எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை வானொலியில் "சான்றோர் சிந்தனை" எனும் நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மிக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்.
இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் உய்வு பெறுவதற்காக உயிரை வழங்குகிறான். வினைகளை நீக்கிடப் பிறவிப் பேற்றினை அருளுகிறான். தாயும், தந்தையும் இணையும்போது இறைவனுடைய திருவுள்ளப்படி கரு உருவாகிறது. அந்தக் கரு உயிருடன் கருப்பையில் பலத்த பாதுகாப்புடன் உடம்பினைப் பெற்று குழந்தையாகப் பிறந்து இந்த உலகிற்கு வருகிறது.
இதை மணிவாசகர் போற்றித் திரு அகவலில் சிறப்பாக விளக்குகிறார். அருவ நிலையில் தேவர்களாலும் காண முடியாத திருவடிகளை உயிர்கள் கண்டு வாழ்த்த எளிதாகும்படி சிவப்பரம்பொருள் உருவம் தாங்கி வருகிறார். இறைவனை வணங்கி மகிழப் பக்குவமாக வேண்டிய ஜீவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் அவரவர்கள் செய்தவினைகளுக்கு ஏற்ப யானை முதல் எறும்பு வரையுள்ள பல வடிவங்களில் பிறக்கின்றன. பிறகு மனிதப் பிறப்பு எடுக்கும்போது அந்தக் கருவானது கருப்பையில் உள்ள பல கிருமிகளின் தாக்குதலில் இருந்து மீண்டு பிழைத்து வளருகிறது.
ஒருமாதம் பூர்த்தியானதும் தனக்காக என ஒரு வடிவெடுக்கிறது. இரண்டு மாதம் நிறையும் பொழுது வலுப்பெறுகிறது. மூன்றாம் மாதத்தில் தாயின் கருவில் பெருகும் கொழுப்பு நீரில் புதையுண்டு போகாமல் உயிர் வாழ்கிறது. ஐந்தாவது மாதத்தில் கருக் கலைந்து விடாமல் பாதுகாப்பாக இருக்கிறது. ஆறாவது மாதத்தில் அந்தக் கருவுக்கு எல்லா அவயங்களும் முறையாக அமைகிறது. ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதத்தில் இயல்பாக ஏற்படும் பல துன்பங்களைக் கடந்து உயிருடன் இருக்கிறது.
பத்தாவது மாதத்தில் தகுதியுடன் கர்ப்பத்தில் வளர்ந்து, பிறக்கும்போது பிரசவ வேதனையில் தாயும் குழந்தையும் துன்பப்பட்டு குழந்தை பிறக்கிறது. கருப்பையில் வளரும் கருவுக்கு இறைவன் அதன் தொப்புள் கொடி மூலமாகத் தாயிடமிருந்து உணவு பெற்று வளரச் செய்கிறான். கருவிலுள்ள குழந்தை தன் இருகரம் கூப்பி இறைவனையே துதித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது மாதம் சூதக வாயு அந்தக் குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து இந்தப் பூவுலகத்தில் வந்து பிறக்குமாறு வெளியேற்றுகிறது. கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் "பிராணன் " என்ற வாயு சுவாசத்தை மேற்கொள்ளச் செய்கிறது. "அபானன்" என்ற வாயு அந்தக் குழந்தையின் வயிற்றிலிருந்து மலசலங்களை வெளியேற்றுகிறது. இதையே "காட்டு மலம்" என்பார்கள். உடனே அந்தக் குழந்தைக்குப் பசி ஏற்பட்டு "குவா ! குவா" என்று அழ ஆரம்பித்தவுடன் அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. பிறந்த குழந்தையின் அழுகை அதன் தாய்க்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நற்றமிழ் வல்ல நாவுக்கரசர் கருவறையில் இருந்தபோதே இறை உணர்வுடையவராகத் திகழ்ந்தார். கருவின் உருவமற்ற நிலையிலும் எண்ணிய எண்ணமெல்லாம் இறைவனுடைய திருவடிகளே என்கிறார். உருவமும் பருவமும் அடையும் முன்பே கடவுளையே எப்போதும் நீக்கமற நினைத்தாராம் உருவு கொண்டு இவ்வுலகில் தோன்றிய போதும் இறைவனுடைய புகழைப் பல காலம் பயின்று வந்தார். அதுமட்டுமல்ல இறைவனை மறவாமல் இருக்க புறக்கோலத்திலும் "சிவாய நம" என்று திரு நீற்றினை அணிந்து வந்தார். என்னுடைய பிறவி நீங்க இறைவா தங்களையே அடைக்கலமாக நினைத்து இருக்கும் எனக்கு சிவகதி அருள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.
மேலும் தாயின் கருவில் இருந்த காலத்தில் இருந்தே உன் திருவடியை என் மனம் சிந்தித்து வருகிறது. பிறவிக்கடலில் சிக்கித் தவிக்கும் எனக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை. என் மீது இரக்கம் கொண்டு அருள் பாலிக்க வேண்டும் இறைவா! என்று வேண்டுகிறார். "கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்தழிந்து எய்த் தொழிந்தேன்" என்கிறார்.
இந்த உடம்பை அருமையிலும் அருமையாக ஆக்கித் தந்து, இந்த உடம்புக்குள் எத்தனை எத்தனை வகையான நுண்ணிய கருவிகளையும் படைத்து, நம்மை வாழவைக்கும் இறைவனின் பெருங்கருணையை நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து, அருளமுதே! நன்னிதியே! ஞான நடத்தரசே! என்னுரிமை நாயகனே என்று இறைவனைப் போற்றி வணங்கி வந்தால் இறைவன் நமக்கு சிவகதி என்னும் பெரும் பேற்றினை அருள்வான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.