எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளேயே முழுமையாக நம்பி உள்ளனர். இந்நிலையில், பருவ மழை மாற்றங்களினால் ஏற்படும் தீவன தட்டுப்பாட்டோடு நோய் பரவலையும் வேதனையுடன் சந்தித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களினால் உற்பத்தி திறன் வெகுவாக குறைவதோடு சில சமயம் கால்நடைகளேயே இழக்கவும் நேரிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களில் கோமாரி நோயின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோமாரி நோய் கால்க்காணை வாய்க்காணை என்றும், கால்சப்பை வாய்சப்பை என்றும் வேறு சில பெயர்களால் அழைக்கபடுவதுண்டு. இந்நோய் “பிக்கார்னா வைரஸ்” என்னும் நச்சுயிரியால் உண்டாகிறது. இந்நோய்க் கிருமியில் 7 வகைகள் உள்ளன. அவற்றுள்; நம்நாட்டில் 4 வகைகளும், 60 க்கும் மேற்பட்ட உட்பிரிவு வகைகளும் உண்டு. ஒவ்வொன்றும் நோய் ஏற்படுத்தும் விதத்தில் வேறுபட்டவை. மேலும்,இந்நச்சுயிர் கிருமி மாறிவரும் தட்ப வெப்ப நிலையை தாங்கி அதிக நாட்கள் உயிருடன் வாழும் குணமுடையது.
நோய் பரவல் மற்றும் அறிகுறிகள் : மாடுகள், எருமைகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் போன்ற கால்நடைகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்நோய்க் கிருமி நோயுற்ற கால்நடைகளிலிருந்து மற்றொன்றிற்கு அதே இனத்திலிருந்தோ அல்லது வேறு இனத்திலிருந்தோ நேரடியாகவும் அல்லது இக்கிருமி கலந்த தண்ணீர், உணவு மற்றும் உபகரணங்கள் மூலமாகவும் அல்லது காற்றின் மூலமாகவும் பரவக்கூடியது.
நோய் கண்ட மாடுகள் குணமான பிறகு இக்கிருமிகளை ஒரு வருடத்திற்கு மேலாக தமக்குள் தக்கவைத்து கிருமிகளை வெளிப்படுத்தும். அதேபோல் ஆடுகள் ஆறு மாதத்திற்கும், பன்றிகள் ஒரு மாதத்திற்கும் கிருமிகளை தக்கவைத்து வெளிப்படுத்தும்.
இந்நோய் கண்ட மாடுகள் கீழ்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்: அதிக காய்ச்சலுடன் சோர்வுற்று, சரிவர தீவனம் எடுக்காமல் இருக்கும் உதடுகளின் உட்புறம்,ஈறுகள், மேல்தாடை, நாக்கு, கன்னங்களின் உட்புறம் ஆகிய இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு பின்பு உடைந்து புண்கள் உண்டாகும்.
வாயிலிருந்து சளி போன்ற நுரையுடன் கூடிய உமிழ்நீர் ஒழுகிக் கொண்டேயிருக்கும். அசை போடுவது போன்று வாயை அசைத்து ‘சப்’‘சப்’ என்ற சத்தம் எழுப்பும். கால்களில் வீக்கம் ஏற்பட்டு, சூடு அதிகமாகி, குளம்புகளுக்கிடையேயும்,குளம்பிற்கு மேலுள்ள தோலிலும் கொப்புளங்கள் தோன்றுகின்றன. பாதிக்கப்பட்ட கால்நடைகள் நொண்டும்.பின்பு கொப்புளங்கள் உடைந்து புண்கள் உண்டாகும். புண்களில் ஈக்கள் உட்கார்வதன் மூலம் புழுக்கள் வைக்கலாம்.
மாடுகளில் மடியிலும், காம்புகளிலும்கொப்புளங்கள் தோன்றும். இதனால் பால் குறைவதுடன் மடிவீக்கமும் ஏற்படும். இந்நோய் கண்ட கறவை மாடுகளிலிருந்து பாலினைக் குடிக்கும் கன்றுகள் தீவிர இதய தசை அழற்சியினால் இறந்துவிடும். நோயுற்ற பசுக்களில் சினை பிடிப்பது சிரமமாக இருக்கும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும்.
இந்நோய் மாடுகளில் அதிகம் உயிர்ச்சேதம் ஏற்படுத்தாவிட்டாலும், உற்பத்தி திறன் மற்றும் உழைக்கும் சக்தியைக் குறைத்து விடுவதால் அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும்.நோயுற்றகால்நடைகளில் நாளமில்லா சுரப்பிகளில் மாற்றம் ஏற்படுவதால் தோல் உலர்ந்து சொறசொறப்பாகவும், உரோமங்கள் உதிர்வும் காணப்படும்.
தடுப்பு முறைகள் : கோமாரி நோய் வராமல் தடுக்க கன்றுகளுக்கு 8 வார வயதில் முதல் தடுப்பூசியும், 12 வார வயதில் இரண்டாவது தடுப்பூசியும், 16 வார வயதில் மூன்றாவது தடுப்பூசியும் போட வேண்டும். பிறகு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். நோய் கிளர்ச்சி காணும் இடங்களில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என வருடத்திற்கு மூன்று முறைதடுப்பூசி போட வேண்டும். பொதுவாக மழைக்காலத்திற்கு முன்பும் கோடைக் காலத்திற்கு முன்பும் தடுப்பூசி போட வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான கால்நடைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும். நோய் கண்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போட கூடாது. முதிர்ந்த சினையுடனும், கன்று ஈனும் தறுவாயில் உள்ள கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடலாம். கால்நடைகள் பராமரிக்கும் கொட்டகைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நோய் கண்ட கால்நடைகள் பராமரிப்பு : நோயுற்ற கால்நடைகளை மற்ற ஆரோக்கியமான கால்நடைகளிலிருந்து பிரித்து சுத்தமான பகுதிகளில் வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வாய் மற்றும் கால் புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் அல்லது படிகார கரைசலைக் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். போரிக்ஆசிட் பவுடர் மற்றும் கிளிசரின் கலவையை வாய் புண்களில் தடவலாம். நாக்குப் புண் இருப்பதால் சரியாக சாப்பிட இயலாத கால்நடைகளுக்கு கம்பு அல்லது கேழ்வரகு கஞ்சியில் குளுக்கோஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.
கால் குளம்புகளில் உள்ள புண்களில் சில சமயம் ஈக்கள் மூலம் புழுக்கள் வைக்கலாம். புண்களில் டர்பென்டைன் ஆயில் இடுவதன் மூலம் புழுக்களை இறக்கச் செய்து வெளியே எடுத்து விடலாம் பிறகு புண்கள் ஆறுவதற்கு ஆன்டிசெப்டிக் பவுடரும்,ஈக்கள் உட்காராமல் தடுக்க வேப்பெண்ணையோ அல்லது ஆயின்மென்டோ தடவ வேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கோமாரி நோய் கண்ட மாடுகளின் பாலை கன்றுகளுக்கு ஊட்ட விடக்கூடாது. பாலைக் காய்ச்சிய பின்னரே கொடுக்க வேண்டும். நோயுற்ற கால்நடைகளை பராமரிக்கும் இடங்களில், இடத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்தை தெளிக்க வேண்டும். நோயுற்ற மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர்ந்த தீவனம் அளிக்கும் போது மீதமாகும் தீவனத்தை மற்ற மாடுகளுக்கு அளிக்க கூடாது. அவற்றினை எரித்து விட வேண்டும்.
நோயுற்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. நோய் கிளர்ச்சியுற்ற காலங்களில் கால்நடைகளை சந்தைகளில் வாங்குவதையோ, விற்பதையோ தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்புசி போடப்பட்டு வருகிறது. அனைத்து கால்நடைப் பண்ணையாளர்களும் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகவும்.
நோய் வந்தபின் கால்நடைகளின் உற்பத்தி குறைவு, மலட்டுத்தன்மை மற்றும் இறப்பு போன்றவற்றால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு காலத்தே தடுப்பூசி போடுவோம், நோய் வருமுன் காத்து வளமோடு வாழ்வோம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களைத் தொடர்புக் கொண்டு விவரங்கள் அறியலாம்.
தொடர்புக்கு - கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625.
தொகுப்பு - மரு.மு.வீரசெல்வம், மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சோ.யோN கஷ்பிரியா, மரு.மா.வெங்கடேசன், மரு.ம.சிவகுமார், மரு.ப.செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்0 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.