முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பையோனிக் தோல்

இன்றைய நவீன யுகத்தில் மனிதர்களைப் போன்றே உணர்வுகள் கொண்ட ரோபோக்களை கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ரோபோக்களின் கை, கால்களில் மனிதனை போன்று தொடு உணர்ச்சியை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3டி அச்சிடப்பட்ட தொடுதிரை சென்சார்களை பயன்படுத்தி, 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பியோனிக் தோலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ரோபோக்களுக்கு தொடுதல் உணர்ச்சியை கொடுத்துள்ளனர், மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர். 4 அடுக்குகளை கொண்ட, 3D பிரின்டர் பயன்படுத்தி மின்னணு உணர்ச்சி கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். வருங்காலத்தில் உணர்வுகளுடன் சுயமாக சிந்திக்கும் திறனையும் ரோபோக்கள் பெற்று மனிதனின் மறு உருவமாக ஜொலிக்கும் என்பதே ஆராய்ச்சிகளின் கருத்து.

நெருப்புடா

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 190 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது, ஹவாய் தீவுகளில் உள்ள  கிலயூயே எரிமலை. இந்த எரிமலையில் ஹலெமா என்ற எரிமலைக் குழம்பு ஏரி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த எரிமலை, லாவா குழம்பைக் கக்கியபடி, பரவுவதால்தான் இதற்கு கிலயூயே என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

ரோபோ 'எமிலி'

ரிமோட் மூலம் வேகத்தையும், திசையை கட்டுப்படுத்தக்கூடிய எமிலி என்ற ரோபாட்டிக் லைஃப்கார்டை அமெரிக்க கப்பல் படை உருவாக்கியுள்ளது. நீச்சல் தெரியாதவர்களை காக்க உருவாக்கப்பட்ட எமிலி வேகமாக நீந்தும். 4 அடி நீளமும், 11 கிலோ எடையும் கொண்டது. மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்துமாம்.

வயர்லெஸ் சார்ஜர்

வயர்லெஸ் சார்ஜ் செய்ய புதுவகையான ஸ்டிக்கர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் பேட் மற்றும் ஸ்டிக்கரில் உள்ள இரு மெட்டல் எலக்ரோட்ஸ் பட்டன்களை போனின் யுஎஸ்பி போர்ட்டில் பொருத்தினால் சார்ஜ் ஏறிவிடும். இந்த ஸ்டிக்கர் சார்ஜர் மின்கடத்தல் முறையில் செயல்படுகிறது. இதன் விலை ரூ.6044.

100 விதமான ஒலிகளை எழுப்பும் திறன் கொண்ட விலங்கு எது தெரியுமா?

100 விதமான ஒலிகளை எழுப்பும் விலங்கினம் எது தெரியுமா.. அது பூனைதான்.நாய்கள் கிட்டத்தட்ட பத்து விதமான ஒலிகளை மட்டுமே வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை ஆகும்.ஆனால் பூனைகள் கிட்டத்தட்ட 100 விதமான ஒலியை (மியோவ்) அவைகளின் வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை. நாய்களை விட பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானதாகும். அவ்வளவு ஏன்...! மனிதர்களை விடவும் பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானது. பூனைகள் அதன் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்நாளை தூங்குவதற்காக மட்டுமே செலவு செய்கின்றன. .நில நடுக்கம் உருவாகுவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் முன்பே நிலநடுக்கம் உருவாகுவதை பூனைகள் உணர்ந்து விடும். பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்த ஹிட்லர் அஞ்சி நடுங்கிய ஒரே விலங்கினம் பூனைதான்.

சூப்பர் சோனிக்

‘பேபி பூம்‘ என பெயரிடப்பட்டுள்ள, மணிக்கு 2,335 கி.மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும், அதிவேக சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தை  அமெரிக்காவின் விர்ஜின் தொழில் அதிபர் தயாரிக்கிறார். இந்த விமானம் 60 ஆயிரம் அடி உயரம் பறக்க கூடியது. இதில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3 மணி 15 நிமிடத்தில் பயணம் செய்ய முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago