எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி மூலம் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் அம்மா அவர்களின் ஆட்சியில் கூட்டுறவுத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்து இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
2016 நவம்பர் 23ந் தேதி 1755 கோடி ரூபாய் நபார்டு வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களது மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் இதுவரை எவ்வித ்டு நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பணத்தினை முதலீடு செய்து பயன்பெறலாம்.
கூட்டுறவு வங்ககளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 சதவீதத்திலிருந்து 21 சதவீதம் ஊதிய உயர்வினை அம்மா வழங்கினார்கள். மேலும் அனைத்து பணியாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு வசதி செய்து தரப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் நியாய விலைக்கடைகள் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை மலைப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கும் வழங்கி இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் 31.03.2017 முடிய மாநில அளவில் 58,57,408 விவசாயிகளுக்கு ரூ.27,422.22 கோடியும், மதுரை மாவட்டத்தில் மட்டும் 92,384 விவசாயிகளுக்கு ரூ.569.85 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 19,45,568 விவசாயிகளுக்கு ரூ.1,284.58 கோடியும், மதுரை மாவட்டத்தில் 52,777 விவசாயிகளுக்கு ரூ.22.75 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 1065 பயனாளிகளுக்கு ரூ.15கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் இன்று (22.08.2017) வழங்கப்படவுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு பல் உதவிகளை கூட்டுறவு சங்கம் மூலம் செய்து வரும் முதல் அரசு தமிழக அரசு தான். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மிகவும் பழமையான வங்கி ஆகும். இந்த வங்கி 43 கிளைகள் கொண்டு பல்வேறு கடன் உதவிகள் மற்றும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
கூட்டுறவு வங்கி மூலம் தான் சில பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் இக்கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் அம்மா மருந்தகம் 15 சதவீதம் தள்ளுபடி விற்பனையில் ஏழை, எளிய மக்களுக்கு மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை நியாயவிலைக்கடை மூலம் வழங்கி வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுமார் 2.5 இலட்சம் குடும்ப அட்டைகள் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விபரங்களை குறுஞ்செய்தி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் அனைத்து ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இ.சேவை மையம் தொடங்கப்பட்டு, இதன் மூலம் பொதுமக்களுக்கு சாதி சான்றிதழ், ண உதவி நலத்திட்ட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் சார்பில் சுகாதாரத்துறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துக்காப்பீட்டு திட்டமும், மாவட்ட தொழில் மையம் மூலம் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற 25 சதவீத மானியம் வழங்கும் திட்டமும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ண நிதியுதவி திட்டமும், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகையாக ரூ.18000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
முன்னதாக இவ்விழாவில் 9 நபர்களுக்கு ரூ.3,15,000 மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் கடன் உதவித்தொகையும், 758 நபர்களுக்கு ரூ.1,74,15,000 மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தொகையும், 214 நபர்களுக்கு ரூ.1,77,79,600 மதிப்பில் முதலீட்டுக்கடன் தொகையும், 3 நபர்களுக்கு ரூ.12,00,000 மதிப்பில் வீட்டு அடமானக் கடன் தொகையும், 10 நபர்களுக்கு ரூ.29,70,000 மதிப்பில் சம்பளக்கடன் தொகையும், 49 நபர்களுக்கு ரூ4,90,000 மதிப்பில் சிறு வணிக கடன் தொகையும், 22 நபர்களுக்கு ரூ.11,01,26,322 மதிப்பில் பணியாளர் சிக்கன நாணயச்சங்க கடன் தொகையும் என மொத்தம் 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அனீஷ்சேகர், மண்டல இணைப்பதிவாளர் வி.எம்.சந்திரசேகரன், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் பி.செந்தில்குமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி லிட்., பெருந்தலைவர் கே.துரைபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


