ரோஜா மல்லி கனகாம்பரம் - படப்பிடிப்பு நிறைவு பெற்றது
01 Dec 2025மாயாண்டி குடும்பத்தார் படத்தின் தயாரிப்பாளரான யுனைடெட் ஆர்ட்ஸ் எஸ். கே. செல்வகுமார் தயாரிப்பில், கே. பி. ஜெகன் இயக்கத்தில், உருவாகி வரும் படம் ரோஜா மல்லி கனகாம்பரம்.
-
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசல்: 6 பேர் திடீர் மயக்கம்
01 Dec 2025தஞ்சாவூர், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசரில் சிக்கி 6 பேர் மயக்கமடைந்தனர்.
-
கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
01 Dec 2025சென்னை : சென்னை புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
-
உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளர் இந்தியா: ஜனாதிபதி முர்மு பெருமிதம்
01 Dec 2025புதுடெல்லி, உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு, விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய
-
55.3 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் புதிய உச்சம் தொட்டது
01 Dec 2025சென்னை, 55.3 சதவீத மதிப்பெண்களுடன் எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
-
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
01 Dec 2025சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கார்கே, ராகுல் தலைமையில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
01 Dec 2025கொழும்பு, இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
-
மீண்டும் உச்சத்தை தொட்ட ஒரு சவரன் தங்கம் விலை..! ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
01 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
குமரியில் இளம்பெண் தற்கொலை
01 Dec 2025கன்னியாகுமரி, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி புதிய மனுத்தாக்கல்
01 Dec 2025ராஜஸ்தான் : ஆசாராம் பாபுவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
-
புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி: 2 மசோதாக்களை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற கூட்டத்தொடரில் புகையிலை, பான் மசாலாவுக்கு 2 புதிய வரி மசோதாக்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.



