எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், பிப்.10 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான லஞ்ச ஊழல் வழக்குகளை மீண்டும் புதுப்பிக்க தேவையான ஆவணங்களை சுவிட்சர்லாந்து நாட்டு அதிகாரிகளிடம் இருந்து வாங்கித்தர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது பல்வேறு பழைய ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை தூசிதட்டி மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்ற கிலானி மறுத்துவிட்டார். இதையடுத்து கிலானியை நேரில் ஆஜராகும்படி சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை கண்டிப்பாக புதுப்பித்தே ஆகவேண்டும் என்றும், அந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சுவிஸ் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து கிலானி பெற்றே தீரவேண்டும் என்றும் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி ஆணை பிறப்பித்துள்ளார்.
சுவிஸ் நாட்டு அதிகாரிகளுக்கு இது தொடர்பாக பிரதமர் கிலானி ஒரு கடிதம் எழுதவேண்டும். அப்போதுதான் கிலானிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார். ஆசிப் அலி சர்தாரி தனது ஊழல் பணத்தை சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார் என்றும், இதன் மதிப்பு 6 கோடி டாலர் என்றும் கூறப்படுகிறது. இந்த 6 கோடி டாலர் பணத்தை பாகிஸ்தானுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றால் சுவிஸ் நாட்டு அதிகாரிகளுக்கு கிலானி கடிதம் எழுதியே தீரவேண்டும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார்.
பிரதமர் கிலானி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருகிற 13 ம் தேதி கிலானி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அதே சுப்ரீம் கோர்ட்டில் கிலானி மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மேல் முறையீட்டு மனுவின் மீது நடந்த விசாரணையின்போதுதான் கிலானிக்கு மேற்கண்ட உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –06-02-2026
06 Feb 2026 -
நெல்லை வடக்குபச்சையாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
06 Feb 2026நெல்லை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு அணையில் இருந்து இன்று முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வ
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
06 Feb 2026சென்னை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான்: மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் 31 பேர் பலி - பலர் படுகாயம்
06 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள் மேலும் இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்
-
மியான்மரில் நிலநடுக்கம்
06 Feb 2026நைப்பியிடா, மியான்மரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நேபாளத்தில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
06 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் திருமணத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
-
பாக்.கில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
06 Feb 2026லூகூர், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 பயங்கரவாதிகள் சுட்
-
தருமபுரி: வாணியாறு அணையில் 55 நாள்களுக்கு நீர் திறக்க உத்தரவு
06 Feb 2026தருமபுரி, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூற
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மின்னஞ்சலில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்
06 Feb 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க த.வெ.க.
-
'புராஜெக்ட் வால்ட்' திட்டம் மூலம் பாகிஸ்தானில் 13 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு
06 Feb 2026நியூயார்க், 'புராஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
06 Feb 2026சென்னை, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
-
சிங்கப்பூரில் ரூ. 1.9 கோடி மோசடி: இந்திய வம்சாவளிக்கு சிறை
06 Feb 2026சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.
-
பீகார் தேர்தல் முடிவை எதிர்த்த பிரசாந்த் கிஷோர் கட்சி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
06 Feb 2026பாட்னா, பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த பிரசாந்த் கிஷோர் கட்சியின் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து தள்ளுபடி செய்தது.


