முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வலை போட்டு மீன் பிடித்த தேசிய கவி யார் தெரியுமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவர். நம் நாட்டின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலை எழுதிய ஒரு அற்புத கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல இசைப் பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால்தடம் பதித்த அற்புத மாமனிதர் ஆவார். கவிதைக்காக நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூருக்கு சிறு வலைபோட்டு லாவகமாக மீன் பிடிக்கும் ஆற்றல் உண்டு. வடிகட்டி மாதிரி உள்ள சின்னஞ் சிறிய வலையில் பரபரப்பான கொல்கத்தா நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைதியாக ஓடும் ‘விளிண்டா’ ஆற்றங்கரையில் அவர் அடிக்கடி மீன் பிடிக்கச்செல்வது வழக்கம்.   பிடித்த மீனை சிறிதுநேரம் உள்ளங்கையில் வைத்திருந்துவிட்டு பிறகு ஆற்றில் விடுவாராம்.

மிகவும் சிறியது

கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், நானிட் மைக்ரோ என்ற உலகின் மிகச்சிறிய அதாவது 1.8 அங்குல அளவே உயரம் உடைய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இதில், கால், மெசெஜ், வாய்ஸ் ரெக்கார்ட், கேமரா, புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஸ்மார்ட் வாட்சாகவும் பயன்படுத்த முடியும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் கோடிகளை குவிக்கும் இளைஞர்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த மோகித் சுரிவால். வயது வெறும் 17க்கும் கீழே. ஆனால் இவரது ஆண்டு வருவாய் கோடிக்கும் மேலே. அதுவும் ஒரு சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. இவர் செய்தது என்ன...இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இளசுகள் சும்மா கடலை வறுக்கும் நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டார் மோகித். உலகத்தின் அனைத்து பிராண்டுளின் கன்டென்டுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஹிட்டாக்கினார். ஒரு கட்டத்தில் அவரது வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் மனம் தளராமல் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ, யூடியூப் என கலக்கி வருகிறார். தற்போது அவரது காட்டில் பண மழை கொட்டி வருகிறது.

ஸ்மார்ட் போன்

பேட்டரி என்பது ஒரு ரப்பர் போன்றது. அதனால் எவ்வளவு இழுவை தாங்க முடியுமோ அவ்வளவு மட்டும் தான் தாங்கிக் கொள்ளும். அதன் பின் அறுந்து விடும்.  இதே போல தான் பேட்டரியும் தனக்கான சார்ஜ் ஆகும் நேரம் குறைத்து வடிவமைக்கும் போது அது வெடிக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

கொடிய உயிர் கொல்லியான எயிட்ஸ்க்கு எதிராக தகவமைத்து கொண்ட மனித உடல்

இன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய வைரசான கொரோனாவைப் போல சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் உலகையே அச்சுறுத்தியது. தற்போது போலவே மனித நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சலூன் கடைகளில் தனித்தனி ரேசர்களில் சவரம் செய்வது தொடங்கி, மருத்துவ மனைகளில் டிஸ்போசபிள் சிரிஞ்ச் எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசி என நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி தொற்றுக்கு  ஆளாகி எந்தவித மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் உடல் நலம் தேறியுள்ளார். இது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்களை பரிசோதித்த போதிலும் கூட அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தடமின்றி அடியோடு மறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது உலகில் இரண்டாவது சம்பவம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.  இது தொடர்பான மருத்து ஆய்வு கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எய்ட்ஸை வெற்றிகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது படிப்படியாக பிறருக்கும் தோன்றலாம். அதே போல எதிர்காலத்தில் கொரோனாவையும் இந்த மனித உடல் வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

குறைந்து வரும் மனித உடலின் வெப்பம் கடந்த 10 ஆண்டுகளில் 0.05F சரிவு

பொதுவாக ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று நாம் படித்திருப்போம். 1851 ஆண்டில் கார்ல் ரெய்னஹோல்டு என்பவர் தெர்மோமீட்டரை கண்டு பிடித்தார். அவர் 10 தடவை 25000 பேர்களிடம் ரீடிங் எடுத்து, சராசரியாக மனித உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று அறிவித்தார். இதையே அனைவரும் வேத வாக்காக எடுத்துக் கொண்டனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி மனித உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி குறைவாகவே காணப்படுவது தெரியவந்துள்ளது. பல்வேறு பதிவுகளில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் மேற்கொண்ட சோதனையில் கடந்த 100 ஆண்டுகளில் மனித உடலின் வெப்ப நிலை1.5 பாரன்ஹீட் குறைந்துள்ளது. இது போக கடந்த சில ஆண்டுகளில் இந்த குறைகின்ற வேகம் அதிகரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில் 0.05 பாரன்ஹீட் வெப்பம் குறைந்து வந்துள்ளது. வழக்கம் போல புவிவெப்பமயமாதல் என்ற பல்லவி பாடப்படுகின்ற போதிலும் இதற்கான சரியான அறிவியல் காரணம் இன்னும் தெரியவரவில்லை என்பதுதான் உண்மை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago