எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சார்பில், தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 24-வது ஆண்டு அமர்வின் மூன்று நாள் மாநாட்டின் நிறைவு விழா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில் ஒவ்வொருவரும் வரலாற்று உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் மனித பண்பாட்டு வரலாற்றை நல்ல முறையில் அறிந்துகொள்ளவதுடன் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்றார். பல்வேறு மாநிலங்கள், தேசங்கள், மற்றும் உலக வரலாறுகளை படிப்பதன்; மூலம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பதையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றியும் அதற்கு எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளவதோடு மக்களுiடைய நலனுக்கு என்னவெல்லாம் செய்தார்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இன்றைய இளைய சமூதாயத்தினர் வரலாற்றை முறையாக படிப்பதன் மூலம் அவர்கள் ஒரு சிக்கலான சூழலில் சரியான மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு வரலாற்று அறிவு பெரிதும் உதவும் என்றார். இன்றைய சூழலில் மாணவர்கள் தேசிய மற்றும் உலக வரலாறு பற்றிய தெளிவான அறிவை பெற்றிருந்த போதிலும் தத்தம் பகுதியைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவங்களை அவர்கள் சரிவர தெரிந்திருக்கவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தத்தம் பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு முதலில் கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வரலாற்று பாடத்தின் முக்கியத்துவம் பற்றியும் வரலாற்றில் சிறப்பு பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை கோடிட்டு காட்டி அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திரு. எஸ்.முத்தையா, வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளர், நிறைவு விழா பேருரையாற்றினார். அவர்தம் பேருரையில் வரலாறு என்பது அனைவரும் ஆர்வத்துடன் படிக்கக் கூடிய பாடமாகும். வரலாறு படிக்கும் மாணவர்களிடம் வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ள செய்தியாக மட்டும கற்பிக்காமல் அதனை ஒரு கதை வடிவில் கற்பிப்பதன் மூலம் அவர்களிடையே ஒரு ஆர்வத்தை உருவாக்க முடியும் என்றார். அவர் மேலும் பேசுகையில் வரலாறு, புவியியல், குடிமையியல், சுற்றுப்புறவியல் இவை நான்கும் தனித்தனிப் பாடங்களாக 3ஆம் வகுப்பு முதல் கற்றுத் தரவேண்டும். அதோடு அந்தந்த பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவத்துவத்தையும் கற்றுத்தருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு எனவே ஒரு மனிதன் குறைந்தது ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி தினந்தோறும் எழுத வேண்டும். அது வெளியீட்டிற்காக அல்ல. அது தன்னுடைய குழந்தைகள், மற்றும் சந்ததியினர் தங்களது முன்னோர்கள் எந்த சூழ்நிலைகளில் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய உதவும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் தனது வாழ்த்துரையில் வரலாற்றை படிக்கும் மாணவர்களுக்கு எந்தெந்த துறைகளிலெல்லாம் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன என்பதை விளக்கமாக விவரித்தார். குறிப்பாக அருங்காட்சியகத் துறை, தொல்லியல் துறை, புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் துறை, இதுபோன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றார். எனவே வரலாறுபடிக்கும் மாணவர்கள் சீரிய முறையிலும் ஆர்வத்துடனும் ஆழமாகவும் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொடைக்கானல் மதர்தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜானகி, முனைவர் என்.ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் கருணாநந்தம், தலைவர், வரலாற்றுப் பேரவை, மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஜெகதீசன், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வரலாற்றுத் துறை பேராசிரியர் (பொ) முனைவர் கே.கிரு~;ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜி.பரந்தாமன் உதவிப் பேராசிரியர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



